Just In
- 1 hr ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- 3 hrs ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 6 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 9 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
Don't Miss!
- Movies மாமியார் உதட்டில் முத்தம்.. ரோபோ சங்கர் மருமகன் விளக்கம்.. என்ன சொல்லிருக்காரு பாருங்க?
- News ஒரு ஓட்டுக்காக போராடிய "சர்க்கார்" விஜய் நிலையா இது.. கட்சி தலைவரான முதல் தேர்தலிலேயே ஏமாற்றம்
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
18 முக்கிய ஆர்டிஓ சேவைகளை இனி வீட்டில் இருந்தே பெறலாம்... கூட்ட நெரிசலை தவிர்க்க மத்திய அரசு அதிரடி!
ஆர்டிஓ-வில் ஏற்படும் தேவையற்ற கூட்ட நெரிசலைத் தவரிக்கும் விதமாக சில முக்கிய சேவைகளை ஆன்லைனுக்கு மத்திய அரசு மாற்றியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.
ஆர்டிஓ அலுவலகங்களில் ஏற்படும் தேவையற்றை கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் நோக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு குறிப்பிட்ட சில சேவைகளை ஆன்லைன் வாயிலாகவே வழங்க இருப்பதாக அண்மையில் அறிவித்திருந்தது. இதன்படி, பல்வேறு முக்கிய சேவைகள் ஆன்லைனுக்கு மாற்றப்பட்டன.
முகவரி மாற்றுவது, ஆவண நகல் கோருவது, சர்வதேச ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிப்பது என பெரும்பாலான சேவைகள் ஆன்லைனுக்கு மாறியிருக்கின்றன. இந்த மாற்றத்தால் டெல்லியில் உள்ள ஆர்டிக்களில் மக்கள் நடமாட்டம் கணிசமாக குறைதந்திருப்பதாகக் கூறப்படுகின்றது. பெருவாரியான ஆர்டிஓ சேவைகள் ஆன்லைனுக்கு மாற்றுவதனாலேயே கூட்ட நெரிசல் குறைந்து காணப்படுவதாகக் அதிகாரிகள் சிலர் தெரிவித்திருக்கின்றன.
டெல்லி அரசு, மிக முக்கியமாக கொரோனா வைரஸ் பரவலில் இருந்தும் மக்களைக் காக்கும் நோக்கிலேயே இணைய வழி ஆர்டிஓ சேவைகளைத் தொடங்கியதாகக் கூறப்படுகின்றது. இந்த நிலையில், டெல்லி அரசு மேற்கொண்ட இதே நடவடிக்கையை தற்போது மத்திய அரசு மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆன்லைன் வழி ஆர்டிஓ சேவையை நாடு முழுவதும் நடைமுறைக்குக் கொண்டு வருவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் (Ministry of Road Transport and Highways) அறிவித்திருக்கின்றது. மக்கள் தேவையில்லாமல் அலைக்கழிப்பதைத் தடுக்கும் நோக்கில் இத்திட்டம் நாடு முழுவதும் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றது.
ஆகையால், ஓட்டுநர் உரிமத்தை புதுப்பித்தல், ஓட்டுநர் பயிற்சி உரிமத்திற்கு விண்ணப்பித்தல் மற்றும் வாகன பதிவு என பல முக்கிய சேவைகளுக்குக்கூட ஆர்டிஓ செல்வது தவிர்க்கப்பட்டிருக்கின்றது. இந்த சேவை நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்துவிட்டதாகவும், மக்கள் இதனைப் பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் இச்சேவையைப் பெறுவதற்கு ஆதார் கார்டு கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. ஆதார்டு அடையாள அட்டை இருந்தால் மட்டுமே ஆர்டிஓ செல்லாமலேயே ஆன்லைன் வாயிலாக தொடங்கப்பட்டிருக்கும் சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
18 வகையிலான சேவைகள் ஆன்லைனிற்கு மாற்றப்பட்டுள்ளன. இதில் முக்கியமான சிலவற்றைப் பட்டியலாக கீழே பார்க்கலாம்.
- கற்போருக்கான உரிமம்.
- நகல் ஓட்டுநர் உரிமத்திற்காக விண்ணப்பித்தல்.
- ஓட்டுநர் உரிமம் மற்றும் பதிவு சான்றிதழில் முகவரி மாற்ற
- சர்வதேச ஓட்டுநர் அனுமதி பெறுவதற்கு
- ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பித்தல்
- மோட்டார் வாகனத்திற்கான தற்காலிக பதிவெண்ணிற்காக விண்ணப்பித்தல்.
- பதிவு செய்த வாகனத்திற்கான நகல் சான்றிதழ் பெறுவதற்காக விண்ணப்பித்தல்.
- பதிவு சான்றிதழை பெற என்ஓசி சான்றுக்காக விண்ணப்பித்தல்
- மோட்டார் வாகனத்தின் உரிமையை மாற்றுவதற்கான அறிவிப்பு
- மோட்டார் வாகனத்தின் உரிமையை மாற்றுவதற்கான விண்ணப்பம்
- பதிவு சான்றிதழில் முகவரி மாற்ற தகவல் சேர்த்தல்
- முழுமையாக கட்டப்பட்ட உடலமைப்பைக் கொம்ட மோட்டார் வாகனத்தை பதிவு செய்வதற்காக விண்ணப்பிப்பது, என பல்வேறு முக்கிய செயல்கள் ஆன்லைனிற்கு மாற்றப்பட்டிருக்கின்றன.
இதில் எந்த சேவையை நாம் பெற வேண்டுமானாலும் ஆதார் கார்டு முக்கியம். இதன் வாயிலாக சாரதி ஆன்லைன் தளத்தில் முதில் பதிவு செய்ய வேண்டும். அதாவது, முதலில் ஆதார்டு கார்டை வைத்து லாக்-இன் செய்ய வேண்டும். பின்னர், அறிவிக்கப்பட்டிருக்கும் எந்த சேவையை வேண்டுமானாலும் நம்மால் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
-
நாசாவே அசந்து போகும் முக்கிய கருவியை உருவாக்கிய இஸ்ரோ! இனி உலகமே நம்ம கிட்ட தான் இந்த ஐடியாவை கேட்கும்!
-
இந்தியாவே காத்துகிடந்த 4 சூப்பர் பைக்குகளை அறிமுகம் செய்த அப்ரிலியா! பிராண்ட் அம்பாஸிட்டரான ஹிந்தி நடிகர்!
-
வெறும் ரூ150க்கு விமான டிக்கெட் விற்பனையாகுது! இது ஆஃபர் எல்லாம் இல்லை உண்மையான கட்டணமே இவ்வளவு தான்!