Just In
- 1 hr ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 1 hr ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 2 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 3 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
மோடி அரசுக்குதான் நன்றி சொல்லணும்! பல மடங்கு குறைந்த விபத்துகளின் எண்ணிக்கை! எவ்ளோ தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!
2018ம் ஆண்டைக் காட்டிலும் 2019ம் ஆண்டில் பல மடங்கு விபத்துகளின் எண்ணிக்கைக் குறைந்துள்ளது. எவ்வளவு குறைந்துள்ளது என்பது பற்றிய தகவலைக் கீழே காணலாம், வாங்க.
2019ம் ஆண்டில் இந்தியாவில் அரங்கேறிய விபத்துகளின் எண்ணிக்கை பற்றிய தகவல் வெளி வந்துள்ளது. ஒட்டுமொத்தமாக 4,49,002 விபத்துகளும், இவ்விபத்துகளினால் 1,51,113 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2018ம் ஆண்டைக் காட்டிலும் விபத்து மற்றும் உயிரிழப்புகள் கணிசமாக குறைந்திருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்த புள்ளி விவரங்களை வெளியிட்ட சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி, "கடந்த ஆண்டைக் காட்டிலும் பல மடங்கு விபத்துகள் குறைந்திருப்பதாக" கூறினார்.
அதிகம் விபத்துகள் அரங்கேறும் நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் வகையில் இந்தியாவில் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனை லேசாக வேகத்தை இழந்திருப்பதையும் தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் அதிகளவில் விபத்துகள் அரங்கேற அதிக வேகம், குடித்து விட்டு வாகனம் ஓட்டுதல், தவறான பாதையில் பயணித்தல், போக்குவரத்து விதிகளை மீறுதல், வாகனம் ஓட்டுதல் செல்போன் பயன்படுத்துதல் உள்ளிட்ட காரணமாகும். இதனை களையெடுக்கும் வகையிலேயே ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இதற்கு பலனளிக்கும் வகையில் கடந்த 2018ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2019ம் ஆண்டில் விபத்துகளின் எண்ணிக்கைக் கணிசமாக குறைந்திருக்கின்றது. 2018ம் ஆண்டில் 4,67,044 விபத்துகளும், அவற்றினால் 1,51,417 உயிரிழப்புகளும் அரங்கேறியிருக்கின்றன.
இந்த தரவுகளை வைத்து பார்க்கையில் 2019ம் ஆண்டில் விபத்தும், உயிரிழப்பும் கணிசமாக குறைந்திருப்பது தெரிய வந்திருக்கின்றது. ஆனால், இது மிக மிக குறைந்தளவு எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தகுந்தது. அரசு மேற்கொண்ட விழிப்புணர்வு மற்றும் முயற்சியின் காரணத்தினாலேயே விபத்துகள் கணிசமாக குறைந்திருப்பதாக அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
இத்துடன், "விபத்துகள் அரங்கேறும் பகுதிகள் கண்டறியப்பட்டு அங்கு துரிதமான நடிவடிக்கைகள் எடுத்ததன் காரணத்தினாலும் விபத்துகள் குறைந்திருக்கின்றன" என்றார். இதுமட்டுமின்றி, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் ஓரத்தில் செயல்படும் மதுப்பானக் கடைகளை மூடும்படி நடவடிக்கை எடுத்ததும் விபத்துகள் குறைய காரணமாக அமைந்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்பதற்காக கடந்த 2019ம் ஆண்டு கடுமையான போக்குவரத்து விதிகள் அமலுக்குக் கொண்டு வரப்பட்டது. ரூ. 100 இருந்த அபராதம் ரூ. 500 ஆகவும், குடிபோதையில் வாகனத்தை இயக்கினால் ரூ. 10 ஆயிரம் என அபராதங்கள் இரு மடங்காக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தகுந்தது.
-
காருக்குள் பறக்கும் வாகனம்.. சாலையில் ஓட்டிக்கலாம்.. தேவைப்பட்டால் வானிலும் பறந்துக்கலாம்!
-
ரோபோ சங்கர் மகள் திருமணத்திற்கு சீதனமா இந்த காரை கொடுத்தாரா? இதோட விலை என்ன தெரியுமா?
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!