Just In
- 1 hr ago காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- 3 hrs ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 3 hrs ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 4 hrs ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
Don't Miss!
- News வெடித்து சிதறிய பட்டாசு.. சிக்கலில் சிக்கிய அமைச்சர் கேஎன் நேரு மகன் அருண் நேரு.. பாய்ந்தது வழக்கு
- Technology ரூட்டு எடுத்த BSNL.. ரூ.699 போதும்.. 5 மாதங்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. டேட்டா!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Movies விஜய் அட்டாக் பண்ணி அஜித் பண்ண சொன்ன பாட்டுதான் அது.. இசையமைப்பாளர் பரத்வாஜ் ஓபன் பேட்டி!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமல் சென்ற கார் ஓட்டுனர்!! வழக்குமேல் வழக்கு போட்டு தூக்கிய போலீஸார்!
தற்போதைய காலக்கட்டத்தில் இணையத்தில் வைரலாகும் வீடியோக்களினால் தான் பெரும்பாலானோர் போலீஸாரிடம் சிக்குகின்றனர். அந்த அளவிற்கு இணையம் நமது வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு விஷயமாக மாறியுள்ளது.
இதை ஏன் நான் இப்போது கூறுகிறேன் என்றால், ஆம்புலன்ஸை வழி மறுத்தவாறு ஒருவர் தனது எர்டிகா காரை ஓட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ வைரலானதை தொடர்ந்து எர்டிகா கார் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் டக்ஷினா மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை எண்-66 இல் கடந்த ஜூலை 19ஆம் தேதி மாலை நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஒரு அடி கூட நகர முடியாத கடுமையான போக்குவரத்து நெரிசலின்போதும் ஆம்புலன்ஸிற்கு வழிவிட முயற்சிக்க வேண்டும் என்பது மனிதநேயம் உள்ள அனைவரும் பின்பற்றும் விஷயமாகும்.
ஏனெனில் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அனைவரும் ஏதேனும் ஒரு விஷயத்திற்காகவே சென்று கொண்டிருப்பர். ஆனால் ஆம்புலன்ஸ் ஒருவரது உயிரை காப்பாற்ற இயங்கி கொண்டிருக்கும். இருப்பினும் ஊருக்கு நான்கு பேர் மனிதநேயமற்று இருக்க தானே செய்வார்கள்.
அத்தகைய ஒருவரே தற்போது மங்களூர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நெடுஞ்சாலையில் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்த ஆம்புலன்ஸை வழிமறிப்பது போல் ஓட்டியது அனைத்தையும் ஆம்புலன்ஸில் இருந்தவர்கள் வீடியோவாக படம் பிடித்துள்ளனர்.
அதனை சமூக வலைத்தளங்களில் பரப்ப விட்டு தற்போது அந்த எர்டிகா கார் ஓட்டுனருக்கு தண்டனையையும் வாங்கி கொடுத்துள்ளனர். கனாச்சுர் மருத்துவமனை செல்வதற்காக அந்த ஆம்புலன்ஸ் தேசிய நெடுஞ்சாலை 66-இல் சென்று கொண்டிருந்தது.
மாருதி சுஸுகி எர்டிகா காரை ஓட்டி வந்த 31 வயதான ஓட்டுனர் சரண் என்பவர் கும்பளா பைபாஸ் அருகே கைது செய்யப்பட்டுள்ளதாக மங்களூர் நகர தெற்கு போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். ஐபிசியின் பிரிவு 279 மற்றும் 1988 மோட்டார் வாகன சட்டம் பிரிவு 194(இ) ஆகியவற்றின் கீழ் பொது சாலையில் ஆக்ரோஷமாக வாகன ஓட்டியதற்காக இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்னும் சொல்லப்போனால் இதன் பிறகே இவர் இது மட்டுமில்லாமல் வழியில் ஆம்புலன்ஸை வழி மறித்தவாறும் ஓட்டி வந்துள்ளார் என்பதை போலீஸார் கண்டறிந்துள்ளனர். இதனால் சரணின் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அவசரகால வாகனத்தின் செயல்பாட்டிற்கு இடையூறு விதித்ததற்காக மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து மங்களூர் நகர போலீஸ் கமிஷ்னர் என் சாஷி குமார் கூறுகையில், கைது செய்யப்பட்டுள்ளவர் ஆல்கஹால் அல்லது வேறு ஏதேனும் போதைப்பொருளால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என்றார்.
மேலும், பொது மக்களிடம், அவசரகால வாகனங்களை சீராக செல்ல அனுமதிக்கவும் என வேண்டுகோள் ஒன்றையும் போலீஸ் கமிஷ்னர் விடுத்துள்ளார். இந்த வீடியோவை இணையத்தில் பார்த்த நெட்டிசன்கள், கார் ஓட்டுனரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் அல்லது அவருக்கு பெரிய தண்டனை வழங்க வேண்டும் என தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
-
6ம் மாசத்துக்கு அப்புறம் எப்பே வேணும்னாலும் இந்த காரை இந்தியாவில் எதிர்பார்க்கலாம்! சிட்ரோன் பசால்டு வெளியீடு!
-
ரோட்டோர ஒர்க் ஷாப்பில் 8 கோடி ரூபாய் ரோல்ஸ் ராய்ஸ் கார்! வாங்கறது பெருசு இல்ல! மெயின்டெயின் பண்றதுதான் பெருசு!
-
இந்த விமான நிலையம் மும்பை நகரத்தை விட பெருசு... எங்கு அமைந்துள்ளது? அதன் அளவு என்ன?