Just In
- 3 hrs ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- 3 hrs ago 7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
- 4 hrs ago இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- 5 hrs ago உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
விவசாயிகள் போராட்டத்துக்கு கருத்து சொல்லுங்க... பிரபல நடிகரின் காரை மறித்து ரணகளப்படுத்திய மனிதர்...
பிரபல நடிகர் அஜய் தேவ்கனின் காரை ஒருவர் மறித்து கடுமையான வார்த்தைகளால் பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனின் பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரை, ஒருவர் பொது சாலையில் வலுக்கட்டாயமாக நிறுத்தியுள்ளார். இந்த சம்பவம் நடைபெற்றபோது, மும்பையின் பிலிம் சிட்டியில் ஷூட்டிங்கிற்காக அஜய் தேவ்கன் சென்று கொண்டிருந்தார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தற்போது போராட்டம் நடத்தி வருவது நமக்கு தெரிந்த ஒரு விஷயம்தான்.
இந்த பிரச்னை தொடர்பாக அஜய் தேவ்கன் எதுவும் பேசவில்லை எனக்கூறி, அந்த நபர் இந்த காரியத்தை செய்ததாக கூறப்படுகிறது. அவரது பெயர் ராஜ்தீப் சிங் என்பது தெரியவந்துள்ளது. அஜய் தேவ்கனின் காரை நிறுத்தியவுடன், தனது செல்போனில் அவர் கேமராவை ஆன் செய்து கொண்டார். அதன்பின் விவசாயிகள் போராட்டம் பற்றி பேசுமாறு, அஜய் தேவ்கனை அவர் வற்புறுத்தினார்.
மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் சொகுசு காரின் நிறை, குறைகள்... விரிவாக விளக்கும் வீடியோ!
இந்த பிரச்னை தொடர்பாக உங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் என அவர் தெரிவித்தார். இதன் காரணமாக ராஜ்தீப் சிங்கை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். ஆனால் பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோவில் ராஜ்தீப் சிங் கூறியது பின்வருமாறு: இந்த மனிதர் பஞ்சாப்பிற்கு எதிராக இருக்கிறார். பஞ்சாப் அவருக்கு உணவு வழங்கியுள்ளது. அவரால் உணவை எப்படி ஜீரணிக்க முடிகிறது? நீங்கள் எப்படி பஞ்சாப்பிற்கு எதிராக இருக்க முடியும்? நீங்கள் வெட்கப்பட வேண்டும். என் மீது காரை ஏற்ற போகிறீர்களா? அவரால் ஏன் காரில் இருந்து இறங்கி வந்து பேச முடியவில்லை?
மேற்கண்டவாறுதான் ராஜ்தீப் சிங் வீடியோவில் பேசியுள்ளார். இவர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஓட்டுனர் ஆவார். ஆனால் மும்பையில் வேலை செய்து வருகிறார். அவர் 15 முதல் 20 நிமிடங்கள் வரை அஜய் தேவ்கனின் காரை மறித்து நிறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராஜ்தீப் சிங்கின் கோவத்திற்கான சரியான காரணம் என்னவென்று தெரியவில்லை.
ஆனால் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக அஜய் தேவ்கன் எந்தவிதமான கருத்து தெரிவிக்காத காரணத்தால், அவர் இந்த காரியத்தை செய்திருப்பது போல் தெரிகிறது. தற்போது சமூக வலை தளங்களில் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. அதன் கமெண்ட்களில் அஜய் தேவ்கனை பலர் விமர்சித்து வருகின்றனர்.
இந்த பிரச்னை தொடர்பாக அஜய் தேவ்கன் பேசிகிறாரோ இல்லையோ, அவர் விலை உயர்ந்த கார்களுக்கு மிகப்பெரிய ரசிகராக உள்ளார். அவரது கராஜில் உள்ள விலை உயர்ந்த கார்களே அதற்கு சாட்சி. அஜய் தேவ்கனிடம் சொந்தமாக உள்ள கார்களில், ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் மிகவும் முக்கியமானது. இது இந்தியாவில் கிடைக்கும் விலை உயர்ந்த சொகுசு எஸ்யூவி கார்களில் ஒன்றாகும்.
இதுதவிர பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரும் அவரிடம் உள்ளது. மேற்கண்ட சம்பவம் நடைபெற்றபோது, அவர் இந்த காரைதான் பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மஸராட்டி க்வாட்ரோபோர்ட்டே, பிஎம்டபிள்யூ இஸட்4 ஆகிய கார்களும் அஜய் தேவ்கனிடம் உள்ளது. அத்துடன் கஸ்டமைஸ் செய்யப்பட்ட வேனிட்டி வேனையும் அவர் வைத்துள்ளார்.
பெரும்பாலும் தனது கார்களை தானே ஓட்டுவதை அஜய் தேவ்கன் விரும்ப கூடியவர். ஆனால் மேற்கண்ட சம்பவம் நடைபெற்றபோது அவர் ஓட்டுனருடன் இருந்தார். அஜய் தேவ்கன் மட்டுமல்லாது, பாலிவுட் திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகள், இயக்குனர் பலரும் மிகவும் விலை உயர்ந்த கார்கள் பலவற்றை சொந்தமாக வைத்துள்ளனர்.
-
ஜிஎஸ்டி கட்டவேணாம்! ரூ1.26 லட்சம் மிச்சம் பண்ண இந்த காரை இப்படியும் வாங்கலாமா? யாருக்குமே இது தெரியாது!
-
கார் கப்பல் மாதிரி இருக்காம்! இவ்ளோ மைலேஜ் வேற தருதா! மொத்த கூட்டமும் மாருதி சுஸுகி ஷோரூம்லதான் இருக்கு!
-
செஞ்சது என்னமோ சின்ன உதவிதான்.. ஆனா அந்த சமையல்கார அம்மா குடும்பத்துக்கு அது ரொம்ப பெருசு! செம ஸ்டோரி!!