Just In
- 3 hrs ago ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
- 3 hrs ago சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- 4 hrs ago குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
- 4 hrs ago ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!
Don't Miss!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Movies அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
18 முக்கிய ஆர்டிஓ சேவைகளை இனி வீட்டில் இருந்தே பெறலாம்... கூட்ட நெரிசலை தவிர்க்க மத்திய அரசு அதிரடி!
ஆர்டிஓ-வில் ஏற்படும் தேவையற்ற கூட்ட நெரிசலைத் தவரிக்கும் விதமாக சில முக்கிய சேவைகளை ஆன்லைனுக்கு மத்திய அரசு மாற்றியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.
ஆர்டிஓ அலுவலகங்களில் ஏற்படும் தேவையற்றை கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் நோக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு குறிப்பிட்ட சில சேவைகளை ஆன்லைன் வாயிலாகவே வழங்க இருப்பதாக அண்மையில் அறிவித்திருந்தது. இதன்படி, பல்வேறு முக்கிய சேவைகள் ஆன்லைனுக்கு மாற்றப்பட்டன.
முகவரி மாற்றுவது, ஆவண நகல் கோருவது, சர்வதேச ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிப்பது என பெரும்பாலான சேவைகள் ஆன்லைனுக்கு மாறியிருக்கின்றன. இந்த மாற்றத்தால் டெல்லியில் உள்ள ஆர்டிக்களில் மக்கள் நடமாட்டம் கணிசமாக குறைதந்திருப்பதாகக் கூறப்படுகின்றது. பெருவாரியான ஆர்டிஓ சேவைகள் ஆன்லைனுக்கு மாற்றுவதனாலேயே கூட்ட நெரிசல் குறைந்து காணப்படுவதாகக் அதிகாரிகள் சிலர் தெரிவித்திருக்கின்றன.
டெல்லி அரசு, மிக முக்கியமாக கொரோனா வைரஸ் பரவலில் இருந்தும் மக்களைக் காக்கும் நோக்கிலேயே இணைய வழி ஆர்டிஓ சேவைகளைத் தொடங்கியதாகக் கூறப்படுகின்றது. இந்த நிலையில், டெல்லி அரசு மேற்கொண்ட இதே நடவடிக்கையை தற்போது மத்திய அரசு மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆன்லைன் வழி ஆர்டிஓ சேவையை நாடு முழுவதும் நடைமுறைக்குக் கொண்டு வருவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் (Ministry of Road Transport and Highways) அறிவித்திருக்கின்றது. மக்கள் தேவையில்லாமல் அலைக்கழிப்பதைத் தடுக்கும் நோக்கில் இத்திட்டம் நாடு முழுவதும் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றது.
ஆகையால், ஓட்டுநர் உரிமத்தை புதுப்பித்தல், ஓட்டுநர் பயிற்சி உரிமத்திற்கு விண்ணப்பித்தல் மற்றும் வாகன பதிவு என பல முக்கிய சேவைகளுக்குக்கூட ஆர்டிஓ செல்வது தவிர்க்கப்பட்டிருக்கின்றது. இந்த சேவை நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்துவிட்டதாகவும், மக்கள் இதனைப் பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் இச்சேவையைப் பெறுவதற்கு ஆதார் கார்டு கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. ஆதார்டு அடையாள அட்டை இருந்தால் மட்டுமே ஆர்டிஓ செல்லாமலேயே ஆன்லைன் வாயிலாக தொடங்கப்பட்டிருக்கும் சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
18 வகையிலான சேவைகள் ஆன்லைனிற்கு மாற்றப்பட்டுள்ளன. இதில் முக்கியமான சிலவற்றைப் பட்டியலாக கீழே பார்க்கலாம்.
- கற்போருக்கான உரிமம்.
- நகல் ஓட்டுநர் உரிமத்திற்காக விண்ணப்பித்தல்.
- ஓட்டுநர் உரிமம் மற்றும் பதிவு சான்றிதழில் முகவரி மாற்ற
- சர்வதேச ஓட்டுநர் அனுமதி பெறுவதற்கு
- ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பித்தல்
- மோட்டார் வாகனத்திற்கான தற்காலிக பதிவெண்ணிற்காக விண்ணப்பித்தல்.
- பதிவு செய்த வாகனத்திற்கான நகல் சான்றிதழ் பெறுவதற்காக விண்ணப்பித்தல்.
- பதிவு சான்றிதழை பெற என்ஓசி சான்றுக்காக விண்ணப்பித்தல்
- மோட்டார் வாகனத்தின் உரிமையை மாற்றுவதற்கான அறிவிப்பு
- மோட்டார் வாகனத்தின் உரிமையை மாற்றுவதற்கான விண்ணப்பம்
- பதிவு சான்றிதழில் முகவரி மாற்ற தகவல் சேர்த்தல்
- முழுமையாக கட்டப்பட்ட உடலமைப்பைக் கொம்ட மோட்டார் வாகனத்தை பதிவு செய்வதற்காக விண்ணப்பிப்பது, என பல்வேறு முக்கிய செயல்கள் ஆன்லைனிற்கு மாற்றப்பட்டிருக்கின்றன.
இதில் எந்த சேவையை நாம் பெற வேண்டுமானாலும் ஆதார் கார்டு முக்கியம். இதன் வாயிலாக சாரதி ஆன்லைன் தளத்தில் முதில் பதிவு செய்ய வேண்டும். அதாவது, முதலில் ஆதார்டு கார்டை வைத்து லாக்-இன் செய்ய வேண்டும். பின்னர், அறிவிக்கப்பட்டிருக்கும் எந்த சேவையை வேண்டுமானாலும் நம்மால் பயன்படுத்திக் கொள்ள முடியும்.