Just In
- 2 hrs ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- 5 hrs ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 5 hrs ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 5 hrs ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
Don't Miss!
- Sports எல்லை மீறிய மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்.. பிசிசிஐ தண்டனை அறிவிப்பு.. இனி ஏமாற்று வேலை செய்ய முடியாது
- News அயிலை, கட்லா, ஜிலேபி.. சிவகங்கையில் பரவசம்.. திருப்பத்தூர் கண்மாயில் துள்ளிய மீன்கள்.. செம ஆச்சரியம்
- Lifestyle புதன் மீன ராசிக்கு நேராக செல்வதால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழக்கையில் அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம்...!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Movies குடித்துவிட்டு ஆட்டம் போட்ட ஸ்ரீதிவ்யா.. ஓரம் கட்டிய தமிழ் சினிமா.. செய்யாறு பாலு சொன்ன ஷாக் நியூஸ்!
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
சூப்பர்... இரண்டு போலீஸ்காரர்கள் செய்த நல்ல காரியம்... என்னனு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவீங்க!
இரண்டு போலீஸ்காரர்கள் செய்த நல்ல காரியத்திற்காக பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு குண்டும், குழியுமான சாலைகள் மிக முக்கியமான காரணமாக உள்ளன. குறிப்பாக மும்பை போன்ற பெரு நகரங்களில் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கும் சாலைகளில் உள்ள குழிகள் காரணமாக இருக்கின்றன. இந்த சூழலில், மும்பையில் போக்குவரத்து நெரிசல் பிரச்னையை குறைப்பதற்காக இரண்டு டிராபிக் கான்ஸ்டபிள்கள் குழிகளை தாங்களாகவே அடைத்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட ஊழியர்கள் வராத நிலையில் அவர்களாகவே குழிகளை அடைத்துள்ளனர். சாலையில் உள்ள குழிகளை அடைக்கும் டிராபிக் கான்ஸ்டபிள்களின் புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. கடந்த செவ்வாய் கிழமையன்று இந்த சம்பவம் மும்பையில் நடைபெற்றிருக்கிறது.
இந்த நல்ல காரியத்தை செய்த போலீஸ் கான்ஸ்டபிள்களின் பெயர்கள் சஞ்சய் வாஹா மற்றும் சஹிபுரோ சவான் ஆகும். சாலையின் மைய பகுதியில் இரண்டு பெரிய குழிகள் இருப்பதை இந்த இரண்டு டிராபிக் கான்ஸ்டபிள்களும் பார்த்தனர். இந்த குழிகள் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் பிரச்னை ஏற்பட்டது.
எனவே சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். ஆனால் யாரும் சம்பவ இடத்திற்கு வரவில்லை. எனினும் அங்கு கட்டுமான பணி ஒன்று நடைபெற்று கொண்டிருந்தது. எனவே குழிகளை அடைப்பதற்கு தேவையான பொருட்கள் அங்கு இருந்தன. இந்த பொருட்களை கொண்டு அவர்கள் குழிகளை சரி செய்தனர். இதுகுறித்து தி ஃப்ரீ ப்ரஸ் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.
வாகனங்கள் பிரச்னை இல்லாமல் சென்று வருவதற்கு வசதியாக அவர்கள் குழிகளை சரி செய்தனர். இதன் காரணமாக சம்பந்தப்பட்ட டிராபிக் கான்ஸ்டபிள்களுக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. பொதுவாக மும்பையில் ஆண்டுதோறும் கனமழை பெய்வது வாடிக்கையாகி விட்டது. அதுவும் கடந்த சில வருடங்களாக மும்பையில் அதிக மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக சாலைகள் எளிதில் சேதமடைந்து விடுகின்றன. மும்பை மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் இந்த பிரச்னை இருக்கிறது. ஒப்பந்ததாரர்கள் லாபம் ஈட்டுவதற்காக குறைந்த செலவில், தரம் இல்லாமல் சாலைகளை அமைப்பது இதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் சாலை விபத்துக்கள் காரணமாக சுமார் 1.50 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். இதற்கு வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவதில்லை என்பதை மட்டும் காரணமாக கூறி விட முடியாது. அது ஒரு காரணம் என்னும் நிலையிலும், சாலைகள் மோசமாக இருப்பதும் ஒரு முக்கியமான காரணமாக உள்ளது.
ஆனால் ஒன்றிய அரசு தற்போது சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை குறைப்பதில் மிகவும் தீவிரமாக உள்ளது. இதன் ஒரு பகுதியாக தரமான சாலைகள் அமைக்கப்படுவதை உறுதி செய்வதிலும் ஒன்றிய அரசு தீவிரம் காட்டி வருகிறது. எனவே வரும் காலங்களில் இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை குறையும் என நம்பலாம்.
-
100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
-
டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!
-
இந்த 3 கார்களை தான் மக்கள் மாத்தி, மாத்தி வாங்குறாங்க!! டாடா லிஸ்ட்டிலேயே இல்ல...