Just In
- 6 min ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 17 min ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
- 1 hr ago "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- 2 hrs ago துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
Don't Miss!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- News நேருவும், இந்திராவும் முட்டாள்கள் இல்லை.. பாஜகவின் மொழி கொள்கைக்கு ஜேஎன்யு துணைவேந்தர் எதிர்ப்பு
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Movies அந்த பயம் தான் காரணமா?.. அமரன் முதல் கங்குவா வரை.. ரிலீஸ் தேதியை முடிவு பண்ண முடியலையே!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
இந்தியாவிற்கு மெகா திட்டம்... எதிர்ப்புகளை நொறுக்கி விட்டு அடித்து விளையாடும் மோடி-கட்கரி கூட்டணி...
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி புதிய திட்டங்கள் குறித்து அறிவித்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அப்போது பிரதமராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டார்.
பிரதமர் மோடியின் அமைச்சரவையில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராக நிதின் கட்கரி பதவி வகித்து வந்தார். நிதின் கட்கரியின் கீழ் செயல்பட்ட சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கியது.
இந்தியா முழுக்க தேசிய நெடுஞ்சாலைகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில், பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் நிதின் கட்கரி கூட்டணி அதிக ஆர்வம் காட்டியது. தரமான சாலைகள் விரைவான போக்குவரத்திற்கு உதவி செய்வதுடன், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் வழி வகுக்கும்.
இதனை மனதில் நிறுத்தி கொண்டுதான், சாலை பணிகளை அவர்கள் வேகப்படுத்தினர். ஆனால் ஒரு சில இடங்களில் இதற்கு கடும் எதிர்ப்பும் கிளம்பவே செய்தது. நெடுஞ்சாலைகளை அமைக்கிறேன் என்ற பெயரில் மரங்கள் வெட்டி வீசப்பட்டு, பசுமை அழிக்கப்படுவதாக புகார்கள் முன் வைக்கப்பட்டன.
குறிப்பாக சேலம்-சென்னை 8 வழி சாலை திட்டத்திற்கு கிளம்பிய எதிர்ப்பு இதற்கு ஒரு உதாரணம். ஆனால் இதை எல்லாம் பொருட்படுத்தாத மோடி தலைமையிலான முந்தைய அரசு, நாள் ஒன்றுக்கு 26 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகளை அமைத்தது.
இந்த சூழலில் சமீபத்தில் நடைபெற்ற 2019 நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே அமோக வெற்றியை சுவைத்துள்ளது. நரேந்திர மோடியே தொடர்ந்து 2வது முறையாக பிரதமர் பொறுப்பை ஏற்றுள்ளார்.
அவரது முந்தைய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அமைச்சர்கள் ஒரு சிலருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன. இந்த வரிசையில் நிதின் கட்கரிக்கும் மீண்டும் அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் நரேந்திர மோடியின் புதிய அமைச்சரவையிலும் நிதின் கட்கரிக்கு, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகமே ஒதுக்கப்பட்டுள்ளது. மீண்டும் அதே துறையின் அமைச்சராகியுள்ள நிதின் கட்கரி பல்வேறு இலக்குகளை நிர்ணயித்துள்ளார்.
இதுகுறித்து நிதின் கட்கரி செய்தியாளர்களிடம் கூறுகையில், ''எனக்கு சாலை போக்குவரத்து துறைக்கு பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இம்முறை சாலை ஓரங்களில் 125 கோடி மரக்கன்றுகளை நட வேண்டும் என முடிவு செய்துள்ளேன். அடுத்த 5 ஆண்டுகளில் இந்த மரக்கன்றுகள் நடப்படும்.
இதுதவிர சாலை ஓரங்களில் புதிய வசதிகளை மிகப்பெரிய அளவில் ஏற்படுத்துவது குறித்தும் சிந்தித்து வருகிறேன். இந்த வகையில் 2,000 வசதிகள் ஏற்படுத்தப்படும். மும்பை-டெல்லி எக்ஸ்பிரஸ் வே சாலையில் பணிகள் தொடங்கி விட்டன.
அத்துடன் 12 எக்ஸ்பிரஸ் வே திட்ட பணிகள் அடுத்த மூன்று மாத காலத்திற்குள்ளாக நிறைவு செய்யப்படும்'' என்றார். முன்னதாக முந்தைய அரசு ஒரு நாளைக்கு 26 கிலோ மீட்டர்கள் தூரத்திற்கு சாலை அமைத்திருந்ததாக குறிப்பிட்டிருந்தோம்.
ஆனால் இம்முறை, அடுத்த ஒன்றரை ஆண்டுகளில், ஒரு நாளைக்கு 40 கிலோ மீட்டர்கள் தூரத்திற்கு சாலை அமைக்க வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் நிதின் கட்கரி குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் சமீப காலமாக முன்னெப்போதும் இல்லாத வகையில் கார், டூவீலர் உள்ளிட்ட வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. அதற்கு ஏற்ப சாலை வசதிகளை மேம்படுத்துவதும் அவசியமான ஒன்றாகவே உள்ளது.
அந்த வகையில் ஒரு நாளைக்கு 40 கிலோ மீட்டர்கள் தூரத்திற்கு சாலை அமைப்போம் என்ற அமைச்சர் நிதின் கட்கரியின் அறிவிப்பு வரவேற்க கூடிய ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. அதே சமயம் அமைச்சர் கூறியபடி 125 கோடி மரங்களை நடுவதும் அவசியமானதுதான்.
-
ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
-
ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
-
கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!