Just In
- 38 min ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- 39 min ago 7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
- 1 hr ago இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- 2 hrs ago உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
Don't Miss!
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
போலீஸ் காரில் நடந்த அதிர்ச்சி சம்பவம் இதுதான்... சமூக வலை தளங்களில் வைரலாகும் வீடியோ...
போலீஸ் காரில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரல் ஆனதால், இது தொடர்பான விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பினரையும் டிக் டாக் மோகம் ஆட்கொண்டுள்ளது. ஆண்கள் மற்றும் பெண்கள் என பாலின வேறுபாடுகளையும் கடந்து அனைவரின் கவனத்தையும் டிக் டாக் ஈர்த்துள்ளது. இந்த சூழலில் தற்போது வைரலாக பரவி வரும் டிக் டாக் வீடியோ ஒன்று, இந்தியா முழுக்க கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவில் சட்டை அணியாமல் இருக்கும் இளைஞர் ஒருவர் மாருதி சுஸுகி எர்டிகா காரை மெதுவான வேகத்தில் ஓட்டி வருகிறார். திடீரென காரை விட்டு இறங்கிய அந்த இளைஞர், மேற்கூரையின் மீது ஏறுகிறார். இதன்பின் மேற்கூரையில் சில புஷ்அப்களை எடுத்துவிட்டு மீண்டும் தரையில் குதிக்கிறார். அதன்பின் மீண்டும் காருக்குள் ஏற முயல்கிறார். அத்துடன் அந்த வீடியோ நிறைவடைந்து விட்டது.
சம்பந்தப்பட்ட இளைஞர் மேற்கூரையில் புஷ்அப் செய்தபோது, காருக்குள் யாரும் இல்லை. அது தானாகவே இயங்கி கொண்டிருந்தது. இதற்கே அதிர்ச்சியாக வேண்டாம். வீடியோவில் காணக்கூடிய காரில், டெல்லி போலீஸ் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் உள்ள இளைஞரை போலீசார் இன்னும் பிடிக்கவில்லை. அவர் குறித்த விசாரணை நடந்து வருகிறது.
ரிஜிஸ்ட்ரேஷன் தகவல்களை வைத்து பார்க்கையில், இந்த கார் ஜே.பி.ஷர்மா என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது. ஜே.பி.ஷர்மா டெல்லி போலீசில் பணியாற்றுகிறாரா? அல்லது இது டெல்லி போலீசார் பயன்படுத்தும் அதிகாரப்பூர்வ காரா? என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இது தொடர்பாக சமூக வலை தளங்கள் மூலம் டெல்லி போலீசாருக்கு புகார்கள் பறந்து கொண்டுள்ளன.
இதனை விசாரிப்பதாக டெல்லி போலீசாரும் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். டெல்லி போலீசார் ஏராளமான மாருதி சுஸுகி எர்டிகா கார்களை அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இந்த கார் அவர்களின் அதிகாரப்பூர்வ காரா? அல்லது இந்த காரின் உரிமையாளர் டெல்லி போலீசின் ஸ்டிக்கரை முறைகேடாக பயன்படுத்தியுள்ளாரா? என்பதும் இன்னும் உறுதியாக தெரியவில்லை.
அதே சமயம் இந்த வீடியோவில் காணக்கூடிய காரின் மேற்கூரையில் போலீசாரின் அதிகாரப்பூர்வ கார்களை போன்று, ஃப்ளாஷர்கள் மற்றும் சைலென்சர்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் இந்த வீடியோவை அப்லோட் செய்த நபரின் டிக்டாக் ப்ரொபைல் மூலமாக விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இந்த வீடியோவை உருவாக்கிய நபர்தான் அப்லோட் செய்தாரா? அல்லது வேறு எங்கேயாவது கிடைத்த வீடியோவை வெறுமனே அப்லோட் செய்தாரா? என்பதும் இன்னும் தெரியவில்லை. விசாரணை முடிவில்தான் உறுதியான தகவல்கள் தெரியவரும். இதனிடையே தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வரும் இந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
காரின் மேற்கூரையில் இந்த இளைஞர் செய்த ஸ்டண்ட் மிகவும் அபாயகரமானது. அவர் ஸ்டண்ட் செய்ய காரை விட்டு வெளியேறியபோது, காரை கட்டுப்படுத்த ஒருவர் கூட இல்லை. அது தானாகவே இயங்கியது. அனேகமாக இது டீசல் இன்ஜின் எர்டிகா காராக இருக்கலாம் என கூறப்படுகிறது. பொதுவாக டீசல் இன்ஜின்களில் லோ-எண்ட் டார்க் அதிகமாக இருக்கும்.
லோயர் கியர்களில் கிளட்ச்சை முழுவதுமாக ரிலீஸ் செய்த பிறகும், இன்ஜின் ஸ்டாப் ஆகாமல் இருப்பதை இது உறுதி செய்கிறது. இதன் அடிப்படையில்தான் உள்ளே யாரும் இல்லாமலேயே கார் இயங்கியிருக்கும் என்று தெரிகிறது. ஆனால் இது மிகவும் அபாயகரமான ஸ்டண்ட். இது போன்ற ஸ்டண்ட்களை நீங்கள் ஒருபோதும் முயற்சி செய்து பார்க்க வேண்டாம்.
-
2019ல் வேணும்னே கடலில் மூழ்கடிக்கப்பட்ட விமானம்.. இப்ப அதோட நிலைமை என்ன? ஏன் அதை கடலில் தள்ளி விட்டாங்க?
-
பணங்காரங்க கண்ணு முழுக்க இந்த கார் மேல தான்! பிஒய்டி சீல் கார் எப்படி இருக்குது?
-
நானோ காரை நமக்கு தெரியும்! ஆனா இது அது கிடையாது... டாடா உருவாக்கிய இந்த கார் கடைசி வர வெளியே வராமல் போய்டுச்சே