Just In
- 1 hr ago ரூ.199க்கு கார் கண்ணாடியா!! அதிக உறுதியான பின் பக்கத்தை பார்க்க உதவும் யுனோ மிண்டா-வின் கண்ணாடிகள் அறிமுகம்!
- 3 hrs ago 10,000கிமீ கடந்து குமரி வந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. நம்பி வாங்கலாம் போலிருக்கே! இதோட விலை எவ்வளவாக இருக்கும்?
- 5 hrs ago வின்ஃபாஸ்ட் நிறுவனத்திற்கு அடித்த ஜாக்பாட்! தூத்துக்குடி ஆலையை திறப்பதற்கு முன்பே விற்பனையை துவங்க வாய்ப்பு!
- 6 hrs ago கேரளாவுக்கு சென்றால் இந்த சொர்க்கத்தை மட்டும் அனுபவிக்காம வந்துடாதீங்க!! வெறும் ரூ.20இல் கிடைக்குது!
Don't Miss!
- Sports ரசிகர்கள் என்ன பணம் கறக்கும் மெஷினா? ஆர்சிபி அணியின் செயல்.. கொந்தளிக்கும் கிரிக்கெட் ஆர்வலர்கள்
- Movies Kanguva Teaser: பெருமாச்சி!.. வெளியானது கங்குவா டீசர்.. பில்டப் பண்ண அளவுக்கு வொர்த்தா? இல்லையா?
- News "போர் குற்றம்.." பட்டினியை ஆயுதமாக்கும் இஸ்ரேல்.. பசியால் கொல்லப்படும் பல ஆயிரம் பாலஸ்தீன மக்கள்!
- Education இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் காத்திருக்கும் நர்ஸ் வேலை...!!
- Travel நீங்க உங்க குழந்தைகளோடு இன்னும் சென்னையில உள்ள இந்த பூங்காக்களுக்கு சென்றது இல்லையா – இப்போதே செல்லுங்கள்!
- Finance பெங்களூர் டூ லட்சத்தீவு.. இண்டிகோ-வின் நேரடி விமான சேவை, அடிதூள்.. டிக்கெட் விலை என்ன..?
- Lifestyle இந்த பிரபல சீரியல் கில்லர்களின் கடைசி வார்த்தைகள் அவங்க பண்ணுன கொலைகளை விட பயத்தை கொடுப்பதாக இருந்ததாம்...!
- Technology லிவ்வின் தம்பதியின் கைவரிசை.. போலி UPI ஆப்ஸ் மூலம் கட்டணம்.. தங்கம் திருடிய ஜோடி மாட்டியது எப்படி?
இலவச ஆக்சிஜன் சேவைக்காக கிவ்இந்தியா உடன் இணைந்த ஓலா... வீட்டுக்கே வந்து தருவாங்க!!
இலவச ஆக்சிஜன் சேவைக்காக கிவ்இந்தியா மற்றும் ஓலா அறக்கட்டளை இணைந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.
பிரபல கால் டாக்சி நிறுவனமான ஓலா, ஓலா அறக்கட்டளை எனும் பெயரில் குறிப்பிட்ட சில நாடுகளில் தனது தொண்டு சேவைகளை செய்து வருகின்றது. இந்த நிலையில், ஓலா அறக்கட்டளையும், கிவ் இந்தியா தொண்டு நிறுவனமும் கூட்டணி அமைத்திருக்கின்றன.
இந்த கூட்டணியின் வாயிலாக இலவச ஆக்சிஜன் சேவையை வழங்க இருப்பதாக ஓலா அறிவித்திருக்கின்றது. இதனை தனது ஓலா கால் டாக்சி புக்கிங் ஆப்பின் வாயிலாக வழங்க இருப்பதாக நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.
முதல் கட்டடமாக கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் 500 ஆகிசிஜன் சிலிண்டர்கள் அடங்கிய வாகனத்தை நிறுவனம் பயன்பாட்டிற்கு கொண்டு வந்திருக்கின்றது. இந்த சேவையை நாடு முழுவதும் விரிவாக்கும் செய்யவும் நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது.
குறிப்பாக, கொரோனா தொற்றால் அதிகம் சிக்கி தவித்து வரும் மாநிலங்கள் மற்றும் நகரங்களுக்கு முன்னுரிமை அளித்து இச்சேவையை தொடங்கி வருகின்றது ஓலா. ஆக்சிஜன் டேக்ஸி தேவைப்படுவோர் இதற்கான கோரிக்கையை ஓலா ஆப் வாயிலாக மட்டுமே கொடுக்க முடியும்.
இதன் பின்னரே ஆக்சிஜன் அடங்கிய வாகனம் நோயாளியின் வீட்டுக்கே சென்று உரிய சேவையை வழங்க அனுப்பி வைக்கப்படும். நோயாளியின் உடல்நிலை தேர்ச்சி அடைந்த பின்னரே சிலிண்டர்கள் மீண்டும் ஓலா எடுத்து செல்லும் அதுவரை அதனை நோயாளி பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த பிக்-அப் மற்றும் டெலிவரி சேவையை முழுக்க முழுக்க இலவசமாக செய்து வருகின்றது ஓலா. இதற்காகவே கிவ்இந்தியா தொண்டு நிறுவனத்துடன் ஓலா தனது கூட்டணியைத் தொடங்கியிருக்கின்றது. O2ஃபார் இந்தியா எனும் திட்டத்தின்கீழ் இரு நிறுவனங்களும் இச்சேவையை தொடங்கியிருக்கின்றன.
இந்தியாவின் ஆக்சிஜன் பற்றாக்குறையைப் போக்கும் விதமாக இந்தியாவில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் சில தங்களின் உதவி கரங்களை நீட்டி வருகின்றன. சமீபத்தில், ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் ஆட்டோ, மாருதி சுசுகி, ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா ஆகிய நிறுவனங்கள் கொரோனா நிவாரண சேவையை அறிவித்தன.
இந்த நிலையிலேயே ஓலா அறக்கட்டளை-கிவ்இந்தியா கூட்டணி இலவச ஆக்சிஜன் சேவையை நாட்டில் தொடங்கியிருக்கின்றன. இது நாட்டு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற தொடங்கியுள்ளது. குறிப்பாக, தங்களின் ஊழியர்களை நோய் தொற்றில் இருந்து காப்பாற்றும் வகையில் தடுப்பூசிகளை பணியாளர்களுக்கு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.