Just In
- 54 min ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 1 hr ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 2 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 2 hrs ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- News புதுக்கோட்டையிலிருந்து ஷர்மிளா.. அதென்ன வித்தியாசமான "வாசனை"? குழம்பி நின்ற சென்னை சூளைமேடு போலீஸ்
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- Movies தங்கலான் திரைப்பட இசை..ஜிவி பிரகாஷ் என்ன சொல்றாரு பாருங்க.. சம்பவம் இருக்காம்
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
என்னங்க சார் உங்க சட்டம்.. லிப்ட் கொடுத்து உதவிய நல்ல மனிதரை தண்டித்த போலீஸ்காரர் தூக்கியடிப்பு!
மும்பையில் அவசரத்தில் தவித்து கொண்டிருந்தவர்களுக்கு லிப்ட் கொடுத்து உதவிய நபர் மீது நடவடிக்கை எடுத்த போலீஸ்காரர் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது.
மும்பையில் அவசரத்தில் தவித்து கொண்டிருந்தவர்களுக்கு லிப்ட் கொடுத்து உதவிய நல்ல மனிதர் மீது நடவடிக்கை எடுத்த போலீஸ்காரர் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது. பொதுமக்கள் மத்தியில் எழுந்த அதிருப்தி காரணமாக, உயரதிகாரிகள் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.
மும்பை ஏர்ரோலி சர்க்கிள் பகுதியை சேர்ந்தவர் நிதின் நாயர். கடந்த 18ம் தேதியன்று, காரில் அலுவலகம் சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் மழை பெய்து கொண்டிருந்தது. பஸ்கள் அனைத்தும் கூட்ட நெரிசலில் நிரம்பி வழிந்தன.
இதனால் ஒரு முதியவர் உள்பட மூன்று பேர், அவசரமாக அலுவலகம் செல்ல வேண்டும் என்பதற்காக சாலையோரத்தில் நின்று லிப்ட் கேட்டு கொண்டிருந்தனர். அவர்களின் சூழ்நிலையை புரிந்து கொண்ட நிதின் நாயர் மூவரையும் தனது காரில் ஏற்றிக்கொண்டார்.
ஆனால் செல்லும் வழியில், போலீஸ் கான்ஸ்டபிள் அஜீத் பாட்டீல் என்பவர் காரை நிறுத்தி விசாரணை நடத்தினார். தெரியாத நபர்களுக்கு லிப்ட் கொடுப்பது சட்ட விரோதம் எனக்கூறி, நிதின் நாயரின் லைசென்ஸை, கான்ஸ்டபிள் அஜீத் பாட்டீல் பறிமுதல் செய்து விட்டார்.
இதனால் நிதின் நாயர் அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்தார். எனினும் வேறு வழி இல்லாமல், கோர்ட்டிற்கு சென்று 1,500 ரூபாய் அபராதம் செலுத்திய பின்புதான், நிதின் நாயர் தனது லைசென்ஸை மீண்டும் பெற்றார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்திய மோட்டார் வாகன சட்டத்தின் செக்ஸன் 66ன் படி, எந்த ஒரு நபரும் தனியார் வாகனத்தை, பயணிகள் வாகனமாகவோ அல்லது சரக்கு வாகனமாகவோ பயன்படுத்த கூடாது. இந்த சட்டத்தின்படிதான் நிதின் நாயர், கோர்ட்டிற்கு இழுக்கப்பட்டு தண்டிக்கப்பட்டார்.
வரி கட்டுவதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக, சிலர் T-பெர்மிட் பெறாத தங்கள் சொந்த வாகனங்களை டாக்ஸியாக பயன்படுத்துகின்றனர். இதன்மூலம் சட்ட விரோதமாக அவர்கள் பணம் சம்பாதிக்கின்றனர். இதை தவிர்ப்பதற்காகதான் இந்த சட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.
ஆனால் லிப்ட் கேட்ட மூவரிடமும் நிதின் நாயர் பணம் வாங்கவில்லை. அவர்கள் அவசரத்தில் தவித்து கொண்டிருந்ததால், உதவ வேண்டும் என்ற நோக்கத்தில்தான் நிதின் நாயர் லிப்ட் கொடுத்தார். எனினும் கெடுபிடியாக அவரை தண்டித்தது பெரும் சர்ச்சையை உண்டாக்கியது.
நடந்த சம்பவங்களை எல்லாம் நிதின் நாயர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். அந்த போஸ்ட்டில், ''நமது சக மக்களுக்கு நாம் உதவி செய்வதை, நம் நாடு விரும்புவது இல்லை'' என அவர் கிண்டலாக குறிப்பிட்டிருந்தார். இந்த போஸ்ட் பேஸ்புக்கில் வைரலாக பரவியது.
நிதின் நாயர் மீது நடவடிக்கை எடுத்த கான்ஸ்டபிள் அஜீத் பாட்டீல், வாசி போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வருகிறார். அவரின் இத்தகைய நடவடிக்கையால், சாலையில் இனி யாராவது உயிருக்கு போராடினால் கூட யாரும் உதவ முன்வர மாட்டார்கள் என்ற பேச்சு பரவலாக எழுந்தது.
ஒரு நல்ல மனிதர் மீது நடவடிக்கை எடுத்ததால், கான்ஸ்டபிள் அஜீத் பாட்டீல் மீது போலீஸ் உயரதிகாரிகள் கூட அதிருப்தி அடைந்தனர். இதன் காரணமாக கான்ஸ்டபிள் அஜீத் பாட்டீல் தற்போது அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சாதாரண நிர்வாக பிரிவுக்கு அவர் மாற்றம் செய்யப்பட்டு விட்டார்.
அதுமட்டுமல்லாமல் நிதின் நாயர் மீது கான்ஸ்டபிள் அஜீத் பாட்டீல் நடவடிக்கை எடுத்ததற்கு வேறு ஏதேனும் மறைமுக காரணங்கள் உள்ளதா? என்பது குறித்த விரிவான விசாரணையை உடனடியாக தொடங்கும்படி, வாசி போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டருக்கு உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
எனினும் வெறுமனே பணியிட மாற்றத்துடன் நிறுத்தி கொள்ளாமல், கான்ஸ்டபிள் அஜீத் பாட்டீல் மீது இன்னும் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்
-
இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
-
பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!
-
ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!