Just In
- 4 min ago அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- 4 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 5 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 5 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
18 முக்கிய ஆர்டிஓ சேவைகளை இனி வீட்டில் இருந்தே பெறலாம்... கூட்ட நெரிசலை தவிர்க்க மத்திய அரசு அதிரடி!
ஆர்டிஓ-வில் ஏற்படும் தேவையற்ற கூட்ட நெரிசலைத் தவரிக்கும் விதமாக சில முக்கிய சேவைகளை ஆன்லைனுக்கு மத்திய அரசு மாற்றியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.
ஆர்டிஓ அலுவலகங்களில் ஏற்படும் தேவையற்றை கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் நோக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு குறிப்பிட்ட சில சேவைகளை ஆன்லைன் வாயிலாகவே வழங்க இருப்பதாக அண்மையில் அறிவித்திருந்தது. இதன்படி, பல்வேறு முக்கிய சேவைகள் ஆன்லைனுக்கு மாற்றப்பட்டன.
முகவரி மாற்றுவது, ஆவண நகல் கோருவது, சர்வதேச ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிப்பது என பெரும்பாலான சேவைகள் ஆன்லைனுக்கு மாறியிருக்கின்றன. இந்த மாற்றத்தால் டெல்லியில் உள்ள ஆர்டிக்களில் மக்கள் நடமாட்டம் கணிசமாக குறைதந்திருப்பதாகக் கூறப்படுகின்றது. பெருவாரியான ஆர்டிஓ சேவைகள் ஆன்லைனுக்கு மாற்றுவதனாலேயே கூட்ட நெரிசல் குறைந்து காணப்படுவதாகக் அதிகாரிகள் சிலர் தெரிவித்திருக்கின்றன.
டெல்லி அரசு, மிக முக்கியமாக கொரோனா வைரஸ் பரவலில் இருந்தும் மக்களைக் காக்கும் நோக்கிலேயே இணைய வழி ஆர்டிஓ சேவைகளைத் தொடங்கியதாகக் கூறப்படுகின்றது. இந்த நிலையில், டெல்லி அரசு மேற்கொண்ட இதே நடவடிக்கையை தற்போது மத்திய அரசு மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆன்லைன் வழி ஆர்டிஓ சேவையை நாடு முழுவதும் நடைமுறைக்குக் கொண்டு வருவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் (Ministry of Road Transport and Highways) அறிவித்திருக்கின்றது. மக்கள் தேவையில்லாமல் அலைக்கழிப்பதைத் தடுக்கும் நோக்கில் இத்திட்டம் நாடு முழுவதும் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றது.
ஆகையால், ஓட்டுநர் உரிமத்தை புதுப்பித்தல், ஓட்டுநர் பயிற்சி உரிமத்திற்கு விண்ணப்பித்தல் மற்றும் வாகன பதிவு என பல முக்கிய சேவைகளுக்குக்கூட ஆர்டிஓ செல்வது தவிர்க்கப்பட்டிருக்கின்றது. இந்த சேவை நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்துவிட்டதாகவும், மக்கள் இதனைப் பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் இச்சேவையைப் பெறுவதற்கு ஆதார் கார்டு கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. ஆதார்டு அடையாள அட்டை இருந்தால் மட்டுமே ஆர்டிஓ செல்லாமலேயே ஆன்லைன் வாயிலாக தொடங்கப்பட்டிருக்கும் சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
18 வகையிலான சேவைகள் ஆன்லைனிற்கு மாற்றப்பட்டுள்ளன. இதில் முக்கியமான சிலவற்றைப் பட்டியலாக கீழே பார்க்கலாம்.
- கற்போருக்கான உரிமம்.
- நகல் ஓட்டுநர் உரிமத்திற்காக விண்ணப்பித்தல்.
- ஓட்டுநர் உரிமம் மற்றும் பதிவு சான்றிதழில் முகவரி மாற்ற
- சர்வதேச ஓட்டுநர் அனுமதி பெறுவதற்கு
- ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பித்தல்
- மோட்டார் வாகனத்திற்கான தற்காலிக பதிவெண்ணிற்காக விண்ணப்பித்தல்.
- பதிவு செய்த வாகனத்திற்கான நகல் சான்றிதழ் பெறுவதற்காக விண்ணப்பித்தல்.
- பதிவு சான்றிதழை பெற என்ஓசி சான்றுக்காக விண்ணப்பித்தல்
- மோட்டார் வாகனத்தின் உரிமையை மாற்றுவதற்கான அறிவிப்பு
- மோட்டார் வாகனத்தின் உரிமையை மாற்றுவதற்கான விண்ணப்பம்
- பதிவு சான்றிதழில் முகவரி மாற்ற தகவல் சேர்த்தல்
- முழுமையாக கட்டப்பட்ட உடலமைப்பைக் கொம்ட மோட்டார் வாகனத்தை பதிவு செய்வதற்காக விண்ணப்பிப்பது, என பல்வேறு முக்கிய செயல்கள் ஆன்லைனிற்கு மாற்றப்பட்டிருக்கின்றன.
இதில் எந்த சேவையை நாம் பெற வேண்டுமானாலும் ஆதார் கார்டு முக்கியம். இதன் வாயிலாக சாரதி ஆன்லைன் தளத்தில் முதில் பதிவு செய்ய வேண்டும். அதாவது, முதலில் ஆதார்டு கார்டை வைத்து லாக்-இன் செய்ய வேண்டும். பின்னர், அறிவிக்கப்பட்டிருக்கும் எந்த சேவையை வேண்டுமானாலும் நம்மால் பயன்படுத்திக் கொள்ள முடியும்.