Just In
- 3 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 3 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 4 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 5 hrs ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஏசி வசதியுடன் மினி பஸ்கள், எலெக்ட்ரிக் பஸ்கள்... பஸ் ஸ்டாப்பில் கால் கடுக்க காத்திருக்க வேண்டியதும் இல்லை...
பயணிகள் காத்திருக்கும் நேரத்தை குறைப்பதற்காக அதிரடி நடவடிக்கை ஒன்று எடுக்கப்படவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
மஹாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையில் 500 புதிய பஸ்கள் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இதற்கான பணிகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளன. பேருந்துகளுக்காக பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் தற்போது உள்ளது. பயணிகளின் காத்திருக்கும் நேரத்தை குறைக்க வேண்டுமென்றால், அதிக பேருந்துகள் தேவை.
எனவே 500 புதிய பஸ்களை அறிமுகம் செய்யும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. மஹாராஷ்டிரா மாநில அரசு ஊரடங்கில் தற்போது பல்வேறு தளர்வுகளை வழங்கி வருகிறது. இதன்படி கடந்த திங்கள் கிழமையில் இருந்து தனியார் அலுவலகங்கள் மற்றும் இன்னும் பல்வேறு தொழிற்கூடங்கள் திறக்கப்பட்டுள்ளன. எனவே தினமும் சுமார் 2 லட்சம் பயணிகள் பேருந்துகளில் பயணம் செய்கின்றனர்.
பேருந்துகளுக்கான தேவை அதிகரித்துள்ளதால், பயணிகள் மிக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் காணப்படுகிறது. இந்த 500 புதிய பேருந்துகளில், 400 ஏசி மினி பஸ்களும் அடக்கம். ஒரு லாட்டிற்கு தலா 200 என இரண்டு லாட்களில் 400 ஏசி மினி பஸ்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இதுதவிர 100 எலெக்ட்ரிக் பஸ்களும் கொள்முதல் செய்யப்படவுள்ளன.
இந்த எலெக்ட்ரிக் பேருந்துகளிலும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருக்கும். முதல் லாட்டில் 200 ஏசி மினி பஸ்கள் கடந்த ஏப்ரல் மாதமே வந்திருக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் கொரோனா இரண்டாவது அலை உள்ளிட்ட காரணங்களால் தாமதம் ஏற்பட்டு விட்டது. எனினும் பேருந்துகளை அறிமுகம் செய்யும் பணிகள் தற்போது வேகமெடுத்துள்ளன.
புதிய பேருந்துகளின் வருகைக்கு பின் காத்திருப்பு காலம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. எனவே ஊரடங்கில் அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளை வழங்கி வருகின்றன. இதனால் சாலைகளில் தற்போது வாகன போக்குவரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.
குறிப்பாக வட மாநிலங்களில் தற்போது ஓரளவிற்கு இயல்பு நிலை திரும்பி விட்டது. தமிழகம் போன்ற தென் மாநிலங்களிலும் படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டாலும், தேவையில்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றுபவர்கள் மீது காவல் துறையினர் இன்னமும் நடவடிக்கை எடுத்து கொண்டுதான் உள்ளனர்.
எனவே அத்தியாவசிய பணிகள் இருந்தால் மட்டும் வெளியே செல்லுங்கள். அதுவும் தவறாமல் முக கவசம் அணிந்து கொண்டு செல்லுங்கள். கூடுதல் பாதுகாப்பிற்கு இரு முக கவசங்களை அணிவது நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதை பின்பற்றினால், கொரோனா வைரஸிடம் இருந்து தப்பிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை இன்னும் பேருந்து சேவை தொடங்கப்படவில்லை. பேருந்து சேவைக்கு தமிழ்நாடு அரசு எப்போது மீண்டும் அனுமதி அளிக்கும்? என்பதும் உறுதியாக தெரியவில்லை. ஆனால் தமிழ்நாடு விரைவில் கொரோனா வைரஸின் பிடியில் இருந்து மீளும் எனவும், விரைவில் முழுமையான இயல்பு நிலை திரும்பும் எனவும் நம்பலாம்.
Note: Images used are for representational purpose only.
-
ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
-
குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!