Just In
- 21 min ago எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
- 43 min ago ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
- 2 hrs ago தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
- 5 hrs ago இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
Don't Miss!
- News வெறுப்பு பிரச்சாரத்திற்கு சட்டத்தில் என்ன தண்டனை? தேர்தல் ஆணையம் நடுநிலை தவறுகிறதா?
- Finance 15-15-15 ரூல் பயன்படுத்தி ரூ. 1 கோடி பெறுவது எப்படி? இதை நோட் பண்ணுங்க!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Movies தனுஷ் - ஐஸ்வர்யா டைவர்ஸ் விஷயம்.. சிம்புவ ஏன் இதுல இழுக்குறீங்க.. போட்டுத்தாக்கிய பிரபலம்
- Technology Samsung போன்களில் திடீரென தோன்றும் பச்சை கோடுகள்.. இலவசமாக Display-வை மாற்றுவது எப்படி?
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
முதல் மழைக்கே இப்படியா... புதியதாக போடப்பட்ட ரிஷிகேஷ்- கங்கோத்ரி நெடுஞ்சாலை மழையால் பெருத்த சேதம்!!
ரிஷிகேஷ்-கங்கோத்ரி பகுதியில் சமீபத்தில் புதியதாக கட்டப்பட்ட நெடுஞ்சாலை பலத்த கனமழையின் காரணமாக பல இடங்களில் சேதமடைந்துள்ளது. இதுகுறித்து நமக்கு கிடைத்துள்ள விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.
உத்தரகாண்ட் மாநிலம் சம்பா மாவட்டத்தில் சார் தாம் என்கிற திட்டத்தின் கீழ் என்.எச்2 என்ற தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் சில பகுதிகள் சமீபத்தில் தான் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டன.
இந்த நிலையில் இந்த சாலை அங்கு பெய்துவரும் கனமழையின் காரணமாக பல இடங்களில் சேதமடைந்துள்ளதாகவும், இதனால் புதியதாக கட்டப்பட்ட இந்த சாலைக்குள் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
மஜ்யுர் என்கிற கிராமத்தில் இந்த புதிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இவை சேதமடைந்திருப்பது குறித்து மஜ்யுர் கிராமத்தின் முன்னாள் தலைவர் மஹாவீர் நெகி அளித்துள்ள பேட்டியில், எந்தவொரு வானிலையையும் தாங்கக்கூடியதாக சொல்லப்பட்ட சாலை சந்தித்த முதல் மழைக்கே பல இடங்களில் சேதமடைந்துள்ளது.
மஜ்யுர் மற்றும் குல்டி கிராமங்களை சம்பா நகரத்துடன் இணைக்கும் இந்த நெடுஞ்சாலை விரிவாக்கத்தில் பல அதிகாரிகள் தொடர்ந்து ஈடுப்பட்டு வருகின்றனர் என கூறினார். இதேபோல் குல்டி கிராம பகுதியிலும் புதிய நெடுஞ்சாலை சேதமைடைந்துள்ளது.
இந்த நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளில் ஒரு பகுதியாக 440மீ நீளத்தில் சுரங்க பாதை ஒன்றும் இந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சுரங்கத்தை தற்போதைக்கு பயன்படுத்த முடியாத அளவிற்கு சுரங்கத்தில் இருந்து வெளியே சாலை பாதிப்படைந்துள்ளது.
சேதமைடைந்த சாலையை மீண்டும் பயன்படுத்த இயலாது. மழை தொடர்ந்து அங்கு பெய்து கொண்டிருப்பதால் நிலைமை இன்னும் மோசமாகும் சூழல் நிலவுகிறது. 440மீ-இல் அமைக்கப்பட்டுள்ள சுரங்கம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
புதிய நெடுஞ்சாலை மூடப்பட்டதால் அந்த வழியாக செல்ல இருந்த வாகன ஓட்டிகள் வேறு சாலைக்கு திருப்பிவிடப்பட்டு வருகின்றனர். இதனால் ரிஷிகேஷ்- கங்கோத்ரி நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மோசமான தரத்தில் போடப்படும் சாலைகளே இவ்வாறான பிரச்சனைகளுக்கு காரணமாகும். பல வருடங்கள் பயன்படுத்தப்பட்ட சாலையாக இருந்தாலும் பரவாயில்லை, புதியதாக போடப்பட்ட சாலை சில நாட்களிலேயே இவ்வாறு மழையால் சேதமடைந்திருப்பது சம்பா மாவட்ட மக்களை கவலையுற செய்துள்ளது.
இதேபோன்று சமீபத்தில் கூட அருணாச்சல பிரதேசத்தில் மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு நெடுஞ்சாலை போக்குவரத்து தடைப்பட்டு போனது. தற்போது ரிஷிகேஷ்-கங்கோத்ரி நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள இந்த சேதங்களினால் சார் தம் யத்ரா திட்டத்தின் மீதே மக்களுக்கு சந்தேகம் எழ ஆரம்பித்துள்ளது.
-
டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
-
மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
-
சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!