Just In
- 1 hr ago என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
- 7 hrs ago ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
- 7 hrs ago சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- 8 hrs ago குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
Don't Miss!
- Sports IPL 2024 : கேகேஆர் அணியில் பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை.. என்ன காரணம்? உண்மையை சொன்ன ரிங்கு சிங்!
- News எங்களை பாதுகாத்துக்கொள்ள தெரியும்! நட்பு நாடுகளின் அட்வைஸை ஏற்காத இஸ்ரேல்! மத்திய கிழக்கில் பதற்றம்
- Technology வாங்குனா நீதான்.. இயர்பட்ல டால்பி அட்மோஸ்.. ஹெட் டிராக்கிங்.. வயர்லெஸ் சார்ஜிங்.. எந்த மாடல்?
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Movies அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
மோடி அரசுக்குதான் நன்றி சொல்லணும்! பல மடங்கு குறைந்த விபத்துகளின் எண்ணிக்கை! எவ்ளோ தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!
2018ம் ஆண்டைக் காட்டிலும் 2019ம் ஆண்டில் பல மடங்கு விபத்துகளின் எண்ணிக்கைக் குறைந்துள்ளது. எவ்வளவு குறைந்துள்ளது என்பது பற்றிய தகவலைக் கீழே காணலாம், வாங்க.
2019ம் ஆண்டில் இந்தியாவில் அரங்கேறிய விபத்துகளின் எண்ணிக்கை பற்றிய தகவல் வெளி வந்துள்ளது. ஒட்டுமொத்தமாக 4,49,002 விபத்துகளும், இவ்விபத்துகளினால் 1,51,113 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2018ம் ஆண்டைக் காட்டிலும் விபத்து மற்றும் உயிரிழப்புகள் கணிசமாக குறைந்திருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்த புள்ளி விவரங்களை வெளியிட்ட சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி, "கடந்த ஆண்டைக் காட்டிலும் பல மடங்கு விபத்துகள் குறைந்திருப்பதாக" கூறினார்.
அதிகம் விபத்துகள் அரங்கேறும் நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் வகையில் இந்தியாவில் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனை லேசாக வேகத்தை இழந்திருப்பதையும் தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் அதிகளவில் விபத்துகள் அரங்கேற அதிக வேகம், குடித்து விட்டு வாகனம் ஓட்டுதல், தவறான பாதையில் பயணித்தல், போக்குவரத்து விதிகளை மீறுதல், வாகனம் ஓட்டுதல் செல்போன் பயன்படுத்துதல் உள்ளிட்ட காரணமாகும். இதனை களையெடுக்கும் வகையிலேயே ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இதற்கு பலனளிக்கும் வகையில் கடந்த 2018ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2019ம் ஆண்டில் விபத்துகளின் எண்ணிக்கைக் கணிசமாக குறைந்திருக்கின்றது. 2018ம் ஆண்டில் 4,67,044 விபத்துகளும், அவற்றினால் 1,51,417 உயிரிழப்புகளும் அரங்கேறியிருக்கின்றன.
இந்த தரவுகளை வைத்து பார்க்கையில் 2019ம் ஆண்டில் விபத்தும், உயிரிழப்பும் கணிசமாக குறைந்திருப்பது தெரிய வந்திருக்கின்றது. ஆனால், இது மிக மிக குறைந்தளவு எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தகுந்தது. அரசு மேற்கொண்ட விழிப்புணர்வு மற்றும் முயற்சியின் காரணத்தினாலேயே விபத்துகள் கணிசமாக குறைந்திருப்பதாக அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
இத்துடன், "விபத்துகள் அரங்கேறும் பகுதிகள் கண்டறியப்பட்டு அங்கு துரிதமான நடிவடிக்கைகள் எடுத்ததன் காரணத்தினாலும் விபத்துகள் குறைந்திருக்கின்றன" என்றார். இதுமட்டுமின்றி, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் ஓரத்தில் செயல்படும் மதுப்பானக் கடைகளை மூடும்படி நடவடிக்கை எடுத்ததும் விபத்துகள் குறைய காரணமாக அமைந்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்பதற்காக கடந்த 2019ம் ஆண்டு கடுமையான போக்குவரத்து விதிகள் அமலுக்குக் கொண்டு வரப்பட்டது. ரூ. 100 இருந்த அபராதம் ரூ. 500 ஆகவும், குடிபோதையில் வாகனத்தை இயக்கினால் ரூ. 10 ஆயிரம் என அபராதங்கள் இரு மடங்காக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தகுந்தது.
-
இந்தியாவுலேயே நல்லா சேல்ஸ் ஆகுற கார் இதெல்லாம்! ஆனா இந்த விஷயம் தெரிஞ்சா யாரும் வாங்க மாட்டாங்க!
-
5 நிமிஷ சந்தோஷத்துக்காக... தவளை தன் வாயால் சிக்கிடுச்சு!! ஆடி காரில் செய்யும் வேலையா இது?
-
ரூ1.66 லட்சம் கம்மி விலையில் ஹூண்டாய் கிரெட்டா காரை வாங்கலாம்! இப்படி ஒரு வழி இருப்பது பலருக்கும் தெரியாது!