Just In
- 2 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 2 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 3 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 4 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சன்னி லியோன் கணவர் கார் நம்பரை தனது காரில் பயன்படுத்தி இளைஞர் செய்த காரியம்... நடந்ததை கேட்டு ஆடிப்போன போலீஸ்
பிரபல நடிகை சன்னி லியோனின் கணவருக்கு சொந்தமான காரின் பதிவு எண்ணை இளைஞர் ஒருவர் தனது காரில் பயன்படுத்தி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவின் மிக முக்கியமான தொழில் அதிபர்களில் ஒருவரான ரத்தன் டாடாவிற்கு சொந்தமான காரின் பதிவு எண்ணை பெண் ஒருவர் தனது வாகனத்தில் மோசடியாக பயன்படுத்தி வந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன் அவர் காவல் துறையினரிடம் சிக்கினார். அதற்குள்ளாக அதே போன்றதொரு பரபரப்பான சம்பவம் தற்போது மீண்டும் ஒரு முறை நடைபெற்றுள்ளது.
இம்முறை சிக்கிய நபர், பிரபல நடிகையான சன்னி லியோனின் கணவருடைய காரின் பதிவு எண்ணை மோசடியாக தனது காரில் பயன்படுத்தி வந்துள்ளார். இதனை சன்னி லியோனின் கார் ஓட்டுனர் எதேச்சையாக பார்த்துள்ளார். இதன்பின் அவர் அளித்த புகாரின் பேரில், 38 வயதான அந்த நபரை மும்பையில் உள்ள வெர்சோவா காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நபரின் பெயர் பியூஷ் சென் என்பது தெரியவந்துள்ளது. அவர் தனக்கு சொந்தமான மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்யூவி ரக காரில், சன்னி லியோனின் கணவருக்கு சொந்தமான காரின் பதிவு எண்ணை பயன்படுத்தி வந்துள்ளார். ஆனால் பியூஷ் சென்னுக்கு சொந்தமான கார் எது? என்பது சரியாக தெரியவில்லை.
அது மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் எஸ்யூவி ரக கார் என்று மட்டுமே காவல் துறை குறிப்பிட்டுள்ளது. அனேகமாக அது ஜிஎல் 350 காராக இருக்கலாம் என கூறப்படுகிறது. இங்கே ஆச்சரியமளிக்கும் விஷயம் என்னவென்றால், சன்னி லியோனின் கணவர் டேனியல் வெபர் மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல் 350 காரைதான் வைத்துள்ளார்.
சன்னி லியோன்-டேனியல் வெபர் தம்பதியினர் குடும்பத்துடன் வெளியில் செல்வதற்கு அடிக்கடி அந்த காரை பயன்படுத்தி வருகின்றனர். அதன் பதிவு எண்ணைதான் பியூஷ் சென் தனது காரில் மோசடியாக பயன்படுத்தியுள்ளார். ஆனால் பியூஷ் சென் எவ்வளவு காலமாக இப்படி மோசடியாக பதிவு எண்ணை பயன்படுத்தி வருகிறார்? என்பதை காவல் துறையினர் இன்னும் உறுதி செய்யவில்லை.
உங்கள் காருக்கு ஒதுக்கப்பட்ட பதிவு எண்ணுக்கு பதிலாக ஏன் சன்னி லியோனின் கணவருக்கு சொந்தமான காரின் பதிவு எண்ணை பயன்படுத்தி வந்தீர்கள்? என பியூஷ் சென்னிடம் காவல் துறையினர் கேள்வி எழுப்பினர். இதற்கு பியூஷ் சென், இந்த பதிவு எண் அதிர்ஷ்டமானதாக இருக்கும் எனக்கருதியதால், இவ்வாறு செய்து விட்டேன் என கூறியுள்ளார்.
கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் போக்குவரத்து விதிமுறைகளில் ஈடுபட்டதாக சன்னி லியோனின் கணவர் டேனியல் வெபருக்கு சில இ-சலான்கள் வந்துள்ளன. ஆனால் இந்த விதிமுறை மீறல்களை உண்மையில் செய்தது பியூஷ் சென்தான். டேனியல் வெபருக்கு சொந்தமான காரின் பதிவு எண்ணை அவர் மோசடியாக பயன்படுத்தியதால், டேனியல் வெபருக்கு இ-சலான்கள் சென்றுள்ளன.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள பியூஷ் சென், மும்பையில் உள்ள கல்யாண் பகுதியை சேர்ந்தவர். பியூஷ் சென் மோசடியாக பதிவு எண்ணை பயன்படுத்தி வந்த நிலையில், அவரது அதிர்ஷ்டம் சமீபத்தில் முடிவுக்கு வந்தது. ஏனெனில் அந்தேரி பகுதியில் பியூஷ் சென்னின் காரை, சன்னி லியோனின் கார் ஓட்டுனர் அக்பர் கான் பார்த்துள்ளார்.
உடனடியாக அங்கிருந்த காவல் துறையினரிடம் அக்பர் கான் இதுகுறித்து புகார் அளித்தார். இதன் பேரில் காரின் ஆவணங்களை காட்டுமாறு பியூஷ் சென்னிடம் காவல் துறையினர் கேட்டனர். பியூஷ் சென் தனது காரின் உண்மையான ஆவணங்களை காரிலேயே வைத்திருந்தார். இதை பார்த்ததும் காவல் துறையினர் அதிர்ச்சியடைந்து விட்டனர்.
ஏனெனில் ஆவணங்களில் இருந்த பதிவு எண்ணும், பியூஷ் சென் தனது காரில் பயன்படுத்தி வந்த பதிவு எண்ணும் வெவ்வேறாக இருந்தது. இதன்பின் காவல் துறையில் அளித்த புகார் குறித்து டேனியல் வெபருக்கு, அக்பர் கான் தகவல் அளித்துள்ளார். இதன் பேரில் டேனியல் வெபர் தனது காரின் ஆவணங்களுடன் காவல் நிலையத்திற்கு வந்துள்ளார்.
தற்போது பியூஷ் சென் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். அத்துடன் இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணையும் நடத்தி வருகின்றனர். ஆனால் இந்தியாவில் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெறுவது இது முதல் முறை கிடையாது. நாங்கள் ஏற்கனவே கூறியபடி, ரத்தன் டாடாவிற்கு சொந்தமான காரின் பதிவு எண்ணை பெண் ஒருவர் பயன்படுத்தி வந்தார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் அவர் சிக்கினார். பியூஷ் சென் கூறிய அதே காரணத்தைதான் அந்த பெண்ணும் காவல் துறையினரிடம் தெரிவித்தார். ரத்தன் டாடாவின் காரின் பதிவு எண் தனக்கு ராசியானது என்பதால், தனது காருக்கு ஒதுக்கப்பட்ட பதிவு எண்ணுக்கு பதிலாக, அவருடைய காரின் பதிவு எண்ணை பயன்படுத்தியதாக அந்த பெண் கூறினார். இந்த சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
-
இந்தியாவுக்கு எதாவது பாதிப்பா? ஒரு சின்ன மிஸ்டேக் எங்க கொண்டுவந்து நிறுத்தி இருக்கு!!
-
ரூ.5 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாடுறீங்களா? பவர்ஃபுல் பைக்ஸுக்கு நம் நாட்டில் எப்போதுமே குறை இல்லை!!
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!