Just In
- 1 hr ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- 1 hr ago 7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
- 3 hrs ago இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- 3 hrs ago உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஓட்டுநர்களின் வயிற்றில் பாலை வார்க்கவிருக்கும் புதிய உத்தரவு... மோடி அரசின் அதிரடி...
ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு தடையாக இருக்கும் குறைந்தபட்ச கல்வி தகுதியை நீக்குவதற்கு, மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
இந்திய மோட்டார் வாகன சட்டம் 1989, பிரிவு 8ன் படி, நாடு முழுவதும் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு, குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற விதி நடைமுறையில் இருந்து வருகின்றது. ஆகையால், அதற்கு குறைவான அல்லது படிப்பறிவில் பின் தங்கியுள்ள மக்களால் ஓட்டுநர் உரிமம் பெற முடியாத சூழல் நிலவி வருகின்றது.
இந்நிலையில், மத்திய, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் இந்த விதியில் புதிய மாற்றம் ஒன்றை மேற்கொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில், ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு தடையாக இருக்கும் குறைந்தபட்ச படிப்பறிவு என்ற விதியை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த செய்தியை தி டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி தளம் வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் அதிரடி நடவடிக்கையின் மூலம், படிக்காமல் வேலையின்றி தவித்து வருபவர்கள் முறையாக ஓட்டுநர் பயிற்சி பெற்று, வாகன ஓட்டிகளாக பணி புரிய வழி வகை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில், மத்திய போக்குவரத்து துறை அமைச்சகம் சார்பில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில், அனைத்து மாநில போக்குவரத்து துறை அதிகாரிகளும் பங்கேற்றனர். அப்போது, "வானம் ஓட்டும் திறன் பலர் பெற்றிருந்தாலும், போதிய கல்வி தகுதி இல்லாத காரணத்தால், சிலரால் ஓட்டுநர் உரிமம் பெற முடிவதில்லை" என ஹரியானா மாநிலம் சார்பாக கலந்துகொண்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், குறைந்தபட்ச கல்வி தகுதி என்ற விதியை நீக்கவும் அவர்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதனால், பொருளாதாரம் ரீதியாக பின்தங்கியுள்ள மக்கள், ஓட்டுநர் பணியை மேற்கொண்டு அவர்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்த இது வழிவகை செய்யும் என்ற கருத்தை அவர்கள் முன் வைத்தனர்.
இத்துடன், தங்களது மாநிலத்தில் உள்ள பெரும்பாலானோருக்கு, வாகனத்தை இயக்கும் திறன் இருந்தும், கல்வி தகுதி இல்லாத காரணத்தால் ஓட்டுநர் உரிமம் பெற முடியாத சூழல் நிலவி வருகின்றது என்று வருத்தம் தெரிவித்தனர்.
இதன்காரணமாக, ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு தற்போது சிக்கலாக இருக்கும் குறைந்தபட்ச கல்வி தகுதியை நீக்க மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அரசாணை மிக விரைவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறைந்த கல்வி தகுதி இல்லாதவர்கள்கூட, ஓட்டுநர் உரிமம் பெறலாம் என்ற புதிய வரவேற்கதக்கதாக இருக்கின்றது. இருப்பினும் அதில் சில சிக்கல்கள் உள்ளன. நம் நாட்டில் உள்ள பெரும்பாலான சாலைகளில் ஆங்கில மற்றும் இந்தி மொழியிகளிலேயே பெயர் பலைகள் நிறுவப்பட்டுள்ளன. அதிலும், மாநிலங்களின் தனித்துவமான மொழிக்குக்கூட முக்கியத்துவம் கொடுக்காமல், மற்ற மொழிகளை திணிக்கும்விதமாக மத்திய அரசு செயல்பட்டு வருகின்றது.
ஆகையால், கல்வி தகுதி இல்லாதவர்களுக்கென பிரத்யேகமாக, வடிவமைக்கப்பட்ட சாலை குறித்த சமிக்ஞைகள் குறித்த அறிவை அவர்களுக்கு பயிற்சி மூலம் கட்டாயம் அளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கான, பிரத்யேக பயிற்சி, ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளில் வழங்கப்பட்டு வருகின்றன. ஆகையால், அதில் முறையான பயிற்சியைப் பெற்ற பின்னர், அவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கினால் பின் விளைவுகள் தவிர்க்கப்படும்.
இவ்வாறு, ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான குறைந்தபட்ச கல்வி தகுதியை நீக்குவதன்மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பளிக்க மிக பயனுள்ளதாக அமையும். மேலும், போக்குவரத்து மற்றும் தளவாடங்கள் துறையில் உள்ள 22 லட்சம் ஓட்டுநர் பணியிடங்களை நிரப்பவும் இது உதவியாக இருக்கும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசயம், குறைந்த பட்ச கல்வி தகுதியை நீக்கினாலும் ஓட்டுநர்களின் பயிற்சி மற்றும் தேர்வில் எந்தவித சலுகையும் அளிப்பதற்கு வாய்ப்பில்லை என போக்குவரத்ததுறை அமைச்சகம் மிக கெடுபிடியாக தெரிவித்துள்ளது. ஆகையால், ஆர்டிஓ அதிகாரிகள் விதிக்கும் அனைத்து பரீட்சைகளிலும் விண்ணப்பதாரர்கள் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என கட்டாயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு, படிப்பறிவு இல்லாதவர்களுக்கு வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என ராஜஸ்தான் மாநிலத்தின் உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவை, அம்மாநில போக்குவரத்துறைக்கு விதித்திருந்தது.
சாலையில், பெரும்பாலான ஆங்கில வார்த்தைகளை சிலரால் படிக்க இயலாத காரணத்தால், பல்வேறு போக்குவரத்து விதிமீறல்கள் அரங்கேறியதன் காரணமாக இந்த உத்தரவை அந்நீதிமன்றம் வழங்கியிருந்தது குறிப்பிடத்தகுந்தது.
-
2019ல் வேணும்னே கடலில் மூழ்கடிக்கப்பட்ட விமானம்.. இப்ப அதோட நிலைமை என்ன? ஏன் அதை கடலில் தள்ளி விட்டாங்க?
-
செஞ்சது என்னமோ சின்ன உதவிதான்.. ஆனா அந்த சமையல்கார அம்மா குடும்பத்துக்கு அது ரொம்ப பெருசு! செம ஸ்டோரி!!
-
கலாநிதி மாறன் மகள் காவ்யா வைத்திருக்கும் இந்த காரோட விலை 12கோடியா! ஒற்றை குடும்பத்திடம் மட்டும் இவ்ளோ கார்களா!