Just In
- 1 hr ago 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- 6 hrs ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- 6 hrs ago 7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
- 7 hrs ago இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
Don't Miss!
- News ஆஹா.. திடீரென குறைந்த தங்கம் விலை.. இப்போது வாங்கலாமா? இன்னும் குறையுமா? ஆனந்த் சீனிவாசன் பளிச்
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு எச்சரிக்கை தந்த அம்பானி குடும்பம்.. மும்பை வெல்லவில்லை என்றால் கிளம்பிவிடு!
- Finance சூர்யா – தேவா: கௌதம் அதானி வெற்றிக்கு காரணமான மலாய் மகாதேவியா.. உயிர் நண்பன்..!
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
காற்று மாசுபாட்டை குறைக்க மற்றுமொரு அதிரடி... மீண்டும் பெட்ரோல் விஷயத்தில் நடைபெற இருக்கும் அதிரடி மாற்றம்...
மத்திய அரசு பெட்ரோலில் மீண்டும் கை வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து வெளியாகியிருக்கும் தகவலை இப்பதிவில் காணலாம்.
காற்று மாசுபாட்டைக் குறைக்க நமது இந்திய அரசு எண்ணற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக, பெட்ரோல், டீசலால் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை முழுமையாக ஒழித்துக்கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த வாகனங்களுக்கு பதிலாக மின் வாகன பயன்பாட்டைக் கொண்டு வரும் நோக்கில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், மின் வாகன பயன்பாட்டை அதிகரிக்கச் செய்யும் வகையில், புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவோர்க்கு மானியம், வரி குறைப்பு, சிறப்பு தள்ளுபடி என எக்கசக்க சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் காற்று மாசுபாட்டைக் கருத்தில் கொண்ட பழைய (20 ஆண்டுகள் பழைய தனியார் மற்றும் 15 ஆண்டுகள் பழைய வர்த்தக) வாகனங்களை அடியோடு பயன்பாட்டில் இருந்து நீக்கும் முயற்சியிலும் எடுக்கப்பட்டு வருகின்றது.
இதுபோன்ற எக்கசக்க நடவடிக்கைகள் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில் மத்திய அரசு நாட்டில் மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையிலேயே காற்று மாசுபாட்டைக் குறைக்கும் விதமாக மற்றுமொரு புதிய நடவடிக்கையை மேற்கொள்ள மத்திய அரசு தயாராகி விட்டதாகக் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்காக இம்முறை பெட்ரோலில் கை வைத்திருக்கின்றது அரசு. தற்போது கலக்கப்படும் எத்தனாலின் அளவை மீண்டும் அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, தற்போது, 90 சதவீதம் பெட்ரோல், 10 சதவீதம் எத்தனால் என்ற வீதத்தில் கலக்கப்பட்டு விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இதிலேயே மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றது.
அதாவது, 20 சதவீதம் எதனாலை (E20) 80 சதவீத பெட்ரோலுடன் கலந்து விநியோகிக்க அரசு அனுமதி வழங்கியிருக்கின்றது. 2020ம் ஆண்டு இதற்கான கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தநிலையில் தற்போது மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியிருக்கின்றது.
10 சதவீத எத்தனால் கலக்க அரசு அனுமதி வழங்கியிருந்தாலும் பற்றாக்குறை காரணமாக 6 சதவீதம் வரை மட்டுமே பெட்ரோலில் எத்தனால் கலக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிதியாண்டு 2018ல் இது 4.22 சதவீதமாக மட்டுமே இருந்தது.
இந்த நிலையிலேயே காற்று மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு 20 சதவீத எத்தனால் கலப்படத்திற்கு மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியிருக்கின்றது. 20 சதவீத எத்தனால் கலப்பின் வாயிலாக சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் வரையில் சேமிக்க முடியும் என மத்திய பெட்ரோலியத்துறையின் செயலாளர் தருண் கபூர் தகவல் தெரிவித்திருக்கின்றார்.
அதாவது, பெட்ரோலியம் கொள்முதலுக்காக இந்தியா அரசு மேற்கொள்ளும் அந்நிய செலாவணியில் கணிசமான பாரத்தைக் குறைக்க இந்த நடவடிக்கை உதவும் என கூறப்படுகின்றது. இந்தியா 85 சதவீத எரிபொருள் தேவையை வெளிநாடுகளில் இருந்தே பூர்த்திச் செய்துகொள்கின்றது. இதற்காக பெரும் அளவிலான தொகையை அது செலவிடுவது குறிப்பிடத்தகுந்தது.
தூய்மை பெட்ரோலுடன் 20 சதவீத எத்தனால் (இ20) கலப்பதன் மூலம் அதிகளவில் வெளியாகும் கார்பன் மோனாக்சைடு மற்றும் ஹைட்ரோகார்பன் உமிழ்வைக் கணிசமாக குறைக்க முடியும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவேதான் காற்று மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு இத்திட்டத்தைக் கையிலெடுத்திருப்பதாகக் கூறி 20 சதவீத எத்தனால் கலப்பிற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியிருக்கின்றது.