Just In
- 39 min ago டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- 3 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 4 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 5 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
Don't Miss!
- Lifestyle ஜப்பான் பெண்கள் நீண்ட காலம் இளமையாகவும், அழகாகவும் இருக்க இந்த 4 ரகசிய உணவுகள்தான் காரணமாம்...!
- News ‛‛ஜெய் ஸ்ரீராம்’’ எழுதினாலே பாஸ் மார்க்.. ஹேப்பியான மாணவர்கள்.. உபியில் ஆசிரியர் செய்ததை பாருங்க
- Sports 4 பந்துகளில் 4 சிக்ஸ்.. டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த பட்டிதர்.. 19 பந்துகளில் மிரட்டல் அரைசதம்!
- Movies Pa Vijay: ஒரேயொரு சூரியன் மாதிரி.. ஒரேயொரு அப்படிபோடு பாடல்.. பா. விஜய் உற்சாகம்!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
3 ஆக்சிஜன் ஜெனரேட்டர்களை தானம் செய்யும் மாருதி சுசுகி... எந்த மாநிலத்திற்கு தெரியுமா?...
மாருதி சுசுகி நிறுவனம் 3 ஆக்சிஜன் ஜெனரேட்டர்களை குறிப்பிட்ட மாநிலத்தின் மருத்துவமனைகளுக்கு தானம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.
இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளர்களில் ஒருவரான மாருதி சுசுகி, ஆக்சிஜன் பிஎஸ்ஏ ஜெனரேட்டர் உற்பத்தியாளர்களுடன் இணைந்து மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகளை கட்டமைத்துக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றது.
முழுக்க முழுக்க இலாப நோக்கமற்ற முறையில் இப்பணியில் மாருதி சுசுகி நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. கோவிட்-19 இரண்டாம் அலை பரவலில் இந்தியா, பெரும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டைச் சந்தித்து வருகின்றது. உரிய நேரத்தில் ஆக்சிஜன் கிடைக்காத காரணத்தால் பல உயிர்கள் இறந்திருக்கின்றன.
இந்த நிலையிலேயே அரசுகளுக்குக் கை கொடுக்கும் விதமாக மாருதி சுசுகி நிறுவனம் ஆக்சிஜன் பிஎஸ்ஏ ஜெனரேட்டர்களை உற்பத்தி செய்யும் பணியில் களமிறங்கியது. இந்தியாவில், மிக குறைந்தளவிலேயே ஆக்சிஜன் பிஎஸ்ஏ ஜெனரேட்டர்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த உண்மை நிலையைக் கண்டறிந்த மாருதி சுசுகி, உடனடியாக களத்தில் இறங்கியது. தொடர்ந்து, ஏற்கனவே இத்துறையில் கொடிக்கட்டி பறந்து வரும் ஜேபிஎம்எல், எஸ்கேஎச் மெட்டல் மற்றும் மதர்சன் உள்ளிட்ட பிஎஸ்ஏ உற்பத்தியாளர்களுடன் இணைந்து ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை கட்டமைக்கும் பணியில் ஈடுபடத் தொடங்கியது.
இதன் விளைவாக தற்போது மூன்று புதிய ஆக்சிஜன் ஜெனரேட்டர்களை அது உருவாக்கியிருக்கின்றது. அனைத்தும் ஹர்யானா மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட இருக்கின்றன. இந்த ஆக்சிஜன் ஜெனரேட்டர்களையே மாநிலத்தின் முதலமைச்சர் மனோகர் லால் கத்தர், பயன்பாட்டிற்கு திறந்து வைக்க இருக்கின்றார்.
ஆக்சிஜன் பிஎஸ்ஏ ஜெனரேட்டர்களை உருவாக்குவதோடு நிறுத்திக் கொள்ளலாம் அவற்றைக் கண்கானிப்பதற்காக தனி குழு ஒன்றையும் மாருதி சுசுகி தயார் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த குழு சில மாதங்கள் வரை அனைத்து மருத்துவமனைகளிலும் இருக்கும் ஆக்சிஜன் ஜெனரேட்டர்களைக் கண்கானிக்கும்.
மாருதி சுசுகி மருத்துவமனை
மாருதி சுசுகி நிறுவனம் பன்முக மருத்துவம் வசதிக் கொண்ட மருத்துவமனையை குஜராத்தின் அகமதபாத் மாவட்டத்தில் உள்ள சீதாபூரில திறந்து வைத்திருக்கின்றது. 126 கோடி முதலீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த மருத்துவமனை தற்போது கோவிட் சிறப்பு மருத்துவமனையாக செயல்படத் தொடங்கியிருக்கின்றது.
சுமார் 50 படுக்கைகள் தயார் செய்யப்பட்டிருப்பதாக மாருதி கூறுகின்றது. இதனை இன்னும் பல மடங்கு உயர்த்தும் முயற்சியிலும் நிறுவனம் ஈடுபடத் தொடங்கியிருக்கின்றது. இந்த மருத்துவமனையில் அவசர கால சிகிச்சை, தாய்-சேய் மருத்துவம், இருதய பராமரிப்பு, கண் பராமரிப்பு, ஈஎன்டி, தீக்காயங்களுக்கான பிரிவு என பன்முக சேவை வழங்கப்பட இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.
-
7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
-
குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
-
பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!