Just In
- 13 min ago ஓசூரில் தயாராகும் புதிய எலக்ட்ரிக் வாகனம்!! உருவாக்குவது யார் தெரியுமா?
- 1 hr ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 2 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- 2 hrs ago எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
Don't Miss!
- News வாரிசு அரசியலால் ஈரோடு மதிமுக எம்பி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.. ஸ்டாலின், வைகோவை சாடிய தமிழிசை
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
செம கெத்து... டொனால்டு ட்ரம்புக்கே கட்டுப்பாடு போட்ட இந்தியா... என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க!
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கே இந்தியா கட்டுப்பாடு விதித்துள்ள சம்பவம் கவனம் பெற்றுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை வரவேற்பதற்காக இந்தியா தற்போது விழாக்கோலம் பூண்டுள்ளது. வரும் பிப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய இரண்டு நாட்கள், டொனால்டு ட்ரம்ப் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். டொனால்டு ட்ரம்ப்பின் வருகையை முன்னிட்டு, பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் இந்தியாவில் இருக்கும் டொனால்டு ட்ரம்ப் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அவர் தாஜ்மஹாலை பார்வையிட உள்ளதும் மிக முக்கியமான நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருக்கிறது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது குடும்பத்தினருடன் தாஜ்மஹாலை பார்வையிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மனைவி மெலனியா, மகள் இவாங்கா மற்றும் அமெரிக்க உயரதிகாரிகள் குழுவினருடன் டொனால்டு ட்ரம்ப் தாஜ்மஹாலை பார்வையிட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக ஆக்ரா வரும் அவரை உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் கவர்னர் ஆனந்திபென் படேல் ஆகியோர் வரவேற்க உள்ளனர். டொனால்டு ட்ரம்ப் வருகையால் ஆக்ராவிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் தாஜ்மஹாலை பார்வையிடுவதில், டொனால்டு ட்ரம்புக்கே பல்வேறு கட்டுப்பாடுகள் இருக்கின்றன. எலெக்ட்ரிக் வாகனங்களில் சென்றுதான் டொனால்டு ட்ரம்ப்பும், அவரது குடும்பத்தினரும் தாஜ்மஹாலை பார்வையிட உள்ளனர். டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது குழுவினரை தாஜ்மஹாலுக்கு ஏற்றி செல்லும் பணிகளில், 15க்கும் மேற்பட்ட எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
இதற்கு காரணம் உள்ளது. அதாவது தாஜ்மஹாலை சுற்றி 500 மீட்டர் பரப்பளவிற்குள் எரிபொருளில் இயங்க கூடிய எந்தவொரு வாகனமும் நுழைய கூடாது. இந்தியாவின் உச்ச நீதிமன்றம் இதற்கு தடை விதித்துள்ளது. எனவே டொனால்டு ட்ரம்ப்பால் தனது வழக்கமான வாகன பரிவாரங்களுடன் தாஜ்மஹாலுக்கு செல்ல முடியாத சூழ்நிலை காணப்படுகிறது.
இதனால்தான் அவரையும், அவரது குடும்பத்தினரையும் இந்திய அதிகாரிகள் எலெக்ட்ரிக் வாகனங்களில் அழைத்து செல்ல உள்ளனர். இந்த எலெக்ட்ரிக் வாகனங்களில், பேட்டரியால் இயங்க கூடிய கோல்ப் வண்டிகள் மற்றும் எலெக்ட்ரிக் பஸ்கள் ஆகியவை அடங்குகின்றன. இதில், சில வண்டிகள் வெகு சமீபத்தில்தான் உள்ளூர் நிர்வாகத்தால் வாங்கப்பட்டுள்ளன.
அவை கடந்த ஜனவரி மாதம் வாங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தாஜ்மஹாலின் கிழக்கு கேட்டில் இருந்து சுமார் 650 மீட்டர்கள் தொலைவில் உள்ள ஓபராய் அமர்விலாஸ் ஹோட்டலில் இருந்து டொனால்டு ட்ரம்ப் மற்றும் அவரது குழுவினர் எலெக்ட்ரிக் வாகனங்களில் புறப்படுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
டொனால்ட் ட்ரம்ப்பை தாஜ்மஹாலுக்கு அழைத்து செல்வதற்கு, அவரது புல்லட் புரூஃப் பீஸ்ட் வாகனத்திற்கு தடை விதிக்கப்படும் நடவடிக்கை தற்போது கவனம் பெற்றுள்ளது. இத்தகைய கட்டுப்பாடுகள் காரணமாக, முன்னாள் அமெரிக்க அதிபரான பராக் ஓபமா, கடைசி நிமிடத்தில் தனது ட்ரிப்பை ரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் பல்வேறு நகரங்கள் தற்போது காற்று மாசுபாடு பிரச்னையால் திணறி வருகின்றன. தலைநகர் டெல்லியே மிக கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது நம் அனைவரும் அறிந்த விஷயம்தான். காற்று மாசுபாடு பிரச்னைக்கு பெட்ரோல், டீசல் வாகனங்கள் கக்கும் புகையே முக்கியமான காரணமாக உள்ளது. எனவே பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
அதற்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மின்சார வாகனங்களை வாங்குவது எளிதாக இருக்க வேண்டும் என்பதற்காக, எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மத்திய அரசு பல்வேறு சலுகைகளையும் வழங்கி வருகிறது. இதன் விளைவாக தற்போது முன்னணி நிறுவனங்கள் பலவும் போட்டி போட்டு கொண்டு எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்து வருகின்றன.
Note: Images used are for representational purpose only.
-
யமஹா ஆர்.எக்ஸ் பைக்கை வைத்திருப்பவங்க கவனத்துக்கு!! என்ஜின் பவரை அதிகமாக்க சூப்பரான ஐடியா!
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!