Just In
- 2 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 3 hrs ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 3 hrs ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 7 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பார்க்கிங் விதிமீறல் குறித்து புகார் அளிப்பவர்களுக்கு சன்மானம் வழங்க திட்டம்... எந்த ஊரில் தெரியுமா?
பார்க்கிங் தொடர்பான விதிமுறை மீறல்களில் ஈடுபடுபவர்கள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு சன்மானம் வழங்கும் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
ஒரு சிலர் தங்கள் வாகனங்களை, தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப எங்கு வேண்டுமானாலும் பார்க்கிங் செய்து கொள்கின்றனர். வாகனங்களை பார்க்கிங் செய்யக்கூடாது என 'நோ பார்க்கிங்' பலகை வைத்திருக்கும் இடங்களில் கூட வாகனங்களை நிறுத்தி கொள்வது அவர்களின் வாடிக்கையாக இருந்து வருகிறது.
அரசு வகுத்துள்ள விதிமுறைகளை மீறி தங்கள் இஷ்டத்திற்கு வாகனங்களை எங்கு வேண்டுமானாலும் பார்க்கிங் செய்பவர்களால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. இத்தகைய நபர்களை கட்டுப்படுத்துவதற்காக கடுமையான அபராத தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் ஒரு சிலர் தொடர்ந்து சட்டத்திற்கு புறம்பாக வாகனங்களை பார்க்கிங் செய்து கொண்டுள்ளனர்.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!
எனவே இந்த பிரச்னைக்கு முடிவு கட்டுவதற்காக, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தற்போது புதிய திட்டம் ஒன்று முன்மொழியப்பட்டுள்ளது. இதன்படி முறைகேடாக வாகனங்களை பார்க்கிங் செய்துள்ளவர்கள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு, சன்மானம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. முறைகேடாக வாகனத்தை பார்க்கிங் செய்தவரிடம் இருந்து வசூலிக்கும் அபராத தொகையின் ஒரு பகுதி சன்மானமாக வழங்கப்படும்.
சட்டத்திற்கு புறம்பாக வாகனங்கள் தவறாக பார்க்கிங் செய்யப்படுவதை தடுப்பதற்காகவும், அந்த தவறை செய்பவர்கள் குறித்து தகவல் அளிக்க பொதுமக்கள் பலர் முன்வருவதை ஊக்குவிப்பதற்காகவும் நியூயார்க் நகரில் இந்த திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. இதன் மூலம் பார்க்கிங் தொடர்பான விதிமுறை மீறல்கள் கட்டுக்குள் வரும் என அதிகாரிகள் நம்புகின்றனர்.
இந்த திட்டத்தின்படி, பார்க்கிங் தொடர்பான விதிமுறை மீறல்கள் குறித்து புகார் அளிக்கும் நபர்களுக்கு, விதிமுறையை மீறிய நபர் செலுத்தும் மொத்த அபராத தொகையில் 25 சதவீத தொகை சன்மானமாக வழங்கப்படும். நியூயார்க் நகரில், பார்க்கிங் தொடர்பான விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகை தற்போது 115 அமெரிக்க டாலர்களாக உள்ளது.
இதனை 175 அமெரிக்க டாலர்களாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில், 25 சதவீத தொகையை புகார் அளிக்கும் நபர் சன்மானமாக பெறுவார். 175 அமெரிக்க டாலர்கள் என்பது இந்திய மதிப்பில் சுமார் 13 ஆயிரம் ரூபாய் ஆகும். எனவே புகார் அளிக்கும் நபருக்கு இந்திய மதிப்பில் சுமார் 3,250 ரூபாய் சன்மானமாக கிடைக்கும்.
கண்ட கண்ட இடங்களில் வாகனங்களை பார்க்கிங் செய்வதால், பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதில், போக்குவரத்து நெரிசல் மிக முக்கியமான பிரச்னையாக உள்ளது. ஏற்கனவே பெரு நகரங்களின் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் பிரச்னை பூதாகரமாகி வருகிறது. போதாக்குறைக்கு விதிமுறைகளுக்கு எதிராக வாகனங்கள் சாலையை அடைத்து கொள்வதால், போக்குவரத்து நெரிசல் இன்னும் அதிகமாகி விடுகிறது.
இதனால் மற்ற வாகன ஓட்டிகளுக்கு மட்டுமல்லாது, சில சமயங்களில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களுக்கும் தாமதம் ஏற்படுகிறது. பார்க்கிங் செய்யக்கூடாது என வரையறுக்கப்பட்டுள்ள இடங்களில் வாகனங்களை நிறுத்தினால், அது சொந்த காசில் சூனியம் வைத்து கொள்வதற்கு சமம். உதாரணத்திற்கு பரபரப்பாக இருக்கும் சாலையோரத்தில் காரை நிறுத்தினால், மற்ற வாகனங்களால் அந்த காரில் கீறல் விழுவது போன்ற பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
Note: Images used are for representational purpose only.
-
குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
-
ஒருத்தர், ரெண்டு பேர் இல்ல, ஒரு குடும்பத்தையே ஏற்றி செல்லலாம்!! ரூ.11.40 லட்சத்தில் கிடைக்கும் பொலேரோ கார்...
-
கோவையில் இருந்து கேரளாவுக்கு இந்த ரயில்ல போங்க.. எக்ஸ்பீரியன்ஸ் இன்னும் செம்மையா இருக்கும்! அப்படி என்ன ரயில்?