Just In
- 33 min ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 40 min ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 1 hr ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 2 hrs ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
Don't Miss!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- News சிறையில் கணவர்.. இடைத்தேர்தலில் களமிறங்கும் ஜார்கண்ட் Ex முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
தீ பிடித்த ஓகினாவா ஷோரூம்... காரணம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இல்லையாம்... அப்ப வேற என்ன?
மங்களூருவில் ஓகினாவா விற்பனையகம் தீ பிடித்து எரிந்த சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. அதிகாலையில் நடந்த இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலர் இதை பகிர்ந்து வருகின்றனர். இது குறித்த முழு விபரங்களை காணலாம் வாருங்கள்.
கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவின் பல்வேறு இடங்களில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீ பிடித்து எரிந்தது. இதனால் மக்களுக்கு எலெக்ட்ரிக் வாகனம் மீது அச்சமே ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் எலெக்டரிக் வாகன குறித்த தீ விபத்து செய்து எது வந்தாலும் தற்போது அது இந்தியா முழுவதும் பேசப்படுகிறது.
இந்நிலையில் கர்நாடகா மாநிலம் மங்களூரு, நாக்கூரி பகுதியில் உள்ள ஓகினவா எலெக்ட்ரிக் வாகன விற்பனையகம் ஒன்று சமீபத்தில் தீ பிடித்து எரிந்தது. சம்பவம் அதிகாலை 7 மணி நடந்துள்ளது. இந்த விற்பனையகத்தை நடத்தி வருபவர் ஹமீது, ஸ்மார்ட் சிட்டி மோட்டார் என்ற பெயரில் இந்த விற்பனையகத்தை நடத்தி வருகிறார். இவர் தனது விற்பனையகத்தின் மாடியிலேயே குடியிருக்கிறார். கீழ் தளத்தில் விற்பனையகத்தை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் சம்பவத்தன்று காலையில் அவர் வீட்டில் கரெண்ட் அடிக்கடி ட்ரிப் ஆகியுள்ளது. மழை காரணமாக ஏதாவது சிக்கல் இருக்கலாம் என நினைத்துள்ளார். இந்நிலையில் காலை 7 மணிக்குக் கீழே உள்ள விற்பனையைகத்திலிருந்து புகை வந்துள்ளது.
பின்னர் வீட்டில் உள்ளவர்கள் சுதாரித்து வெளியே வருவதற்குள் புகை அதிகரித்து நெருப்பாக மாறியுள்ளது. உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்குப் புகார் அளிக்கப்பட்டு அவர்கள் வந்து பின்னர் தீயை அணைத்தனர். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை பெரும் பரபரப்பிற்குள்ளக்கியது. இந்நிலையில் எலெக்டரிக் வாகன விற்பனையகம் என்பதால் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஏதாவது தீ பிடித்ததால் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என முதலில் அச்சம் ஏற்பட்டது.
பின்னர் நடந்த விசாரணையில் இது மின் கசிவு காரணமாக ஏற்பட்ட விபத்து என்பது தெரியவந்தது. இந்த சம்பவத்தின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஓகினாவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையகம் தீப்பிடித்து எரிவது இது முதன் முறை அல்ல. இதற்கு முன்னர் தமிழ் நாட்டில் இப்படியான ஒரு சம்பவம் நடந்தது.
இந்த இரண்டு சம்பவங்களிலும் அதிர்ஷ்டவசமாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து அறிக்கை அளித்த ஓகினாவா நிறுவனம் நடந்த சம்பவத்திற்கு எலெக்ட்ரிக் ஷாட் சர்க்யூட் தான் காரணம் எனவும் ஸ்கூட்டர்களில் எந்த பிரச்சனையும் இல்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் ஓலா, ப்யூர் இவி, ஜித்தேந்திரா இவி, ஓகினவா, பூம் மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களில் ஸ்கூட்டர்கள் பல இடங்களில் தீ பிடித்து எரிந்தது. இதையடுத்து அந்நிறுவனங்கள் தங்கள் ஸ்கூட்டர்களை திரும்ப அழைத்து எல்லாவற்றையும் செக் செய்தனர்.
இந்த விவகாரம் குறித்து அரசே நேரடியாக விசாரிக்கத் துவங்கியது. டிஆர்டிஓ குழுவினர் இதுகுறித்து விசாரணை நடத்தியதில் பேட்டரியின் அமைப்பு காரணமாகவே விபத்து நடத்திருக்கலாம் என அறிக்கை கூறியுள்ளனர். இந்நிலையில் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் இந்த சம்பவங்கள் குறித்து விளக்கம் கேட்டுக் குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அளித்துள்ளது.
இந்நிலையில் அரசு எலெக்ட்ரிக் வாகன பேட்டரிகளுக்கான புதிய தரக் கட்டுப்பாடுகளை கொண்டுவருவது குறித்து ஆய்வு செய்து வருகிறது. இதற்கிடையில் இதுவரை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தான் தீ பிடித்து எரிந்து வந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நேற்று டாடா நெக்ஸான் இவி கார் ஒன்று தீ பிடித்து எரிந்தது குறிப்பிடத்தக்கது.
-
7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
-
குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!