Just In
- 2 hrs ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- 2 hrs ago 7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
- 3 hrs ago இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- 4 hrs ago உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மூதாட்டி மீது ஸ்கூட்டர் மோதல்... திரும்பி கூட பார்க்காமல் சென்ற சிறார்கள்... கடும் நடவடிக்கை எடுத்த போலீஸ்!
மூதாட்டி மீது சிறார்கள் இரு சக்கர வாகனத்தை மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் நடைபெறும் பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு இரு சக்கர வாகனங்கள்தான் முக்கியமான காரணமாக உள்ளன. இதில் கவலைப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், விபத்துகளுக்கு காரணமான இரு சக்கர வாகனங்களை ஓட்டுவது சிறார்கள்தான். இந்த சூழலில், ஐதராபாத் நகரில் நடைபெற்றுள்ள ஒரு விபத்து சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மூன்று பேர் பயணம் செய்து வந்த ஸ்கூட்டர் ஒன்று விபத்தில் சிக்கியதுதான் இந்த அதிர்ச்சிக்கு காரணம். இந்த மூன்று நபர்களும் ஸ்கூட்டரில் வந்தபோது, மூதாட்டி ஒருவர் சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் இந்த 3 நபர்களும், மற்ற வாகனங்களை ஓவர்டேக் செய்து அதிவேகமாக வந்தனர்.
அப்போது அந்த மூதாட்டியை அவர்கள் பார்த்தனர். ஆனால் அவர்களால் ஸ்கூட்டரை கட்டுப்படுத்த முடியவில்லை. இதன் காரணமாக பின் பகுதியில் இருந்து அவர்கள் மூதாட்டி மீது மோதினர். இதுவே தவறு என்னும் நிலையில், அவர்கள் ஸ்கூட்டரை நிறுத்தவும் இல்லை. மூதாட்டி எப்படி இருக்கிறார்? என்பதை அவர்கள் திரும்பி கூட பார்க்கவில்லை.
மாறாக தொடர்ந்து பயணம் செய்து கொண்டே இருந்தனர். எனினும் அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து அந்த மூதாட்டிக்கு உதவி செய்தனர். இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், அந்த மூதாட்டி சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டார் என்பதுதான். எனினும் ஸ்கூட்டரில் வந்த மூன்று பேரும் நிற்காமல் சென்றது வருத்தமான விஷயம்தான்.
தற்போதைய நிலையில் காவல் துறையினர் தெரிவித்துள்ள தகவல்களின் அடிப்படையில் அவர்கள் யாரிடமும் ஓட்டுனர் உரிமம் இல்லை. எனினும் அந்த மூன்றில் இரண்டு பேரை காவல் துறையினர் தற்போது அதிரடியாக கைது செய்துள்ளனர். அவர்கள் இரண்டு பேரும் சிறை கம்பிகளுக்கு பின்னால் உள்ள புகைப்படத்தையும் காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர்.
இதுதவிர அந்த ஸ்கூட்டரின் உரிமையாளர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் இந்த மூன்று பேரில் ஒருவரின் பெற்றோர் ஆவார். இந்தியாவை பொறுத்தவரை, உரிய வயதை எட்டாமல், அதே சமயம் ஓட்டுனர் உரிமம் பெறாத ஒருவர் வாகனங்களை இயக்கும்பட்சத்தில், அவர்களின் பெற்றோர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு விதிமுறைகள் உள்ளன.
கடந்த காலங்களில் இதே ஐதராபாத் நகரில் சிறார்களின் பெற்றோர்கள் மீது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த நடவடிக்கைகள் பலன் அளிக்கவில்லை. இன்னும் சொல்வதென்றால், உரிய வயதை எட்டாத சிறார்களை வாகனம் ஓட்ட அனுமதித்த பெற்றோர்களை காவல் துறையினர் சிறைக்கும் அனுப்பியுள்ளனர்.
ஆனால் அந்த நடவடிக்கைகள் போதிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஓட்டுனர் உரிமம் இல்லாத சிறார்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கான அதிகாரம் காவல் துறையினருக்கு உள்ளது. எனவே பெற்றோர்களும், சிறார்களும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். இல்லாவிட்டால் காவல் துறையினரின் நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும்.
-
நானோ காரை நமக்கு தெரியும்! ஆனா இது அது கிடையாது... டாடா உருவாக்கிய இந்த கார் கடைசி வர வெளியே வராமல் போய்டுச்சே
-
ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கிற்கு டிமாண்ட் அதிகமாகிட்டே போகுது!! இந்தியாவின் தேசிய பைக் என சொல்லலாம்!
-
கலாநிதி மாறன் மகள் காவ்யா வைத்திருக்கும் இந்த காரோட விலை 12கோடியா! ஒற்றை குடும்பத்திடம் மட்டும் இவ்ளோ கார்களா!