Just In
- 2 hrs ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 3 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 5 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 11 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
Don't Miss!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- News புதிய வீடு வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தி.. கட்டுமான நிறுவனங்களுக்கு செக்.. மத்திய அரசு அதிரடி
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம், இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Movies கீர்த்தி சுரேஷ் என்ன இப்படி மாறிட்டாரு.. பாலிவுட் நடிகரை கட்டிப் பிடித்து தீயாக பரவும் வீடியோ!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
டாடா இல்ல! 20 அடி பள்ளத்துல உருண்டும் பயணிகளை காப்பாற்றிய கார்! எந்த நிறுவன தயாரிப்புனு தெரிஞ்சா அசந்திருவீங்க
20 அடி பள்ளத்தில் உருண்டும் பயணிகளின் உயிரை கார் ஒன்று காப்பாற்றியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் பெரும்பாலான மரணங்களுக்கு சாலை விபத்துக்கள்தான் மிக முக்கியமான காரணங்களாக உள்ளன. கடந்த 2019ம் ஆண்டில் மட்டும் 1,51,113 பேரின் மரணத்திற்கு சாலை விபத்துக்கள் காரணமாக இருந்துள்ளன. இது சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ புள்ளி விபரம் ஆகும்.
இது மிக அதிகமாக எண்ணிக்கை என்பதால், சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களை குறைப்பதற்கு இந்தியாவில் பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் சாலை விபத்துக்களில் இருந்து தப்ப வேண்டுமானால், வாகனங்கள் எவ்வளவு பாதுகாப்பாக இருக்க வேண்டும்? என்ற விழிப்புணர்வும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
ஒரு பாதுகாப்பான கார் விபத்துக்களின்போது பயணிகளின் உயிரை காப்பாற்றி விடும். இதனை உணர்ந்து கொண்டு, விலை, மைலேஜ், வசதிகள் மற்றும் டிசைன் ஆகியவற்றின் வரிசையில், புதிய கார் வாங்குவதை தீர்மானிக்கும் காரணிகளில் ஒன்றாக தற்போது பாதுகாப்பையும் இந்திய வாடிக்கையாளர்கள் இணைத்துள்ளளனர்.
புத்தம் புதிய ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 ரிவியூ... ப்ளஸ் என்ன? மைனஸ் என்ன? விரிவாக அலசும் வீடியோ!
விபத்துக்களில் இருந்து பயணிகளின் உயிரை கார்கள் காப்பாற்றிய நிகழ்வுகள் தொடர்பான பல்வேறு செய்திகளை கடந்த காலங்களில் நாங்கள் உங்களுக்கு வழங்கியுள்ளோம். இந்த வரிசையில் கொடூரமான விபத்து ஒன்றில் இருந்து பயணிகளை ஒரு கார் காப்பாற்றிய செய்தியை இன்று உங்களுக்காக கொண்டு வந்துள்ளோம்.
இந்த விபத்தில் சம்பந்தப்பட்டிருப்பது மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா கார் ஆகும். விபத்து நிகழ்ந்த சமயத்தில், 4 பயணிகள் அந்த காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர். இந்த விபத்து தொடர்பான துல்லியமான தகவல்கள் கிடைக்கவில்லை. ஆனால் இந்த கார் சாலையில் இருந்து விலகி சுமார் 20 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.
அத்துடன் ஓரிரு முறை உருண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் உள்ளே இருந்த பயணிகளுக்கு படுகாயங்கள் எதுவும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. சிறு சிறு காயங்களுடன் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். மஹாராஷ்டிரா மாநிலம் சதாரா பகுதியை சேர்ந்த சுபம் கடம் என்பவர் இந்த விபத்தின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
கார் எவ்வளவு சேதம் அடைந்துள்ளது? என்பதை இந்த புகைப்படங்கள் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். ஆனால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டனர். இதுகுறித்து காடிவாடி செய்தி வெளியிட்டுள்ளது. பொதுவாக டாடா நிறுவனத்தின் நெக்ஸான், டியாகோ மற்றும் ஹாரியர் உள்ளிட்ட கார்கள் சாலை விபத்துக்களில் இருந்து பயணிகளை காப்பாற்றிய செய்திகளை நாம் பல முறை கேள்விபட்டுள்ளோம்.
ஆனால் மாருதி சுஸுகி நிறுவன கார்களின் பாதுகாப்பு தொடர்பாக எழுப்பப்பட்டு வரும் சந்தேகங்களுக்கு இந்த நிகழ்வு பதில் அளிப்பது போல் உள்ளது. இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமாக இருந்தாலும் மாருதி சுஸுகி கார்களின் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருவது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான்.
ஆனால் மாருதி சுஸுகி நிறுவன கார்களில் விட்டாரா பிரெஸ்ஸா கொஞ்சம் பாதுகாப்பானது. குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்திய மோதல் சோதனைகளில், பெரியவர்களுக்கான பாதுகாப்பில் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா கார் 4 நட்சத்திரங்களை பெற்று அசத்தியிருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இது இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களில் ஒன்றாகும்.
-
ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
-
இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?