Just In
- 19 min ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 36 min ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
- 55 min ago பைக்க விட அதிக மைலேஜ் தரும் ஹூண்டாய் கார்.. பொய் சொல்லல.. ஸ்ட்ராங்கான ஆதாரத்தோடதான் சொல்றாங்க!
- 1 hr ago வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
Don't Miss!
- Finance தங்கம் விலை பொசுக்கு குறைஞ்சிடுச்சு! கேட்கவே இனிமையா இருக்கு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?
- Lifestyle ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- News அண்ணாமலையை விடுங்க.. ஒரே நாளில் வியப்பூட்டிய தமிழகம்.. மகிழ்ச்சி, அதிருப்தி, பூரிப்பு.. இது ஹைலைட்ஸ்
- Sports கே எல் ராகுல் செய்த செயல்.. எச்சரித்த தோனி.. ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு கிடைத்த தண்டனை
- Technology திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- Movies கவினுடன் கிளாஷ் விடும் சந்தானம்.. யாரு கிங்குன்னு மே 10ம் தேதி தெரியும் என கலாய்க்கும் ரசிகர்கள்!
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
இனி இந்த 6 மாவட்டங்களுக்கு டீசல் கிடையாது... நிதின் கட்காரி உறுதி எடுத்த அதிரடி முடிவு!
மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், குறிப்பிட்ட சில மாவட்டங்களுக்கு மட்டும், ஐந்து வருடங்களுக்கு டீசல் விற்பனை தடை செய்யப்பட இருப்பதாக கூறியுள்ளார்.
இந்தியாவில் அண்மைக் காலங்களாக எரிபொருள் வாகனங்களின் பயன்பாட்டை குறைக்கும் விதமாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை, எரிபொருள் வாகனங்களுக்கு எதிராக, அரசு தொடுத்திருக்கும் போர் என்று கூட கூறலாம்.
அந்த அளவிற்கு பல்வேறு முயற்சிகளும், நடவடிக்கைகளும் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறையின் அமைச்சர் நிதின் கட்காரி, ஓர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
அந்தவகையில், மஹாராஷ்டிரா மாநிலத்தின் ஆறு முக்கிய நகரங்களில் ஒரு துளி டீசல் கூட இனி விற்பனைச் செய்யப்படாது என அவர் தெரிவித்துள்ளார். அவ்வாறு, மஹாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர், பந்தாரா, கோண்டியா, சந்தரபூர், கட்சிரொல்லி மற்றும் வர்தா ஆகிய ஆறு மாவட்டங்களில், இனி வரும் ஐந்தாண்டுகளுக்கு டீசல் விற்பனை தடை செய்யப்பட இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
அண்மையில், சிஐஐ நேஷனல் கவுன்சில் சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, பஸ் மற்றும் கனரக ஊர்திகளுக்கு பயன்படுத்தும் வகையிலான இயற்கை-சிஎன்ஜி எரிபொருளை தயாரிக்க, அந்தந்த மாவட்டங்களில் உற்பத்தி நிறுவனங்களை தயார் செய்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
இதற்காக, ஏற்கனவே 50க்கும் மேற்பட்ட இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் பஸ்களை பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
நிதின் கட்காரி, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மட்டுமின்றி சிறு குறு வணிக நிறுவன துறையின் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வருகின்றார்.
ஆகையால், இந்த முயற்சியானது, உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களை ஊக்கப்படுத்துவது மட்டுமின்றி, எரிபொருளுக்காக செய்யப்படும் செலவீனத்தை தவிர்க்கும் வகையிலும் மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகின்றது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் எரிபொருள் இறக்குமதிக்காக ரூ. 17 லட்சம் செலவி செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதுபோன்ற, செலவீணங்களை தவிர்க்கவே, இதுபோன்ற முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதுமட்டுமின்றி, நாட்டில் எரிபொருள் வாகனங்களின் பயன்பாட்டை குறைப்பதன் மூலம், காற்று மாசடைதல் மற்றும் புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வுகாணும் நோக்கிலும் இதனை அரசு செய்து வருகின்றது.
இதற்கு முன்பாக கூட, ஓர் அதிரடி நடவடிக்கையாக சாலை போக்குவரத்தால் ஏற்படும் மாசுபாட்டினைக் கட்டுபடுத்தும் விதமாக வருகின்ற 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இரு சக்கர வாகனங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட இருப்பதாக நிதின் கட்காரி தெரிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து, ஐசி திறன்கொண்ட அனைத்து இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு தடை விதிக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட உள்ளது. தொடர்ந்து, 2023ம் ஆண்டு முதல் மூன்று சக்கர வாகனங்களுக்கும், 2025ம் ஆண்டு முதல் பெட்ரோல் இரு சக்கர வாகனங்களுக்கும் தடை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மேலும், பேட்டரியால் இயங்கும் வாகனங்களுக்கு மட்டுமே, நாட்டில் அனுமதி வழங்கப்பட உள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் சுற்றுப்புறச்சூழல் பாதுகாக்கப்படுவது மட்டுமின்றி, எரிபொருளுக்காக அரசு செய்துவரும் செலவீணமும் தடுக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆனால், தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும், ஆறு மாவட்டங்களுக்கான டீசல் தடையானது, சிறு குறு வணிக நிறுவனங்களின் மேம்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. சிறு, குறு நிறுவனங்கள், நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகின்றன. ஆகையால், அவற்றை மேம்படுத்தும் நோக்கில் இந்த முயற்சி எடுக்கப்பட உள்ளது. மேலும், இதுபோன்று பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளவும் ஆலோசனை செய்யப்பட்டு வருகின்றது.
-
100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
-
டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!
-
ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...