Just In
- 5 min ago
ஜீப் காம்பஸ் அறிமுகமாகி அதற்குள் 5 வருஷம் ஆயிடுச்சா!! புதிய ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!
- 45 min ago
இந்தியாவின் கடைசி போலோ கார் டெலிவரி வழங்கப்பட்டது... சோகத்தில் மூழ்கிய ஃபோக்ஸ்வேகன் நிர்வாகம்!
- 1 hr ago
காலி பால்பாக்கெட்டிற்கு தள்ளுபடி விலையில் பெட்ரோல் / டீசல்... அசத்தும் தொழிலதிபர்...
- 3 hrs ago
விபத்தில் சிக்கிய பாடகியின் டாடா பஞ்ச் கார்... ஹைலைட் என்னனா அவங்களுக்கு சின்னத ஒரு கீரல்கூட ஏற்படல!
Don't Miss!
- Movies
ஜெயிலர் படத்தில் இவங்க தான் ஹீரோயினா? இந்த ட்விஸ்ட்டை எதிர்பார்க்கலையே.. முதல்முறையாக ரஜினியுடன்!
- News
தமிழக பொறியியல் கலந்தாய்வு.. கல்லூரிகளில் 7 நாட்களுக்குள் பணம் செலுத்தாவிட்டால் இடங்கள் காலி
- Sports
சிஎஸ்கே வீரர் அதிரடி.. 9 மாதத்திற்கு பிறகு டி20 விளையாடிய வில்லியம்சன்.. வெஸ்ட் இண்டீஸ்க்கு சோகம்
- Technology
நோ, நோ, தோற்ற இடத்திலேயே ஜெயிப்போம்., இது நல்ல பாடம்: ISRO வின் அடுத்த பிளான்!
- Finance
தங்கம் விலை இன்று எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா.. இது வாங்க சரியான நேரம் தான்!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய ஒப்பந்தம் எதையும் செய்திடாமல் இருப்பது நல்லது...
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
தீ பிடித்த ஓகினாவா ஷோரூம்... காரணம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இல்லையாம்... அப்ப வேற என்ன?
மங்களூருவில் ஓகினாவா விற்பனையகம் தீ பிடித்து எரிந்த சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. அதிகாலையில் நடந்த இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலர் இதை பகிர்ந்து வருகின்றனர். இது குறித்த முழு விபரங்களை காணலாம் வாருங்கள்.

கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவின் பல்வேறு இடங்களில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீ பிடித்து எரிந்தது. இதனால் மக்களுக்கு எலெக்ட்ரிக் வாகனம் மீது அச்சமே ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் எலெக்டரிக் வாகன குறித்த தீ விபத்து செய்து எது வந்தாலும் தற்போது அது இந்தியா முழுவதும் பேசப்படுகிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலம் மங்களூரு, நாக்கூரி பகுதியில் உள்ள ஓகினவா எலெக்ட்ரிக் வாகன விற்பனையகம் ஒன்று சமீபத்தில் தீ பிடித்து எரிந்தது. சம்பவம் அதிகாலை 7 மணி நடந்துள்ளது. இந்த விற்பனையகத்தை நடத்தி வருபவர் ஹமீது, ஸ்மார்ட் சிட்டி மோட்டார் என்ற பெயரில் இந்த விற்பனையகத்தை நடத்தி வருகிறார். இவர் தனது விற்பனையகத்தின் மாடியிலேயே குடியிருக்கிறார். கீழ் தளத்தில் விற்பனையகத்தை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் சம்பவத்தன்று காலையில் அவர் வீட்டில் கரெண்ட் அடிக்கடி ட்ரிப் ஆகியுள்ளது. மழை காரணமாக ஏதாவது சிக்கல் இருக்கலாம் என நினைத்துள்ளார். இந்நிலையில் காலை 7 மணிக்குக் கீழே உள்ள விற்பனையைகத்திலிருந்து புகை வந்துள்ளது.

பின்னர் வீட்டில் உள்ளவர்கள் சுதாரித்து வெளியே வருவதற்குள் புகை அதிகரித்து நெருப்பாக மாறியுள்ளது. உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்குப் புகார் அளிக்கப்பட்டு அவர்கள் வந்து பின்னர் தீயை அணைத்தனர். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை பெரும் பரபரப்பிற்குள்ளக்கியது. இந்நிலையில் எலெக்டரிக் வாகன விற்பனையகம் என்பதால் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஏதாவது தீ பிடித்ததால் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என முதலில் அச்சம் ஏற்பட்டது.

பின்னர் நடந்த விசாரணையில் இது மின் கசிவு காரணமாக ஏற்பட்ட விபத்து என்பது தெரியவந்தது. இந்த சம்பவத்தின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஓகினாவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையகம் தீப்பிடித்து எரிவது இது முதன் முறை அல்ல. இதற்கு முன்னர் தமிழ் நாட்டில் இப்படியான ஒரு சம்பவம் நடந்தது.
இந்த இரண்டு சம்பவங்களிலும் அதிர்ஷ்டவசமாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து அறிக்கை அளித்த ஓகினாவா நிறுவனம் நடந்த சம்பவத்திற்கு எலெக்ட்ரிக் ஷாட் சர்க்யூட் தான் காரணம் எனவும் ஸ்கூட்டர்களில் எந்த பிரச்சனையும் இல்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் ஓலா, ப்யூர் இவி, ஜித்தேந்திரா இவி, ஓகினவா, பூம் மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களில் ஸ்கூட்டர்கள் பல இடங்களில் தீ பிடித்து எரிந்தது. இதையடுத்து அந்நிறுவனங்கள் தங்கள் ஸ்கூட்டர்களை திரும்ப அழைத்து எல்லாவற்றையும் செக் செய்தனர்.

இந்த விவகாரம் குறித்து அரசே நேரடியாக விசாரிக்கத் துவங்கியது. டிஆர்டிஓ குழுவினர் இதுகுறித்து விசாரணை நடத்தியதில் பேட்டரியின் அமைப்பு காரணமாகவே விபத்து நடத்திருக்கலாம் என அறிக்கை கூறியுள்ளனர். இந்நிலையில் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் இந்த சம்பவங்கள் குறித்து விளக்கம் கேட்டுக் குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அளித்துள்ளது.

இந்நிலையில் அரசு எலெக்ட்ரிக் வாகன பேட்டரிகளுக்கான புதிய தரக் கட்டுப்பாடுகளை கொண்டுவருவது குறித்து ஆய்வு செய்து வருகிறது. இதற்கிடையில் இதுவரை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தான் தீ பிடித்து எரிந்து வந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நேற்று டாடா நெக்ஸான் இவி கார் ஒன்று தீ பிடித்து எரிந்தது குறிப்பிடத்தக்கது.
-
டொயோட்டாவை கீழே தள்ளி நம்பர் 1 இடத்தை பிடிக்கப்போகும் டெஸ்லா... எலான் மஸ்கின் "மாஸ்" திட்டம்...
-
இந்த செக்மெண்ட்ல இப்போ டாடாதான் கிங்... 5 ஸ்டார் ரேட்டிங் வாங்கி இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த கார் முதலிடம்!
-
பயணியிடம் விமான பணிப்பெண்கள் முதலில் கவனிக்கும் விஷயம் இதுதான்!! இத்தனை நாள் இது தெரியாம போச்சே!