Just In
- 47 min ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 1 hr ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 2 hrs ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- 3 hrs ago ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
Don't Miss!
- News இது என்ன ஜனநாயகம்.. தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் நிதி முடக்கப்படுகிறது.. தலைவர்கள் குமுறல்
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Movies யாரும் என்னை அழைக்கவில்லை.. நான் தயாராக இருந்தேன்.. ஓஹோ இப்படியும் நடந்திருக்கா.. சுகன்யா பாவம்தான்
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
யாருக்குமே தெரிவதில்லை... இதை செய்ய தவறினால் உயிருக்கே ஆபத்து... மீறினால் அபராதம் எவ்வளவு தெரியுமா?
காரில் பயணிக்கும்போது நீங்கள் இதை செய்ய தவறினால் உங்கள் உயிருக்கே ஆபத்து ஏற்படும். புதிய மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி இதற்கான அபராதம் எவ்வளவு? என்பது குறித்த விரிவான தகவல்கள் அனைத்தையும் இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் கார்களில் பயணம் செய்யும் பெரும்பாலானோர் சீட் பெல்ட் அணிவது கிடையாது. சீட் பெல்ட் அணிவதன் முக்கியத்துவத்தை அவர்கள் உணராததே இதற்கு காரணம். நகர எல்லைக்குள் சீட் பெல்ட் அணிவது தேவையற்றது என பலர் நினைத்து கொண்டுள்ளனர். நகர எல்லைகளில் கார் மிகவும் மெதுவாகதானே செல்கிறது? பின் ஏன் சீட் பெல்ட் அணிய வேண்டும்? என அவர்கள் நினைக்கின்றனர்.
ஆனால் மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் கார் சென்று கொண்டிருக்கும் போது நடைபெறும் அனைத்து விபத்துக்களுமே மிகவும் அபாயகரமானவைதான். அவ்வளவு ஏன்? அதற்கும் கீழான வேகத்தில் கார் சென்று கொண்டிருக்கும்போது நடைபெறும் விபத்துக்களும் கூட மிக கடுமையான பாதிப்பை ஏற்படுத்த கூடியவை.
இந்த நேரத்தில் நீங்கள் சீட் பெல்ட் அணியாமல் இருந்தால், காரின் டேஷ் போர்டு உள்ளிட்ட இதர பாகங்களில் உங்கள் உடல் மோதி கடுமையான காயங்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவேதான் சீட் பெல்ட் அணிவது அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரை காரில் பயணம் செய்யும் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்ற விதிமுறை அமலில் உள்ளது.
அதாவது முன் இருக்கையில் அமர்ந்திருப்பவர்கள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்திருப்பவர்கள் என அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும். ஆனால் இந்த விதிமுறையை யாரும் பின்பற்றுவதே கிடையாது. முன் இருக்கையை போல் பின் இருக்கையில் அமர்ந்திருப்பவர்களும் சீட் பெல்ட் அணிவது மிகவும் அவசியமானது.
ஏனெனில் கார் அதிவேகத்தில் பயணித்து கொண்டிருக்கும்போது, சாலை விபத்து நிகழ்ந்தால், முன் இருக்கையில் அமர்ந்திருப்பவர்கள் மீது பின் இருக்கையில் அமர்ந்திருப்பவர்கள் மோத நேரிடும். இது கடுமையான பின் விளைவுகளை ஏற்படுத்தும். ஆனால் பின் இருக்கையில் அமர்ந்திருப்பவர்கள் சீட் பெல்ட் அணிந்து பயணித்தால் இந்த அபாயங்களை தவிர்க்கலாம்.
இந்தியாவில் இதற்கு முன்பாக நடைபெற்ற சில சாலை விபத்துக்களில், சீட் பெல்ட் அணியாத பின் இருக்கை பயணிகள் காரின் விண்டு ஷீல்டு மீது மோதி படுகாயமடைந்த சம்பவங்களும் கூட நடைபெற்றுள்ளன. ஆனால் இவ்வளவு நன்மை பயக்கும் சீட் பெல்ட்டை காரில் பயணிக்கும் பெரும்பாலானவர்கள் அணிவது கிடையாது.
சீட் பெல்ட் அணிவதை பலர் அசௌகரியமாக கருதுகின்றனர். எனவே சீட் பெல்ட் அணிவதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன் பயனாக முன் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்பவர்கள் மட்டும் ஓரளவிற்கு சீட் பெல்ட் அணிய தொடங்கினர். ஆனால் பின் இருக்கை பயணிகளை சீட் பெல்ட் அணிய வைக்க முடியவில்லை.
உண்மையில் முன் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்பவர்கள் மட்டும் சீட் பெல்ட் அணிந்தால் போதும் என்றுதான் பலர் நினைத்து கொண்டுள்ளனர். பின் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்பவர்களும் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்ற ஒரு விதிமுறை இருப்பதே பலருக்கும் தெரிவதில்லை. இதனை போலீசாரும் முறையாக அமல்படுத்தவில்லை என்றும் கூட சொல்லலாம்.
ஏனெனில் கார்களை சோதனை செய்யும்போது, முன் இருக்கை பயணிகள் சீட் பெல்ட் அணிந்துள்ளார்களா? என்று மட்டுமே போலீசார் பார்ப்பார்கள். பின் இருக்கை பயணிகளை அவ்வளவாக கண்டு கொள்ள மாட்டார்கள். இதன் காரணமாக பின் இருக்கை பயணிகள் சீட் பெல்ட் அணிய தேவையில்லை என்ற எண்ணம் அனைவரின் மனதிலும் உருவாகி விட்டது.
ஆனால் இனி மேல் நீங்கள் காரில் பயணம் செய்யும்போது கட்டாயம் சீட் பெல்ட் அணிந்து கொள்ளுங்கள். இல்லாவிட்டால் நீங்கள் கண்டிப்பாக அபராதம் செலுத்த வேண்டிய சூழல் உருவாகும். புதிய மோட்டார் வாகன சட்டத்தின் விதிமுறைகள் கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்திருப்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
இதில் போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் மிக கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன. புதிய மோட்டார் வாகன சட்ட விதிமுறைகளின்படி, காரில் சீட் பெல்ட் அணிந்து பயணிக்காவிட்டால், நீங்கள் 1,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டியது வரும். இது பின் இருக்கை பயணிகளுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவை பொறுத்தவரை சீட் பெல்ட் இல்லாமல் கார்களை விற்பனை செய்வது சட்ட விரோதம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. கார்களில் எத்தனை இருக்கைகள் இருக்கிறதோ அதே எண்ணிக்கையிலான சீட் பெல்ட்களும் காரில் இருக்க வேண்டும் என விதிமுறைகள் தெரிவிக்கின்றன. இதனை கார் உற்பத்தியாளர்கள் கட்டாயமாக வழங்கியே ஆக வேண்டும்.
இதனிடையே காரில் சீட் பெல்ட் அணியாமல் பயணம் செய்பவர்களை குறி வைத்து பிடிக்க சண்டிகர் போக்குவரத்து போலீசார் முடிவு செய்துள்ளனர். பின் இருக்கை பயணிகளும் சீட் பெல்ட் அணிய வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். சீட் பெல்ட் அணியாவிட்டால், புதிய மோட்டார் வாகன சட்ட விதிமுறைகளின் படி அவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் எனவும் சண்டிகர் போலீசார் கூறியுள்ளனர்.
இதேபோல் இந்தியா முழுக்க இனி சீட் பெல்ட் அணியாமல் கார்களில் பயணம் செய்பவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும். இது பின் இருக்கை பயணிகளுக்கும் பொருந்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். முன்பு போல் பின் இருக்கையை போலீசார் கவனிக்க மாட்டார்கள் என அலட்சியமாக இருந்து விட வேண்டாம். இல்லாவிட்டால் நீங்கள் அபராதம் செலுத்த வேண்டியது வரும்.
அத்துடன் உங்கள் உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம். அதேபோல் நீங்கள் சீட் பெல்ட் அணியாவிட்டால், கார்களில் ஏர் பேக் வேலை செய்யாது என்பதும் குறிப்பிடத்தக்கது. விபத்து நடைபெறும் சமயங்களில், ஏர் பேக்குகள்தான் காரில் பயணம் செய்பவர்களின் உயிரை காப்பாற்றுகின்றன.
-
6ம் மாசத்துக்கு அப்புறம் எப்பே வேணும்னாலும் இந்த காரை இந்தியாவில் எதிர்பார்க்கலாம்! சிட்ரோன் பசால்டு வெளியீடு!
-
ரோட்டோர ஒர்க் ஷாப்பில் 8 கோடி ரூபாய் ரோல்ஸ் ராய்ஸ் கார்! வாங்கறது பெருசு இல்ல! மெயின்டெயின் பண்றதுதான் பெருசு!
-
தேர்தல் அதிகாரி சோதனை செய்யாமல் விட்ட எம்எல்ஏ காரில் சட்டவிரோதமாக இவ்வளவு விஷயங்கள் இருந்ததா?