Just In
- 17 min ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 1 hr ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- 2 hrs ago ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- 2 hrs ago 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
Don't Miss!
- Movies மண்டைமேல இருக்க கொண்டையை மறைங்க பாஸ்.. வாரிசு நடிகையால் வந்த வினை.. அட்ஜெஸ்ட் செய்யும் இயக்குநர்?
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- News நான் கேட்டது ‘அவள்’.. கடவுள் கொடுத்தது ‘அவல்’.. சரி சாப்டுட்டு வேற வேலையை பார்ப்போம்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
சூப்பர்... டோல்கேட்களில் வண்ண கோடுகளை வரைய திட்டம்... கோட்டை தாண்டி வாகனங்கள் நின்றால் கட்டணம் இல்லை...
சுங்க சாவடிகளில் கடுமையான நெரிசல் நிலவுவதால், வாகனங்கள் இலவசமாக செல்லும் வகையில், புதிய திட்டம் ஒன்று அமலுக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
சுங்க சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்கு இந்தியா முழுவதும் அனைத்து வாகனங்களுக்கும் தற்போது பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறை காரணமாக சுங்க சாவடிகளில் தற்போது பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன. சுங்க சாவடிகளில் உள்ள லேன்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதுதான் முக்கியமான பிரச்னையாக உள்ளது.
சுங்க சாவடிகளில் வாகனங்கள் காத்திருக்க வேண்டியதில்லை என்பதுதான் பாஸ்டேக்கின் முக்கியமான பயன்பாடு. ஆனால் அதற்கு மாறாக தற்போது வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன. ஒரு சில சுங்க சாவடிகளில் வாகனங்கள் அரை மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் விரக்தியடைகின்றனர்.
ஒரு சில சுங்க சாவடிகளில் சென்சார்களால் பாஸ்டேக்கை ஸ்கேன் செய்ய முடியவில்லை. இதுபோன்ற தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக வாகன ஓட்டிகள் காத்து கிடக்க வேண்டியுள்ளது. எனவே இந்த பிரச்னைக்கு முடிவு கட்டுவதற்காக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தற்போது புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த புதிய திட்டத்தின் கீழ், சுங்க சாவடிகளில் உள்ள ஒவ்வொரு லேனிலும் வண்ண கோடுகளை வரைவதற்கு ஆலோசிக்கப்பட்டு வருகிறது. சுங்க சாவடிகளில் இருந்து குறிப்பிட்ட தொலைவில் இந்த கோடுகள் வரையப்பட்டிருக்கும். வரிசையில் நிற்கும் வாகனங்கள் இந்த கோட்டை தொட்டு விட்டால், டோல்கேட் ஆபரேட்டர் அந்த லேனில் உள்ள பூம் பேரியரை உடனடியாக திறந்து விட்டு விட வேண்டும்.
அத்துடன் அந்த லேனில் நிற்கும் வாகனங்களை இலவசமாக பயணம் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும். இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் தற்போது இந்த திட்டம் ஆலோசனை அளவில்தான் உள்ளது. இந்த திட்டத்தை உருவாக்கும் பணிகளில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
அதே சமயம் இந்த புதிய திட்டத்தின் கீழ் வரையப்படும் கோடுகள், சுங்க சாவடிக்கு சுங்க சாவடி மாறுபடலாம் என கூறப்படுகிறது. சுங்க சாவடிகளில் இருந்து எவ்வளவு தொலைவில் இந்த கோடுகளை வரைவது என்பது பல்வேறு காரணிகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். இதில், சம்பந்தப்பட்ட சுங்க சாவடியில் எவ்வளவு லேன்கள் உள்ளது? போன்ற காரணிகள் முக்கியமானதாக இருக்கும்.
இந்த புதிய திட்டம் மூலம், சுங்க சாவடிகளில் வாகன ஓட்டிகள் தேவையில்லாமல் நீண்ட நேரம் நிற்பது தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுங்க சாவடிகளில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு இந்த திட்டம் உதவி செய்யும். ஆனால் இந்த புதிய திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும்? என்பது உறுதியாக தெரியவில்லை.
இதற்கிடையே சுங்க சாவடிகளில் உபகரணங்கள் வேலை செய்யவில்லை என்றாலோ அல்லது பாஸ்டேக்கை ஸ்கேன் செய்ய தவறினாலோ வாகனங்களை இலவசமாக கடக்க அனுமதிக்க வேண்டும் என டோல்கேட் ஆபரேட்டர்களுக்கு கடுமையான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளன. இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் முயற்சிகள் மூலம் வரும் நாட்களில் நெரிசல் குறையுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
மெழுகு சிலை மாதிரி இருக்காங்க... இவங்க அந்த படத்துல நடிச்சவங்களா... வீடியோவை கண் இமைக்காமல் பார்க்கும் இளசுகள்
-
ஊரே இந்த காரை வாங்க ஆசைப்படுது!இப்ப கையில பணம் இருந்தாலும் உடனே இதை வாங்க முடியாது!
-
காருக்குள் பறக்கும் வாகனம்.. சாலையில் ஓட்டிக்கலாம்.. தேவைப்பட்டால் வானிலும் பறந்துக்கலாம்!