Just In
- 17 min ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 56 min ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 1 hr ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 1 hr ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- News வாங்களேன்.. உட்கார்ந்து பேசி உங்களுக்கு நல்லா புரிய வைக்கிறேன்.. மோடிக்கு கார்கே கடிதம்
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Movies தங்கலான் திரைப்பட இசை..ஜிவி பிரகாஷ் என்ன சொல்றாரு பாருங்க.. சம்பவம் இருக்காம்
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
140 லிட்டர் டீசலுடன் கையும் களவுமாக சிக்கிய இருவர்... விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்... தப்பிக்க என்ன வழி!!
4 மணி நேர தீவிர துரத்தலுக்கு பின்னர் மஹாராஷ்டிரா மாநில போலீஸார் இருவரைக் கைது செய்திருக்கின்றனர். கைதிற்கு பின் இருக்கும் பகீர் தகவலை இப்பதிவில் காணலாம்.
நான்கு மணி தீவிர துரத்தலுக்கு பின்னர் இரு நபர்களை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். இருவரை நான்கு மணி நேரம் விரட்டிச் சென்று பிடித்ததற்கான காரணத்தையே இப்பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம். ஹிந்துஸ்தான் ஆங்கில செய்தி தளம் வெளியிட்டிருக்கும் தகவலைப் பார்க்கலாம் வாருங்கள்.
மஹாராஷ்டிரா மாநிலம், ஜல்னா மாவட்டத்திலேயே இந்த சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. இப்பகுதியில் அண்மைக் காலங்களாக திருட்டு, கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் காணப்படுகின்றன. இதனைத் தடுக்கும் பொருட்டு போலீஸார் தீவிர கண்கானிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக, ரோந்து மற்றும் சோதனை மையங்களை அமைத்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு காவல்துறையினர் ரோந்து செய்துக் கொண்டிருந்தபோது, இருவர் சந்தேகத்திற்கு இடமளிக்கின்ற வகையில் செயல்பட்டிருந்திருக்கின்றனர். எனவே அவர்களைநோக்கி சென்றவாறு இருவரையும் காவல்துறையினர் அழைத்திருக்கின்றனர்.
தங்களை அழைப்பது போலீஸ் என்பதை அறிந்து அந்த மர்ம நபர்கள் இருவரும் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். இதைத்தொடர்நது, காவலர்களும் அவர்களை விடாமல் விரட்டிச் சென்றனர். இவ்வாறு நான்கு மணி விரட்டலுக்கு பின்னரே அந்த இரு மர்ம நபர்களையும் போலீஸார் கைது செய்தனர்.
பின்னர், அவர்களிடத்தில் மேற்கொண்ட விசாரணையில் இருவரும் ஆள் நடமாட்டம் இல்லாத இடமாக பார்த்து, அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் கார்களில் எரிபொருளை திருடி வந்ததை ஒப்புக் கொண்டனர். தொடர்ச்சியாக செய்த விசாரணையில் அவர்கள் ஒட்டுமொத்தமாக 140 லிட்டர் டீசல் அன்றிரவு திருடியது தெரியவந்தது.
அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸார் இருவர் மீதும் வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், எரிபொருளை திருடுவதற்காக பயன்படுத்திய டூப்ளிகேட் சாவிகளையும் அவர்களிடத்தில் இருந்து போலீஸார் பறிமுதல் செய்தனர். இவற்றைக் கொண்டே சாலையோரங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசலை அவர்கள் திருடி வந்திருக்கின்றனர்.
இதனை நீண்ட நாட்களாக செய்துவந்த நிலையில் தற்போது இருவரும் கையும் களவுமாக போலீஸாரிடத்தில் சிக்கியிருக்கின்றனர். பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீஸார் இருவரையும் தற்போது காவலில் அடைத்திருக்கின்றனர்.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை விண்ணை எட்டுமளவிற்கு உயர்ந்து வருகின்றது. மக்கள் அனைவரும் இதன் விலை எப்போது பழைய நிலைக்கு திரும்பும் என ஆவலோடு காத்திருக்கொண்டிருக்கின்றனர். இம்மாதிரியான சூழ்நிலையில் காரின் உரிமையாளர்களுக்கே தெரியாமல் எரிபொருளைத் திருடி வந்தவர்களைப் போலீஸார் கைது செய்திருப்பது அப்பகுதி மக்கள் மத்தியில் மன நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
அதேசமயம், முன்னதாக வாகனங்களையும் இதையடுத்து வாகனங்களின் உதிரிபாகங்களையும் களவு செய்து வந்த திருடர்கள் தற்போது தங்களின் கவனத்தை எரிபொருளின் பக்கம் திசை திருப்பியது வாகன உரிமைாயளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
இதனைத் தவிர்ப்பது சற்று கடினம் என்றாலும் சிசிடிவி கேமிரா இருக்கும் பகுதி அல்லது மிக பாதுகாப்பான பார்க்கிங் ஆகியவற்றின்கீழே வாகனத்தை நிறுத்துவதன் மூலம் இதுபோன்ற முரண்பட்ட செயல்களில் இருந்து நம் வாகனங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
-
21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
-
இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
-
வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?