மாணவிக்கு போலீசார் அபராதம் விதித்தது இதற்குதான்... சிரித்து வயிறு புண் ஆனால் நிர்வாகம் பொறுப்பல்ல!!

தவறான காரணத்திற்காக கல்லூரி மாணவிக்கு அபராதம் விதித்து போலீசார் மீண்டும் ஒரு முறை காமெடி செய்துள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மாணவிக்கு போலீசார் அபராதம் விதித்தது இதற்குதான்... சிரித்து வயிறு புண் ஆனால் நிர்வாகம் பொறுப்பல்ல!!

இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. எனவே விபத்துக்களில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக, போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது போலீசார் தற்போது கடும் நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக முக்கியமான இடங்களில் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டு, விதிமீறும் வாகன ஓட்டிகள் கண்காணிக்கப்படுகின்றனர்.

மாணவிக்கு போலீசார் அபராதம் விதித்தது இதற்குதான்... சிரித்து வயிறு புண் ஆனால் நிர்வாகம் பொறுப்பல்ல!!

இதன்பின் சம்பந்தப்பட்ட வாகனத்தின் பதிவு எண்ணை அடிப்படையாக வைத்து, அதன் உரிமையாளருக்கு ஆன்லைன் முறையில் இ-சலான் அனுப்பி வைக்கப்படுகிறது. பெரும்பாலும் வாகனத்தை ஓட்டியவர்களுக்கு இ-சலான் அனுப்பி வைக்கப்படுவதில்லை. வாகனம் யார் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதோ, அவர்களுக்கே இ-சலான் அனுப்பி வைக்கப்படுகிறது.

மாணவிக்கு போலீசார் அபராதம் விதித்தது இதற்குதான்... சிரித்து வயிறு புண் ஆனால் நிர்வாகம் பொறுப்பல்ல!!

எனவே விதி மீறலில் ஈடுபட்ட வாகனத்தை யார் இயக்கியிருந்தாலும், அதன் உரிமையாளர்தான் அபராத தொகையை செலுத்த வேண்டும். இதுதவிர இ-சலான் முறையில் பல்வேறு குளறுபடிகளும் அரங்கேறி வருகின்றன. இந்த வரிசையில், ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டி ஒருவருக்கு தற்போது இ-சலான் அனுப்பப்பட்டுள்ளது.

மாணவிக்கு போலீசார் அபராதம் விதித்தது இதற்குதான்... சிரித்து வயிறு புண் ஆனால் நிர்வாகம் பொறுப்பல்ல!!

ஹெல்மெட் அணியாதது தவறுதானே? இதில் என்ன குளறுபடி இருக்கிறது என கேட்கிறீர்களா? போலீசார் இ-சலான் அனுப்பியிருப்பது இரு சக்கர வாகன ஓட்டிக்கு அல்ல. கார் ஓட்டி வந்தவருக்கு. ஆம், கார் ஓட்டி வந்தவருக்குதான் ஹெல்மெட் அணியவில்லை எனக்கூறி தற்போது இ-சலான் வந்துள்ளது. ஷ்ரதா தாஸ் எனும் இளம்பெண்தான் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

மாணவிக்கு போலீசார் அபராதம் விதித்தது இதற்குதான்... சிரித்து வயிறு புண் ஆனால் நிர்வாகம் பொறுப்பல்ல!!

இவர் தேசிய சட்ட பல்கலைகழகம் ஒடிசாவின் (National Law University Odisha - NLUO) மாணவி. ஷ்ரதா தாஸ் தனது காரை ஓட்டிக்கொண்டிருந்தபோது, ஹெல்மெட் அணியவில்லை எனக்கூறி, கட்டாக் போக்குவரத்து போலீசார் ஆன்லைன் சலான் அனுப்பியுள்ளனர். சம்பவத்தன்று ஷ்ரதா தாஸ் தனது மாருதி சுஸுகி வேகன் ஆர் காரை ஓட்டி கொண்டிருந்தார். காரின் பதிவு எண்ணை அடிப்படையாக வைத்து இ-சலான் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மாணவிக்கு போலீசார் அபராதம் விதித்தது இதற்குதான்... சிரித்து வயிறு புண் ஆனால் நிர்வாகம் பொறுப்பல்ல!!

இந்த சூழலில் இ-சலானின் படத்தை டிவிட்டரில் வெளியிட்ட ஷ்ரதா தாஸ், இதுகுறித்து விளக்கம் அளிக்கும் படி கட்டாக் வட்டார போக்குவரத்து அலுவலரிடம் கேட்டு கொண்டுள்ளார். ஹெல்மெட் அணியாமல் எனது காரை இயக்கியதற்காக என் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது ஏன்? என்பதை தயவு கூர்ந்து விளக்குங்கள் என்று ஷ்ரதா தாஸ் கேட்டுள்ளார்.

மாணவிக்கு போலீசார் அபராதம் விதித்தது இதற்குதான்... சிரித்து வயிறு புண் ஆனால் நிர்வாகம் பொறுப்பல்ல!!

இ-சலான் படத்துடன் சேர்த்து தான் ஓட்டிய மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் புகைப்படத்தையும் ஷ்ரதா தாஸ் டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். எனவே ஷ்ரதா தாசுக்கு ஆர்டிஓ பதில் அளித்துள்ளார். இந்த தவறு வேண்டுமென்றே செய்யப்படவில்லை எனவும், வாகன ஓட்டிகளுக்கு எலெக்ட்ரானிக் சலான்களை வழங்கும்போது போலீசார் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் ஆர்டிஓ கூறியுள்ளார்.

மாணவிக்கு போலீசார் அபராதம் விதித்தது இதற்குதான்... சிரித்து வயிறு புண் ஆனால் நிர்வாகம் பொறுப்பல்ல!!

பொதுவாக சீட் பெல்ட் அணியாதது மற்றும் சிகப்பு விளக்கு எரியும்போது சிக்னலை மீறி செல்வது உள்ளிட்ட பல்வேறு விதிமுறை மீறல்களுக்காக இ-சலான்கள் வழங்கப்படுகின்றன. எனவே ஷ்ரதா தாஸ் வேறு ஏதேனும் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதற்காக, தவறான காரணத்தை குறிப்பிட்டு அவருக்கு இ-சலான் வழங்கப்பட்டு விட்டதா? என்பது உறுதியாக தெரியவில்லை.

மாணவிக்கு போலீசார் அபராதம் விதித்தது இதற்குதான்... சிரித்து வயிறு புண் ஆனால் நிர்வாகம் பொறுப்பல்ல!!

ஆனால் ஹெல்மெட் அணியவில்லை என்பதற்காக கார் டிரைவர் ஒருவருக்கு அபராதம் விதிப்பது இது முதல் முறையல்ல என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த காலங்களில் டாடா நெக்ஸான் உள்ளிட்ட பல கார்களின் டிரைவர்களுக்கு இது போன்று அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக டாடா நெக்ஸான் டிரைவருக்கு அபராதம் விதிக்கப்பட்ட சம்பவத்தில், ரசீது போலீசாரின் கையால் எழுதி கொடுக்கப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது.

மாணவிக்கு போலீசார் அபராதம் விதித்தது இதற்குதான்... சிரித்து வயிறு புண் ஆனால் நிர்வாகம் பொறுப்பல்ல!!

தவறான காரணத்தை குறிப்பிட்டு இ-சலான்கள் வழங்கப்படுவதை கூட தவறுதலாக நடந்திருக்கும் என புரிந்து கொள்ள முடிகிறது. எனினும் ஸ்பாட்டில் போலீசாரால் கையால் எழுதி கொடுக்கப்படும் அபராத ரசீதுகளில் கூட காரணத்தை தவறாக குறிப்பிடுவதை ஜீரணித்து கொள்ள முடியவில்லை.

மாணவிக்கு போலீசார் அபராதம் விதித்தது இதற்குதான்... சிரித்து வயிறு புண் ஆனால் நிர்வாகம் பொறுப்பல்ல!!

ஆனால் நிறைய வாகனங்களுக்கு ஒரு சேர அபராதம் விதிப்பதால், காரணத்தை மாற்றி குறிப்பிடும் குழப்பம் நடந்து விடுவதாக போலீசார் கூறுகின்றனர். கடந்த காலங்களில் ராயல் என்பீல்டு பைக்கை ஓட்டி வந்த ஒருவருக்கு, சீட் பெல்ட் அணியவில்லை எனக்கூறி போலீசார் ஸ்பாட்டிலேயே அபராதம் விதித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Maruti Suzuki WagonR Driver Fined Driving Without Helmet In Odisha. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X