Just In
- 1 hr ago 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- 6 hrs ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- 6 hrs ago 7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
- 7 hrs ago இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
56 ரூபாய்க்காக டோல்கேட்டில் சாமியாடிய முக்கிய அமைச்சரின் மனைவி... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ...
அமைச்சரின் மனைவி ஒருவர் 56 ரூபாய்க்காக டோல்கேட்டில் சாமியாடியுள்ளார். அதிர்ச்சிகரமான இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள டோல்கேட்களில் விதிமுறைகளை மீறி கட்டண கொள்ளை அரங்கேற்றப்படுவதாக பல்வேறு புகார்கள் மிக நீண்ட காலமாக உள்ளன. இருந்தபோதும் சாமானிய மக்கள் வேண்டா வெறுப்பாக கட்டணம் செலுத்தி கொண்டுதான் உள்ளனர்.
ஆனால் ஒரு சில அரசியல்வாதிகள் மட்டும், சுங்க கட்டணம் செலுத்த மறுத்து, டோல்கேட் ஊழியர்களுடன் வாக்குவாதங்களில் ஈடுபடும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து கொண்டே வருகின்றன. அதே பாணியில் தற்போது நடைபெற்றுள்ள ஒரு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கட்டணம் செலுத்துமாறு கூறிய டோல்கேட் ஊழியர்களை, அரசியல்வாதிகளும், அவரது பாதுகாவலர்களும் ஆயுதங்களை காட்டி மிரட்டிய சம்பவங்கள் கடந்த காலங்களில் நடந்ததுண்டு. ஆனால் டோல்கேட்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும் என்பதை அவர்கள் மறந்து விடுகின்றனர் போல.
இதன்மூலமாக டோல்கேட்களில் வன்முறையில் ஈடுபடும் அரசியல்வாதிகளின் வீடியோக்கள் சமூக வலை தளங்களில் வெளியாகி வைரலாக பரவி விடுகின்றன. இந்த வரிசையில் தற்போது, அமைச்சர் மனைவி ஒருவரின் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஆந்திர பிரதேச மாநிலத்தில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடைபெற்று கொண்டுள்ளது. சந்திரபாபு நாயுடு மந்திரி சபையில், சிவில் சப்ளை அமைச்சராக இருப்பவர் பிரதிபட்டி புல்லா ராவ். இவரது மனைவி வெங்கட குமாரி.
வெங்கட குமாரியும் அரசியல்வாதிதான். ஆந்திராவை ஆளும் தெலுங்கு தேசம் கட்சியில் மிகவும் ஆக்டிவ் ஆக அவர் பணியாற்றி கொண்டுள்ளார். இந்த சூழலில் வெங்கட குமாரி சமீபத்தில், ஐதராபாத்தில் இருந்து குண்டூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
தனது பர்சனல் டொயோட்டா பார்ச்சூனர் காரில், வெங்கட குமாரி பயணம் செய்தார். அப்போது வழியில் இருந்த மடுகுலப்பள்ளி டோல்கேட்டில் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். அப்போது சுங்க கட்டணம் செலுத்த வேண்டும் என டோல்கேட் ஊழியர்கள் கூறியுள்ளனர்.
ஆனால் வெங்கட குமாரி அதற்கு மறுத்தார். இருந்தபோதும் சுங்க கட்டணம் செலுத்தாமல் டோல்கேட்டை கடந்து செல்ல அனுமதிக்க முடியாது என ஊழியர்கள் திட்டவட்டமாக கூறி விட்டனர். அவர் செலுத்த வேண்டிய கட்டணம் 56 ரூபாய்.
ஆனால் வெங்கட குமாரி அதனை செலுத்த மறுத்ததால், அவருக்கும், டோல்கேட் ஊழியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் உண்டானது. அப்போது ஒரு ஊழியர், கட்டணம் செலுத்தாமல் நிச்சயமாக இங்கிருந்து கடந்து செல்ல முடியாது என திட்டவட்டமாக வெங்கட குமாரியிடம் கூறினார்.
அத்துடன் அமைச்சரின் மனைவி பயணித்த டொயோட்டா பார்ச்சூனர் காரில் ஒட்டப்பட்டிருந்த எம்எல்ஏ ஸ்டிக்கரின் 'வேலிடிட்டி' குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார். டோல்கேட் ஊழியரின் கருத்துப்படி, அந்த எம்எல்ஏ ஸ்டிக்கரின் வேலிடிட்டி கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதமே காலாவதியாகி விட்டது.
இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில், டோல்கேட் கட்டணம் செலுத்துவதில் இருந்து எம்எல்ஏக்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது என்பது உண்மையே. ஆனால் சம்பந்தப்பட்ட எம்எல்ஏ அந்த காரில் பயணம் செய்ய வேண்டும். அப்போதுதான் டோல்கேட் கட்டணம் செலுத்துவதில் இருந்து விதிவிலக்கு பெற முடியும்.
அத்துடன் இந்த விதிவிலக்கு எம்எல்ஏவின் அதிகாரப்பூர்வ வாகனத்திற்கு மட்டுமே பொருந்தும். பயணம் செய்யும் நபரின் அந்தஸ்தை விளக்கும் வகையிலான ஸ்டிக்கர்/முத்திரையை இந்த வாகனங்கள் தாங்கியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே டோல்கேட் ஊழியர்கள் கெடுபிடி காட்டியதால், அமைச்சரின் மனைவி இறுதியாக கட்டணம் செலுத்தி விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகள் வைரலாக பரவி வருகின்றன. இது தொடர்பாக வி6 நியூஸ் தெலுங்கு செய்தி வெளியிட்டுள்ளது. அதனை நீங்கள் கீழே காணலாம்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால், ''அமைச்சரின் மனைவி வெங்கட குமாரி, குண்டூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஆந்திர பிரதேசத்தில் தேர்தல் முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
எனது கணவர் இன்னமும் அமைச்சர் மற்றும் எம்எல்ஏவாகதான் உள்ளார். அப்படி இருக்கையில் டோல்கேட் ஊழியர்கள் எப்படி அவரது காருக்கு தடை உண்டாக்க முடியும்?'' என்றார். ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தலும் நடந்து முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
2.5 லட்சத்தில் எந்த பைக்கை வாங்குவது என தெரியாமல் முழிக்கிறீங்களா? ஹீரோவில் இருந்து ஜாவா வரையில்!!
-
நானோ காரை நமக்கு தெரியும்! ஆனா இது அது கிடையாது... டாடா உருவாக்கிய இந்த கார் கடைசி வர வெளியே வராமல் போய்டுச்சே
-
ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கிற்கு டிமாண்ட் அதிகமாகிட்டே போகுது!! இந்தியாவின் தேசிய பைக் என சொல்லலாம்!