Just In
- 55 min ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- 1 hr ago எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- 2 hrs ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- 3 hrs ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
Don't Miss!
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- News 664 மனு நிராகரிப்பு! தமிழக லோக்சபா தேர்தலில் 1085 வேட்புமனு ஏற்பு! எந்த தொகுதியில் அதிகம் தெரியுமா
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
நோ பார்க்கிங் — ரூ. 10 ஆயிரம் அபராதத்திலிருந்து தப்பித்த மேயர்... ரூ.100 மட்டும் பெற காரணம் என்ன...?
நோ பார்க்கிங்கிற்கு அபராதமாக ரூ. 10 ஆயிரம் விதிக்கப்பட்டு வரும்நிலையில், மும்பை நகர மேயருக்கு ரூ. 100 மட்டுமே அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பிதிவில் காணலாம்.
நகர்புற சாலைகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக, சட்டவிரோத வாகன நிறுத்தம் இருக்கின்றது. இதனால், போக்குவரத்து ஸ்தம்பிப்பதுடன், பல்வேறு இன்னல்களை வாகன ஓட்டிகள் சந்திக்கும் சூழல் ஏற்படுகின்றது. சில சமயங்களில், நீண்ட போக்குவரத்து சிக்கலைக்கூட இந்த முறையற்ற வாகன நிறுத்தங்கள் ஏற்படுத்துவிடுகின்றன.
போக்குவரத்து விதிமீறல்களாக, ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் செல்வது, மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்குவது, சீட் பெல்ட் அணியாமல் காரை இயக்குவது, உள்ளிட்டவை எப்படி இறுக்கின்றதோ, அதேபோன்றுதான், நோ பார்க்கிங்கும் இந்தியாவில் சட்ட விரோத குற்றமாகப் பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில், சட்டவிரோத பார்க்கிங்கால் அண்மைக் காலங்களாக மும்பை நகரம் பெரும் இன்னல்களைச் சந்தித்து வருகின்றது. இதன்காரணமாக, மும்பை நகரத்தின் சாலைகளில் விதியை மீறி பார்க்கிங் செய்யும் வாகனங்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்க அண்மையில் புதிய திட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டது.
அதனடிப்படையில், முறைகேடாக வாகனங்களை நிறுத்திவிட்டுச் செல்லும் வாகனங்களுக்கு முன்னதாக விதிக்கப்பட்ட ரூ. 100 பதிலாக, ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 23 ஆயிரம் வரை அபராதம் வசூல் செய்ய முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், சிவ சேனா கட்சியின் தலைவரும் அந்நகரத்தின் மேயருமான மஹதேஸ்வரின் கார், நோ பார்க்கிங் விட்டில் சென்றதாக சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது.
மும்பை நகரமே நோ பார்க்கிங்கிற்கு எதிராக போர்க் கொடி தூக்கி வரும்நிலையில், மக்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டிய, அந்நகரத்தின் மேயரே இவ்வாறு செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும், நோ பார்க்கிங் போர்டிற்கு நேர் கீழே, அவர் காரை பார்க் செய்துவிட்டு சென்றுள்ளார்.
இந்த படத்தை நீங்கள் கீழே காணலாம்...
மும்பை நகரப் பகுதியில் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், 146 பொது வாகன நிறுத்துமிடங்கள் உள்ளன. அவை, 34 ஆயிரத்து 808 இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துகின்ற அளவிற்கு இடத்தைப் பெற்றுள்ளன. இருப்பினும், மும்பை நகர வாசிகள் பலர், அவர்களது வாகனங்களை சாலையின் ஓரத்திலேயே நிறுத்திவிட்டு செல்லுவதாக கூறப்படுகின்றது.
இதுவே, அந்த நகரத்தின் சாலைகள் போக்குவரத்து நெரிசலில் சிக்க பிரதான காரணமாக இருக்கின்றது. அதேசமயம், இந்த பிரச்னையானது, அந்நகர போக்குவரத்துத்துறைக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. இதன்காரணமாகவே, சட்டவிரோத பார்க்கிங்கிற்கு தீர்வு காணும் விதமாக உச்சபட்சமாக ரூ.10 ஆயிரம் அபராதத் தொகையாக மாற்றப்பட்டது.
இந்த அபராதமானது, வாகனத்தை பார்க்கிங் விடுவதற்கு இட வசதி இருந்தும், நோ பார்க்கிங்கில் வாகனத்தை விட்டுச் சென்றால், இரு இடங்களுக்கும் உள்ள இடைவெளி வேறுபாட்டைக் கணக்கில்கொண்டு அபராதத் தொகை நிர்ணயிக்கப்பட்டு வருகின்றது.
இதனடிப்படையில், மும்பை நகர மேயருக்கு ரூ. 100 மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றது. ஏனென்றால், அவர் பார்க்கிங் செய்த இடத்திலிருந்து 500 மீட்டருக்குள், எந்தவொரு பொது பார்க்கிங் நிலையமும் இல்லை என கூறப்படுகின்றது. ஆகையால், அவர் ரூ. 10 ஆயிரம் அபராதத்தில் தப்பித்தித்துள்ளார்.
அதேசமயம், மும்பை போலீஸார் அண்மைக் காலங்களாக நோ பார்க்கிங் வாகனங்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். அவ்வாறு, இத்திட்டம் கொண்டுவரப்பட்ட முதல் நாளிலேயே ரூ. 1.18 லட்சம் வரை வசூல் செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது. இதில், 80க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும், இந்த புதிய நடவடிக்கையின் காரணமாக நகரின் பல சாலைகள் சீருற்றநிலையில் காணப்படுவதாக கூறப்படுகின்றது.
நோ பார்க்கிங்கிற்கு வழங்கப்பட்ட அபராதத்தை மேயர் மஹதேஸ்வர் ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகின்றது. இதுகுறித்து அவர் கூறுகையில், "சட்டவிதிமுறைகள் என்பது ஒவ்வொரு குடிமகனும் கடைபிடிக்க வேண்டிய ஒன்று. இதில், மேயர் என்பதால் விதிவிலக்கு கிடையாது. உணவு விடுதிக்கு சென்றபோது, கவனக்குறைவால், ஓட்டுநர் நோ பார்க்கிங்கில் காரை பார்க்கிங் செய்துவிட்டார். இதற்கு நான் வருந்துவதுடன், இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.
-
யமஹா ஆர்.எக்ஸ் பைக்கை வைத்திருப்பவங்க கவனத்துக்கு!! என்ஜின் பவரை அதிகமாக்க சூப்பரான ஐடியா!
-
பேடிஎம் ஆப் மூலம் இனி ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்யலாம்! வந்துவிட்டது புதிய வழி
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!