Just In
- 1 hr ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- 1 hr ago 7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
- 2 hrs ago இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- 2 hrs ago உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மோடி அரசுக்குதான் நன்றி சொல்லணும்! பல மடங்கு குறைந்த விபத்துகளின் எண்ணிக்கை! எவ்ளோ தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!
2018ம் ஆண்டைக் காட்டிலும் 2019ம் ஆண்டில் பல மடங்கு விபத்துகளின் எண்ணிக்கைக் குறைந்துள்ளது. எவ்வளவு குறைந்துள்ளது என்பது பற்றிய தகவலைக் கீழே காணலாம், வாங்க.
2019ம் ஆண்டில் இந்தியாவில் அரங்கேறிய விபத்துகளின் எண்ணிக்கை பற்றிய தகவல் வெளி வந்துள்ளது. ஒட்டுமொத்தமாக 4,49,002 விபத்துகளும், இவ்விபத்துகளினால் 1,51,113 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2018ம் ஆண்டைக் காட்டிலும் விபத்து மற்றும் உயிரிழப்புகள் கணிசமாக குறைந்திருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்த புள்ளி விவரங்களை வெளியிட்ட சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி, "கடந்த ஆண்டைக் காட்டிலும் பல மடங்கு விபத்துகள் குறைந்திருப்பதாக" கூறினார்.
அதிகம் விபத்துகள் அரங்கேறும் நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் வகையில் இந்தியாவில் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனை லேசாக வேகத்தை இழந்திருப்பதையும் தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் அதிகளவில் விபத்துகள் அரங்கேற அதிக வேகம், குடித்து விட்டு வாகனம் ஓட்டுதல், தவறான பாதையில் பயணித்தல், போக்குவரத்து விதிகளை மீறுதல், வாகனம் ஓட்டுதல் செல்போன் பயன்படுத்துதல் உள்ளிட்ட காரணமாகும். இதனை களையெடுக்கும் வகையிலேயே ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இதற்கு பலனளிக்கும் வகையில் கடந்த 2018ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2019ம் ஆண்டில் விபத்துகளின் எண்ணிக்கைக் கணிசமாக குறைந்திருக்கின்றது. 2018ம் ஆண்டில் 4,67,044 விபத்துகளும், அவற்றினால் 1,51,417 உயிரிழப்புகளும் அரங்கேறியிருக்கின்றன.
இந்த தரவுகளை வைத்து பார்க்கையில் 2019ம் ஆண்டில் விபத்தும், உயிரிழப்பும் கணிசமாக குறைந்திருப்பது தெரிய வந்திருக்கின்றது. ஆனால், இது மிக மிக குறைந்தளவு எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தகுந்தது. அரசு மேற்கொண்ட விழிப்புணர்வு மற்றும் முயற்சியின் காரணத்தினாலேயே விபத்துகள் கணிசமாக குறைந்திருப்பதாக அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
இத்துடன், "விபத்துகள் அரங்கேறும் பகுதிகள் கண்டறியப்பட்டு அங்கு துரிதமான நடிவடிக்கைகள் எடுத்ததன் காரணத்தினாலும் விபத்துகள் குறைந்திருக்கின்றன" என்றார். இதுமட்டுமின்றி, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் ஓரத்தில் செயல்படும் மதுப்பானக் கடைகளை மூடும்படி நடவடிக்கை எடுத்ததும் விபத்துகள் குறைய காரணமாக அமைந்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்பதற்காக கடந்த 2019ம் ஆண்டு கடுமையான போக்குவரத்து விதிகள் அமலுக்குக் கொண்டு வரப்பட்டது. ரூ. 100 இருந்த அபராதம் ரூ. 500 ஆகவும், குடிபோதையில் வாகனத்தை இயக்கினால் ரூ. 10 ஆயிரம் என அபராதங்கள் இரு மடங்காக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தகுந்தது.
-
ஜிஎஸ்டி கட்டவேணாம்! ரூ1.26 லட்சம் மிச்சம் பண்ண இந்த காரை இப்படியும் வாங்கலாமா? யாருக்குமே இது தெரியாது!
-
செஞ்சது என்னமோ சின்ன உதவிதான்.. ஆனா அந்த சமையல்கார அம்மா குடும்பத்துக்கு அது ரொம்ப பெருசு! செம ஸ்டோரி!!
-
கலாநிதி மாறன் மகள் காவ்யா வைத்திருக்கும் இந்த காரோட விலை 12கோடியா! ஒற்றை குடும்பத்திடம் மட்டும் இவ்ளோ கார்களா!