Just In
- 37 min ago அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- 5 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 5 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 6 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஏசி வசதியுடன் மினி பஸ்கள், எலெக்ட்ரிக் பஸ்கள்... பஸ் ஸ்டாப்பில் கால் கடுக்க காத்திருக்க வேண்டியதும் இல்லை...
பயணிகள் காத்திருக்கும் நேரத்தை குறைப்பதற்காக அதிரடி நடவடிக்கை ஒன்று எடுக்கப்படவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
மஹாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையில் 500 புதிய பஸ்கள் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இதற்கான பணிகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளன. பேருந்துகளுக்காக பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் தற்போது உள்ளது. பயணிகளின் காத்திருக்கும் நேரத்தை குறைக்க வேண்டுமென்றால், அதிக பேருந்துகள் தேவை.
எனவே 500 புதிய பஸ்களை அறிமுகம் செய்யும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. மஹாராஷ்டிரா மாநில அரசு ஊரடங்கில் தற்போது பல்வேறு தளர்வுகளை வழங்கி வருகிறது. இதன்படி கடந்த திங்கள் கிழமையில் இருந்து தனியார் அலுவலகங்கள் மற்றும் இன்னும் பல்வேறு தொழிற்கூடங்கள் திறக்கப்பட்டுள்ளன. எனவே தினமும் சுமார் 2 லட்சம் பயணிகள் பேருந்துகளில் பயணம் செய்கின்றனர்.
பேருந்துகளுக்கான தேவை அதிகரித்துள்ளதால், பயணிகள் மிக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் காணப்படுகிறது. இந்த 500 புதிய பேருந்துகளில், 400 ஏசி மினி பஸ்களும் அடக்கம். ஒரு லாட்டிற்கு தலா 200 என இரண்டு லாட்களில் 400 ஏசி மினி பஸ்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இதுதவிர 100 எலெக்ட்ரிக் பஸ்களும் கொள்முதல் செய்யப்படவுள்ளன.
இந்த எலெக்ட்ரிக் பேருந்துகளிலும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருக்கும். முதல் லாட்டில் 200 ஏசி மினி பஸ்கள் கடந்த ஏப்ரல் மாதமே வந்திருக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் கொரோனா இரண்டாவது அலை உள்ளிட்ட காரணங்களால் தாமதம் ஏற்பட்டு விட்டது. எனினும் பேருந்துகளை அறிமுகம் செய்யும் பணிகள் தற்போது வேகமெடுத்துள்ளன.
புதிய பேருந்துகளின் வருகைக்கு பின் காத்திருப்பு காலம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. எனவே ஊரடங்கில் அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளை வழங்கி வருகின்றன. இதனால் சாலைகளில் தற்போது வாகன போக்குவரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.
குறிப்பாக வட மாநிலங்களில் தற்போது ஓரளவிற்கு இயல்பு நிலை திரும்பி விட்டது. தமிழகம் போன்ற தென் மாநிலங்களிலும் படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டாலும், தேவையில்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றுபவர்கள் மீது காவல் துறையினர் இன்னமும் நடவடிக்கை எடுத்து கொண்டுதான் உள்ளனர்.
எனவே அத்தியாவசிய பணிகள் இருந்தால் மட்டும் வெளியே செல்லுங்கள். அதுவும் தவறாமல் முக கவசம் அணிந்து கொண்டு செல்லுங்கள். கூடுதல் பாதுகாப்பிற்கு இரு முக கவசங்களை அணிவது நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதை பின்பற்றினால், கொரோனா வைரஸிடம் இருந்து தப்பிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை இன்னும் பேருந்து சேவை தொடங்கப்படவில்லை. பேருந்து சேவைக்கு தமிழ்நாடு அரசு எப்போது மீண்டும் அனுமதி அளிக்கும்? என்பதும் உறுதியாக தெரியவில்லை. ஆனால் தமிழ்நாடு விரைவில் கொரோனா வைரஸின் பிடியில் இருந்து மீளும் எனவும், விரைவில் முழுமையான இயல்பு நிலை திரும்பும் எனவும் நம்பலாம்.
Note: Images used are for representational purpose only.
-
மெழுகு சிலை மாதிரி இருக்காங்க... இவங்க அந்த படத்துல நடிச்சவங்களா... வீடியோவை கண் இமைக்காமல் பார்க்கும் இளசுகள்
-
காருக்குள் பறக்கும் வாகனம்.. சாலையில் ஓட்டிக்கலாம்.. தேவைப்பட்டால் வானிலும் பறந்துக்கலாம்!
-
ரோபோ சங்கர் மகள் திருமணத்திற்கு சீதனமா இந்த காரை கொடுத்தாரா? இதோட விலை என்ன தெரியுமா?