Just In
- 15 min ago இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- 1 hr ago காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- 3 hrs ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 4 hrs ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
Don't Miss!
- News ஆரத்திக்கு பணம் கொடுத்த அண்ணாமலை? தீயாகப் பரவி வரும் வீடியோ.. விசாரணைக்கு கோவை ஆட்சியர் உத்தரவு!
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Sports பொய்யான வீடியோவை பரப்பும் ரசிகர்கள்.. தோனி - பதிரானா இடையே என்ன நடந்தது? உண்மை இதுதான்
- Movies ’ஹாட் ஸ்பாட்’ விமர்சனம்.. மாப்பிள்ளைக்கு தாலி.. அண்ணன் தங்கை திருமணம்.. இன்னும் இருக்கு!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
இந்தியாலதான் இந்த கூத்து நடக்கும்! ஜேசிபிய இதுக்கும் யூஸ் பண்ணலாம்னு கண்டுபிடிச்சவங்களுக்கே தெரியாது
ஜேசிபி இயந்திரத்தை பயன்படுத்தி முதியவர் ஒருவர் செய்த வினோதமான காரியத்தின் காணொளி சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஜேசிபி இயந்திரம் மூலம் என்னென்ன வேலைகளை எல்லாம் செய்ய முடியும்? என்பது நம் அனைவருக்குமே தெரியும். கட்டுமான பணிகளில்தான் ஜேசிபி இயந்திரங்கள் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கட்டிடங்களை இடிக்கவும், பள்ளம் தோண்டவும் என ஜேசிபி இயந்திரத்தின் பயன்பாடுகளை அடுக்கி கொண்டே போகலாம்.
ஆனால் ஜேசிபி இயந்திரத்தை பயன்படுத்தி வேறொன்றையும் செய்ய முடியும் என்பதை, முதியவர் ஒருவர் காட்டியிருக்கிறார். ஜேசிபி இயந்திரம் மூலம் இதை செய்யலாமா? என நீங்கள் கனவில் கூட நினைத்து பார்த்திருக்காத ஒரு விஷயம் அது. ஆம், ஜேசிபி இயந்திரத்தை பயன்படுத்தி அந்த முதியவர் முதுகு சொறிந்துள்ளார்.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!
தற்போது அந்த காணொளிதான் இணையத்தை கலக்கி கொண்டுள்ளது. கட்டுமான பணிகள் நடைபெறும் இடம் போல தோற்றமளிக்கும் ஒரு இடத்தில், முதியவர் ஒருவர் நின்று கொண்டிருப்பதை இந்த காணொளி நமக்கு காட்டுகிறது. அவருக்கு பக்கத்திலேயே ஜேசிபி இயந்திரம் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அந்த சமயத்தில், காணொளியில் தோன்றும் முதியவர் துண்டு மூலம் தனது முதுகை துடைக்கிறார்.
ஆனால் அவருக்கு அதில் திருப்தி ஏற்படவில்லை. இதனால் ஜேசிபி இயந்திரத்தை நோக்கி அவர் நகர்கிறார். பின்னர் ஜேசிபி இயந்திரத்தை இயக்கும் நபரிடம் உதவி கேட்கிறார். உடனே ஜேசிபி ஆபரேட்டரும், அதன் பக்கெட் (Bucket) மூலமாக, அந்த முதியவரின் முதுகை சொறிந்து விடுகிறார். இரண்டு பேரும் வேடிக்கையாக சிரித்து கொண்டே இதனை செய்கின்றனர்.
அப்துல் நாசர் என்பவரின் முகநூல் பக்கத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான இந்த காணொளி, தற்போது சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த காணொளியை பார்க்கும் பலரும் 2 விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலர் இது வேடிக்கையாக இருப்பதாக கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
அதே சமயம் இன்னும் சிலரோ, இந்த ஸ்டண்ட் மிகவும் அபாயகரமானது மற்றும் பொறுப்பற்ற செயல் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். பொதுவாக கார் மற்றும் டூவீலர் போன்ற வாகனங்களை பயன்படுத்தி, மிகவும் அபாயகரமான ஸ்டண்ட்கள் பலவற்றை ஒரு சிலர் செய்கின்றனர். இந்த வகையில் ஜேசிபியை பயன்படுத்தி இந்த ஸ்டண்ட் தற்போது செய்யப்பட்டுள்ளது.
இது பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும், பொறுப்பற்ற செயல் என்றுதான் பலரும் எச்சரிக்கை செய்து வருகின்றனர். இந்தியாவில் மட்டுமே இதுபோன்ற வினோதங்கள் நடக்கும் என்றும், ஜேசிபியை இதுபோன்று பயன்படுத்தலாம் என்று, அமெரிக்கர்களுக்கும், ஜப்பானியர்களுக்கும் தெரியாது என்றும் ஒரு சிலர் வேடிக்கையாக கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
இந்த காணொளி கேரள மாநிலத்தில் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ஜேசிபி இயந்திரத்தை இதுபோன்று வித்தியாசமாக பயன்படுத்துவது இது முதல் முறை கிடையாது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பெண்கள் சிலர் லாரியின் பின் பகுதியில் இருந்து இறங்குவதற்கு ஜேசிபி இயந்திரத்தை பயன்படுத்தினர்.
அதாவது உயரம் அதிகமாக இருந்ததால், லாரியில் இருந்து பெண்களால் கீழே இறங்க முடியவில்லை. எனவே ஜேசிபி இயந்திரத்தின் பக்கெட்டில் அவர்கள் ஏறி நின்று கொண்டனர். அவர்களை ஜேசிபி இயந்திரத்தை இயக்கும் நபர் பத்திரமாக கீழே இறக்கி விட்டார். இந்த காணொளியும், அந்த சமயத்தில் சமூக வலை தளங்களில் வேகமாக பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூ.70,000க்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்.. லூனா முதல் ஆப்டிமா வரை!
-
6ம் மாசத்துக்கு அப்புறம் எப்பே வேணும்னாலும் இந்த காரை இந்தியாவில் எதிர்பார்க்கலாம்! சிட்ரோன் பசால்டு வெளியீடு!
-
இந்த விமான நிலையம் மும்பை நகரத்தை விட பெருசு... எங்கு அமைந்துள்ளது? அதன் அளவு என்ன?