Just In
- 49 min ago காரை விட அவங்கதான் அழகா இருக்காங்க! விலை உயர்ந்த எலெக்ட்ரிக் வண்டியை வாங்கனது அவங்களா! சொக்கி போன ரசிகர்கள்!
- 1 hr ago 35 வயதில் 1.5 கோடி ரூபாய் காருக்கு ஓனராகி இருக்கும் பிரபல சினிமா பாடகி!! புது காரில் கணவரோடு ஒரு சின்ன டிரைவ்!
- 2 hrs ago ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களுக்கு பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
- 3 hrs ago 100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
Don't Miss!
- Movies Actress Parvathy Thiruvothu: இயக்குநராக களமிறங்கும் மரியான் பட நாயகி.. அட இவங்கல்லாம் ஹீரோவா!
- News நாளை தீர்ப்பு நாள்.. அரசியல் அதிகாரத்தால் எதையும் மாற்றலாம்.. ஒரு விரல் புரட்சிக்கு ரெடியா?
- Finance மாதம் ரூ. 8,150 முதலீட்டில் .. ரூ. 1,00,000 பென்ஷன் பெற முடியும்.. எப்படின்னு பாருங்க!
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
டிரம்ப் விமானத்திற்கு இணையான கவச பாதுகாப்புடன் வரும் பிரதமர் விமானம்!
அமெரிக்க அதிபரின் விமானத்தில் பயன்படுத்தப்படும் ஏவுகணை கவச பாதுகாப்பு தொழில்நுட்பத்தை இந்திய பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்காக வாங்கப்பட்ட புதிய விமானங்களுக்கு வழங்க இருப்பதாக அமெரிக்க பாதுகாப்பு துறை தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
நம் நாட்டின் பிரதமர் மற்றும் ஜனாதிபதி பயன்பாட்டிற்காக போயிங் 747 என்ற இரண்டு அடுக்கு ஜம்போ விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்த விமானங்களில் பல நவீன பாதுகாப்பு தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. இந்த இரு விமானங்களையும் ஏர் இந்தியா நிறுவனம் பராமரித்து வருகிறது. இந்திய விமானப்படையை சேர்ந்த சிறப்பு பயிற்சி பெற்ற பைலட்டுகள் மூலமாக இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில், தற்போது பயன்பாட்டில் உள்ள இரண்டு விமானங்களும் பழமையாகிவிட்டதோடு, நவீன பாதுகாப்பு அம்சங்கள் கொண்டதாக இல்லை. இதனையடுத்து, பிரதமர் மற்றும் ஜனாதிபதி பயன்பாட்டிற்காக பழமையாகிவிட்ட காரணத்தால், அதிநவீன பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய விமானங்களை வாங்க மத்திய பாதுகாப்புத் துறை முடிவு செய்தது.
அதன்படி, போயிங் 777 என்ற மிக பிரம்மாண்டமான இரண்டு விமானங்களை மத்திய பாதுகாப்புத் துறை ஆர்டர் செய்தது. இந்த இரண்டு விமானங்களும் கடந்த ஆண்டு சுதந்திர தினத்திற்கு முன்பாக டெலிவிரி பெறப்பட்டன.
இந்த இரண்டு விமானங்களும் தற்போது பிரதமர், ஜனாதிபதி பயன்பாட்டிற்கு தக்கவாறு பல்வேறு அம்சங்களுடன் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இந்த நிலையில், ஏவுகணை தாக்குதல் உள்ளிட்ட அச்சுறுத்தல்களிலிருந்து விமானத்தை பாதுகாப்பதற்கான அதிநவீன தொழில்நுட்பத்தை வழங்குமாறு அமெரிக்க பாதுகாப்புத் துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு தற்போது இரண்டு புதிய விமானங்களுக்கான ஏவுகணை தாக்குதலிருந்து தப்புவதற்கான கவச தொழில்நுட்பத்தை இந்தியாவிற்கு விற்பனை செய்ய இருப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையானது அந்நாட்டு நாடாளுமன்றத்தின் ஈரவை கூட்டுக் குழுவிடம் தெரிவித்துள்ளது.
உலகின் அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் கொண்டதாக கருதப்படும் அமெரிக்க அதிபர் பயன்படுத்தும் ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் பயன்படுத்தப்படும் அதே தொழில்நுட்பத்தைத்தான் தற்போது இந்திய பிரதமர், ஜனாதிபதிக்கான பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட இருக்கும் விமானங்களிலும் பயன்படுத்ததப்பட இருக்கிறது.
இந்த கவச தொழில்நுட்பத்தில் Large Aircraft Infrared Countermeasures (LAIRCM) and Self-Protection Suites (SPS) என்ற கவச பாதுகாப்பு தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. இதன்மூலமாக, ஏவுகணை தாக்குதல் தொடர்பாக விமானத்தை இயக்கும் பைலட்டுகளுக்கு உடனடி எச்சரிக்கை தரும்.
அடுத்து, ஏவுகணை தாக்குதலை முறியடிக்கும் பணிகளையும் தானியங்கி முறையில் இந்த எஸ்பிஎஸ் தொழில்நுட்பம் செய்யும். அதாவது, தாக்குதலை முறியடிக்க மனித முயற்சி தேவையிருக்காது. தற்போது பயன்படுத்தும் தற்காப்பு பாதுகாப்பு நுட்பத்தைவிட இந்த புதிய கவச பாதுகாப்பு மிக துல்லியமாக இருப்பதுடன், தேவையற்ற எச்சரிக்கைகளையும் தவிர்க்கும்.
இரண்டு போயிங் 777 விமானங்கள் மற்றும் கவச பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் ஆகியவற்றுடன் சேர்ந்து ரூ.5,900 கோடி அடக்க விலையில் பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கான புதிய ஏர் இந்தியா ஒன் விமானங்கள் வர இருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது பயன்பாட்டில் உள்ள ஏர் இந்தியா ஒன் விமானங்கள் பிரதமர் மற்றும் ஜனாதிபதி பயன்படுத்தாதபோது, வர்த்தக ரீதியில் பயணிகள் சேவைக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால், புதிய ஏர் இந்தியா ஒன் விமானங்கள் வர்த்தக பயன்பாட்டிற்கு ஈடுபடுத்தப்படாது என்று தகவல்கள் கூறுகின்றன.
இந்த புதிய தொழில்நுட்பத்தை வழங்குவதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசு ஒப்புதல் வழங்கியிருப்பதன் மூலமாக, இந்திய - அமெரிக்க இடையிலான நல்லுறவு மேலும் வலுப்பெற்றுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்த தொழில்நுட்பத்தை இந்தியா பயன்படுத்துவதற்கும், தெரிந்து கொள்வதிலும் எந்த பிரச்னையும் இல்லை என்றும் பென்டகன் தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கு ராணுவ தளவாடங்களை விற்பனை செய்யும் இரண்டாவது பெரிய நாடு அமெரிக்கா என்பது கவனிக்கத்தக்கது.
கடந்த 2014ம் ஆண்டு நெதர்லாந்து நாட்டில் இருந்து மலேசியா சென்று கொண்டிருந்த எம்-17 என்ற விமானம் ரஷ்ய ஆதரவாளர்கள் நிறைந்த கிழக்கு உக்ரைன் பகுதியில் தீவிரவாதிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது. உலகையே உலுக்கிய இந்த சம்பவத்தில், அதில் பயணித்த 298 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், அதே வழித்தடத்தில் சில நிமிட இடைவெளியில் வந்து கொண்டிருந்த பிரதமர் மோடியின் விமானம் மயிரிழையில் தப்பியது. இதையடுத்து, ஏவுகணை தாக்குதலிலிருந்து தப்புவதற்கான கவச பாதுகாப்புடன் புதிய விமானங்களை வாங்குவதற்கு மத்திய பாதுகாப்புத் துறை முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
-
35 கிமீ மைலேஜ் குடுக்கற மாருதி கார்லாம் இந்தியால இருக்குதா! விலை இதை விட ஆச்சரியப்படுத்துதே! அவ்ளோ கம்மி!
-
மாருதி கார்களை வாங்க எப்போதுமே ஒரு பெரிய கூட்டம் இருக்கு!! மார்ச் மாதத்தில் நடந்தது என்ன?
-
900 கி.மீ தூரத்தை வெறும் 3.5 மணி நேரத்தில் கடந்து செல்லலாம்! இந்தியாவின் வேகமான புல்லட் ரயில் இது தான்!