ஹெல்மெட் அணிந்தபடியே காரில் வலம் வரும் இளைஞர்... காரணம் தெரிந்தால் கண்டிப்பா ஷாக் ஆயிடுவீங்க...

இளைஞர் ஒருவர் ஹெல்மெட் அணிந்தபடியே காரில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இதற்கான காரணம் என்னவென்று தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைய கூடும்.

ஹெல்மெட் அணிந்தபடியே காரில் வலம் வரும் இளைஞர்... காரணம் தெரிந்தால் கண்டிப்பா ஷாக் ஆயிடுவீங்க...

இந்தியாவில் சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதற்கு, வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதே முக்கிய காரணமாக உள்ளது. எனவே வாகன ஓட்டிகள் அனைவரையும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வைக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

ஹெல்மெட் அணிந்தபடியே காரில் வலம் வரும் இளைஞர்... காரணம் தெரிந்தால் கண்டிப்பா ஷாக் ஆயிடுவீங்க...

இதன் ஒரு பகுதியாக போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் தற்போது பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. இந்திய வரலாற்றில் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத தொகைகள் இதற்கு முன்பு இவ்வளவு கடுமையாக உயர்த்தப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல்தான் அபராத தொகைகள் உயர்த்தப்பட்டுள்ளன.

ஹெல்மெட் அணிந்தபடியே காரில் வலம் வரும் இளைஞர்... காரணம் தெரிந்தால் கண்டிப்பா ஷாக் ஆயிடுவீங்க...

அபராதம் செலுத்த பயந்து கொண்டு இனி வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைபிடிப்பார்கள் என மத்திய அரசு நம்புகிறது. புதிய விதிமுறைகள் அனைத்தையும் மிக தீவிரமாக அமல்படுத்தும்படி போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை களையெடுக்க அவர்களும் முழு வீச்சில் களமிறங்கியுள்ளனர்.

ஹெல்மெட் அணிந்தபடியே காரில் வலம் வரும் இளைஞர்... காரணம் தெரிந்தால் கண்டிப்பா ஷாக் ஆயிடுவீங்க...

இந்த சூழலில் மாருதி சுஸுகி எஸ்-க்ராஸ் காரில் வந்தவருக்கு ஹெல்மெட் அணியவில்லை எனக்கூறி போலீசார் தற்போது அபராதம் விதித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அலிகாரை சேர்ந்த பியூஷ் வர்ஷ்னே என்பவருக்குதான் இப்படி ஒரு வினோத காரணத்திற்காக போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.

ஹெல்மெட் அணிந்தபடியே காரில் வலம் வரும் இளைஞர்... காரணம் தெரிந்தால் கண்டிப்பா ஷாக் ஆயிடுவீங்க...

இ-சலான் முறையில் பியூஷ் வர்ஷ்னேவிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி பியூஷ் வர்ஷ்னே சலானை பெற்றுள்ளார். அதாவது புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்னதாகவே அவருக்கு இ-சலான் வழங்கப்பட்டுள்ளது. எனவே பழைய மோட்டார் வாகன சட்ட விதிமுறைகளின்படி அவருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஹெல்மெட் அணிந்தபடியே காரில் வலம் வரும் இளைஞர்... காரணம் தெரிந்தால் கண்டிப்பா ஷாக் ஆயிடுவீங்க...

இந்த சம்பவத்திற்கு பிறகு காரில் செல்லும்போதெல்லாம் ஹெல்மெட் அணிந்தபடியேதான் பியூஷ் வர்ஷ்னே பயணம் செய்து கொண்டிருக்கிறார். போக்குவரத்து போலீசாருக்கு எதிரான ஒரு போராட்டமாக இதனை பியூஷ் வர்ஷ்னே முன்னெடுத்திருப்பதுதான் தற்போது சமூக வலை தளங்கள் முழுக்க பேசுபொருளாக மாறியுள்ளது.

ஹெல்மெட் அணிந்தபடியே காரில் வலம் வரும் இளைஞர்... காரணம் தெரிந்தால் கண்டிப்பா ஷாக் ஆயிடுவீங்க...

மீண்டும் அபராதம் விதித்து விடுவார்களோ? என்ற அச்சம் காரணமாகவே, காரில் பயணிக்கும் போதெல்லாம் ஹெல்மெட் அணிந்து வருவதாக பியூஷ் வர்ஷ்னே தெரிவித்துள்ளார். பியூஷ் வர்ஷ்னேவின் வித்தியாசமான போராட்டம், இணையத்தில் வைரல் ஆனதால் தற்போது இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்த தொடங்கியுள்ளனர்.

ஹெல்மெட் அணிந்தபடியே காரில் வலம் வரும் இளைஞர்... காரணம் தெரிந்தால் கண்டிப்பா ஷாக் ஆயிடுவீங்க...

தவறான காரணத்திற்காக பியூஷ் வர்ஷ்னேவிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். தேவைப்பட்டால் அபராதத்தை ரத்து செய்வோம் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இ-சலானை வினியோகிக்கும் ஆபரேட்டர், அதற்கான காரணத்தை தவறாக குறிப்பிட்டு விடுவதால் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஹெல்மெட் அணிந்தபடியே காரில் வலம் வரும் இளைஞர்... காரணம் தெரிந்தால் கண்டிப்பா ஷாக் ஆயிடுவீங்க...

காரில் பயணம் செய்பவர்களுக்கு ஹெல்மெட் அணியவில்லை எனக்கூறி போலீசார் அபராதம் விதிப்பது இது முதல் முறையல்ல என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பும் கூட இதுபோன்ற சம்பவங்கள் பல முறை நடைபெற்றுள்ளன. இ-சலானில்தான் தவறு நடக்கிறதா? என்றால், கையால் எழுதி கொடுக்கப்படும் ரசீதுகளிலும் கூட போலீசார் சில சமயங்களில் காரணத்தை தவறாக குறிப்பிட்டு விடுகின்றனர்.

மோட்டார்சைக்கிளில் வந்த ஒருவருக்கு சீட் பெல்ட் அணியவில்லை என்ற காரணத்திற்காக போலீசார் கடந்த ஆண்டு அபராதம் விதித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். இச்சம்பவம் கோவாவில் நடைபெற்றது. ஸ்பாட்டிலேயே வழங்கப்பட்ட அபராத ரசீதில்தான் போலீசார் இவ்வாறு தவறான காரணத்தை குறிப்பிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Maruti Suzuki S-Cross Driver Fined For ‘Not Wearing A Helmet’, Starts Protest Against Wrong eChallan. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X