500 ரூபாய் அபராதம் கேட்ட போலீஸ்... பணம் இல்லாததால் கணவர் முன்னிலையில் மனைவி செய்த காரியம்... ஆடிப்போன கர்நாடகா

போக்குவரத்து விதிமுறை மீறலுக்கான அபராதம் செலுத்த பணம் இல்லாத காரணத்தால், கணவர் முன்னிலையில் பெண் செய்த காரியம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

500 ரூபாய் அபராதம் கேட்ட போலீஸ்... பணம் இல்லாததால் கணவர் முன்னிலையில் மனைவி செய்த காரியம்... ஆடிப்போன கர்நாடகா

கர்நாடக மாநிலம் பெல்காவி மாவட்டத்தை சேர்ந்த 30 வயதான பெண் ஒருவர் தனது மாங்கல்யத்தை கழற்றி காவல் துறையினரிடம் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்து விதிமுறை மீறலுக்கான அபராதத்தை செலுத்துவதற்கு பணம் இல்லாத காரணத்தால், அவர் தனது மாங்கல்யத்தை கழற்றி காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளார்.

500 ரூபாய் அபராதம் கேட்ட போலீஸ்... பணம் இல்லாததால் கணவர் முன்னிலையில் மனைவி செய்த காரியம்... ஆடிப்போன கர்நாடகா

காவல் துறையினருடனான வாக்குவாதம் கை மீறி சென்ற நிலையில், விரக்தியின் உச்சத்தில் அவர் இதனை செய்ததாக கூறப்படுகிறது. அந்த பெண்ணின் பெயர் பாரதி விபூதி என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் கட்டில் வாங்குவதற்காக தனது கணவருடன், அவர்களது மோட்டார்சைக்கிளில் நகர மார்க்கெட்டிற்கு சென்றுள்ளார்.

500 ரூபாய் அபராதம் கேட்ட போலீஸ்... பணம் இல்லாததால் கணவர் முன்னிலையில் மனைவி செய்த காரியம்... ஆடிப்போன கர்நாடகா

அந்த தம்பதியினரிடம் 1,800 ரூபாய் மட்டுமே இருந்தது. இதில், 1,700 ரூபாய்க்கு அவர்கள் கட்டில் வாங்கினர். எஞ்சிய 100 ரூபாயை காலை உணவு சாப்பிடுவதற்கு செலவழித்து விட்டனர். இதன்பின் வீடு திரும்பி கொண்டிருக்கும்போது நகர பேருந்து நிலையம் அருகே காவல் துறையினர் அவர்கள் வந்த மோட்டார்சைக்கிளை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

500 ரூபாய் அபராதம் கேட்ட போலீஸ்... பணம் இல்லாததால் கணவர் முன்னிலையில் மனைவி செய்த காரியம்... ஆடிப்போன கர்நாடகா

ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்த காரணத்திற்காக 500 ரூபாய் அபராதம் செலுத்தும்படி அவர்களிடம் காவல் துறையினர் கேட்டுள்ளனர். ஆனால் தங்களிடம் பணம் இல்லை எனவும், இருந்த பணம் செலவாகி விட்டதாகவும் காவல் துறையினரிடம் பாரதி விபூதி கூறியுள்ளார். அத்துடன் தங்களை அங்கிருந்து செல்வதற்கு அனுமதிக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்ததாக கூறப்படுகிறது.

500 ரூபாய் அபராதம் கேட்ட போலீஸ்... பணம் இல்லாததால் கணவர் முன்னிலையில் மனைவி செய்த காரியம்... ஆடிப்போன கர்நாடகா

ஆனால் இதற்கு காவல் துறையினர் ஒப்பு கொள்ளவில்லை என தெரிகிறது. எனவே காவல் துறையினருக்கும், பாரதி விபூதிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் சுமார் 2 மணி நேரம் நீடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக சம்பவ இடத்தில் பொதுமக்கள் பலர் குவிய தொடங்கியுள்ளனர்.

500 ரூபாய் அபராதம் கேட்ட போலீஸ்... பணம் இல்லாததால் கணவர் முன்னிலையில் மனைவி செய்த காரியம்... ஆடிப்போன கர்நாடகா

இதன் இறுதியில் ஆத்திரத்தின் உச்சத்திற்கே சென்ற பாரதி விபூதி, தனது மாங்கல்யத்தை கழற்றி, காவல் துறை அதிகாரி ஒருவரிடம் ஒப்படைத்துள்ளார். அதனை விற்று போக்குவரத்து விதிமுறை மீறலுக்கான அபராத்தை எடுத்து கொள்ளும்படி அவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

500 ரூபாய் அபராதம் கேட்ட போலீஸ்... பணம் இல்லாததால் கணவர் முன்னிலையில் மனைவி செய்த காரியம்... ஆடிப்போன கர்நாடகா

அப்போது காவல் துறை உயர் அதிகாரிகள் ஒரு சிலர் அந்த வழியாக சென்றுள்ளனர். சாலையோரமாக நடந்து கொண்டிருந்த இந்த பிரச்னையை அவர்கள் கவனித்துள்ளனர். இதன்பின் இந்த பிரச்னையில் உயரதிகாரிகள் தலையிட்டு, பாரதி விபூதியையும், அவரது கணவரையும் அங்கிருந்து செல்வதற்கு அனுமதி வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

500 ரூபாய் அபராதம் கேட்ட போலீஸ்... பணம் இல்லாததால் கணவர் முன்னிலையில் மனைவி செய்த காரியம்... ஆடிப்போன கர்நாடகா

ஆனால் இந்தியாவில் காவல் துறையினர் விதித்த அபராதத்தால் விரக்தியடைந்து பொதுமக்கள் இவ்வாறு நடந்து கொள்வது என்பது இது முதல் முறை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பாக இரு சக்கர வாகனத்தை வாகன ஓட்டிகள் அடித்து நொறுக்கியது, தீ வைத்து கொளுத்தியது போன்ற பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
No Money To Pay Traffic Violation Fine, Woman Hands Over 'Mangalsutra' To Cops - Details. Read in Tamil
Story first published: Monday, March 1, 2021, 9:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X