Just In
- 2 hrs ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- 2 hrs ago 7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
- 3 hrs ago இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- 4 hrs ago உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பத்திரமா போயிருந்தா இப்படி ஆகியிருக்காது! ஒரு நாள்ல இத்தனை விபத்துகளா... 2020 விபத்து விபரம் வெளியீடு!
கடந்த 2020ம் ஆண்டில் அரங்கேறிய விபத்துகளின் எண்ணிக்கைக் குறித்த விபரம் வெளியாகியுள்ளது. ஒட்டுமொத்தமாக 1.20 லட்சம் கடந்த ஆண்டு சாலை விபத்தில் இறந்து இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த முக்கிய விபரத்தை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 2020ம் ஆண்டின் பெரும் பகுதி ஊரடங்கிலேயே காணப்பட்டது. இதன் விளைவாக மக்கள் நடமாட்டம் மட்டுமின்றி போக்குவரத்தும் மிகக் குறைவாகவே காணப்பட்டது. இந்த நிலையில், கடந்த 2020ம் ஆண்டில் அதிக எண்ணிக்கையில் விபத்துகள் அரங்கேறியிருப்பதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஊரடங்கு விதிகள் மிகக் கடுமையாக கடைப்பிடிக்கப்பட்ட நாட்களிலும் விபத்துகள் மிக அதிகளவில் அரங்கேறியிருப்பதாக வெளியாகியிருக்கும் இந்த தகவல் ஒட்டுமொத்த நாட்டையுமே உலுக்கும் வகையில் அமைந்துள்ளது. வெளியாகியிருக்கும் தகவலின்படி, 2020ம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக 1.20 லட்சம் பேர் சாலை விபத்தில் இறந்திருப்பது தெரிய வந்திருக்கின்றது.
இது நாள் ஒன்றிற்கு 328 பேர் சாலை விபத்தில் இறந்ததற்கு சமம் ஆகும். அரசு வெளியிட்டிருக்கும் தரவுகளின் அடிப்படையிலேயே இந்த அதிர்ச்சிகரமான ரிப்போர்ட் வெளி வந்திருக்கின்றது. அலட்சியத்தின் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளில் 3.92 லட்சம் பேர் உயரிழந்திருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (National Crime Records Bureau) தெரிவித்துள்ளது.
2020ம் ஆண்டில் அரங்கேறிய இருக்கும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் குறைவு என அரசு தெரிவித்துள்ளது. 2019ம் ஆண்டில் 1.36 லட்சம் பேரும், 2018 இல் 1.35 பேரும் சாலை விபத்துகளில் இறந்திருக்கின்றனர் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
ஒன்றிய அரசு மேற்கொண்ட கணிசமான நடவடிக்கைகளின் காரணத்தினால் கடந்த ஆண்டில் சற்று விபத்துகளின் எண்ணிக்கைக் குறைந்திருக்கின்றது. ஆம், விபத்துகளைக் குறைக்கும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. குறிப்பாக, போக்குவரத்து விதிமீறல்களுக்கு பல மடங்கு அபராதங்களை உயர்த்தியது மற்றும் விபத்து அதிகம் நடைபெறும் இடங்களைக் கண்டறிந்து அந்த பகுதியில் விபத்தைக் குறைக்கும் விதமான முயற்சிகளை எடுத்தது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
2020ம் ஆண்டில் அரங்கேறிய ஒட்டுமொத்த விபத்தில் ஹிட் அண்ட் ரன் வழக்குகள் மட்டும் 41,196 என கூறப்படுகின்றது. சாலையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியவர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாக இருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
அதேவேலையில் இதுவும் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் குறைவு என அரசு புள்ளி விபரங்களின் வாயிலாக தெரிவித்துள்ளது. 2019ம் ஆண்டில் 47,504 ஹிட் அண்ட் ரன் வழக்குகளும், 2018ம் ஆண்டில் 47,028 ஹிட் அண்ட் ரன் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.
தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி, 2020ம் ஆண்டில் அரங்கேறியிருக்கும் ஹிட் அண்ட் ரன் வழக்கானது நாள் ஒன்றிற்கு 112 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதற்கு சமம் ஆகும். இதேபோல், அலட்சியமான மற்றும் ரேஷ் டிரைவால் ஏற்பட்ட விபத்துகளின் எண்ணிக்கைக் குறித்த தரவுகளும் வெளியிடப்பட்டுள்ளன.
ரேஷ் டிரைவ் மற்றும் அலட்சியமாக வாகனத்தை ஓட்டியதால் 2020 ஆண்டில் ஒட்டுமொத்தமாக 1.30 லட்சம் விபத்துகள் ஏற்பட்டிருக்கின்றன. 2019 ஆம் ஆண்டில் இது 1.60 லட்சமாகவும், 2018ம் ஆண்டில் இது 1.66 லட்சமாகவும் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடுமையான காயங்கள்; 2020 ஆண்டில் விபத்துகளினால் கடுமையான காயம் அடைந்தோரின் எண்ணிக்கை 85,920 ஆக உள்ளது. இது 2019ம் ஆண்டில் 1.12 லட்சமாகவும், 2018 இல் 1.08 லட்சமாகவும் இருந்தது. இவற்றுடன், ரயில் விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை பற்றிய தகவலையும் அரசு வெளியிட்டிருக்கின்றது.
2020ம் ஆண்டில் 52 பேர் அஜாக்கிரதையாக தண்டவாளங்களைக் கடக்க முயன்ற போது ரயில் மோதி பலியாகியிருக்கின்றனர். கடந்த 2019ம் ஆண்டைக் காட்டிலும் இது மிகக் குறைவு என கூறிவிட முடியாது. 2019ல் ஒட்டுமொத்தமாக 55 பேர் பலியாகியிருக்கின்றனர். அதேசமயம், 2018ம் ஆண்டில் 35 பேர் மட்டுமே ரயில் மோதி இறந்திருக்கின்றனர்.
-
2019ல் வேணும்னே கடலில் மூழ்கடிக்கப்பட்ட விமானம்.. இப்ப அதோட நிலைமை என்ன? ஏன் அதை கடலில் தள்ளி விட்டாங்க?
-
புதுசா வாங்கி காசை வேஸ்ட் பண்ணாதீங்க! பைக் ஓட்டி படிக்க செகன்ட் ஹேண்டில் வாங்க பெஸ்ட் பைக்குகள் இது தான்!
-
கலாநிதி மாறன் மகள் காவ்யா வைத்திருக்கும் இந்த காரோட விலை 12கோடியா! ஒற்றை குடும்பத்திடம் மட்டும் இவ்ளோ கார்களா!