Just In
- 5 min ago ஏர் இந்தியாவின் கடைசி போயிங் 747 விமானம்!! மும்பை ஏர்போர்டில் இருந்து...
- 1 hr ago ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- 3 hrs ago ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- 3 hrs ago இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணி கொண்டு போலாம்!
Don't Miss!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Technology Paytm-க்கு இனி எல்லாம் புதுசு.. UPI பேமெண்ட் அதுல தான்.. 10 நாட்களுக்கு வருது.. பேடிஎம் சிஇஓ அறிவிப்பு!
- Finance ரேஷன் கார்டு: 2 லட்சம் பேர் காத்திருப்பு.. புது அப்டேட் எப்போது வரும்..!
- News யுபிஎஸ்சி வினாத்தாள்களை பிராந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யலாமே.. சென்னை ஐகோர்ட் யோசனை
- Movies கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சென்னையில் 'ஆக்சிஜன் ஆட்டோ' சேவை... உயிர்காக்கும் உன்னத சேவையில் இறங்கிய தன்னார்வலர்!
சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை ஆக்சிஜன் பொருத்தப்பட்ட ஆட்டோ மூலமாக மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லும் உன்னத பணியை வசந்தகுமார் என்ற தன்னார்வலர் செய்து வருகிறார்.
கொரோனா பெருந்தொற்று நாட்டின் முக்கிய நகரங்களில் தீயாய் பரவி வருகிறது. இதனால், இயல்பு நிலை முடங்கி அசாரணமான சூழலில் மக்கள் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
கொரோனா தொற்று தீவிரமடைந்த நிலையில் உள்ளவர்களுக்கு கூடுதல் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. இதனை வெளியில் இருந்து சிலிண்டர்கள் அல்லது ஆக்சிஜன் உற்பத்தி எந்திரங்கள் மூலமாக வழங்க வேண்டிய நிலை இருக்கிறது.
கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை திடீரென உயர்ந்ததால், ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், நாடு முழுவதும் பல இடங்களில் உள்ள கொரோனா மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நெருக்கடியான சூழலில், அரசாங்கம் நடவடிக்கை எடுத்த போதிலும், அதற்கு உறுதுணையாக தன்னார்வலர்களும் முன்களப் பணியாளர்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். தங்களது உயிரை துச்சமென மதிப்பு, பிறரின் உயிர்காக்கும் உன்னத பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில், கொரோனா பாதிப்பு தீவிரமடைந்த நிலையில் உள்ள நோயாளிகளை வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் அரிய பணியில் இறங்கி உள்ளார் சென்னை தண்டையார் பேட்டையை சேர்ந்த வசந்தகுமார் என்ற தன்னார்வலர்.
தனது தொண்டு நிறுவனம் மூலமாக கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்க்கும் பணியை செய்து வருகிறார். இதற்காக, ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் உபகரணங்கள் பொருத்தப்பட்ட இரண்டு ஆட்டோரிக்ஷாக்களை கொரோனா நோயாளிகளுக்காக உருவாக்கி இருக்கிறார்.
ஆம்புலன்ஸ் வாகனம் கிடைக்காமல் அவதிப்படுபவர்கள் மற்றும் ஆக்சிஜன் கிடைக்காதவர்களுக்கு வசந்தகுமார் உருவாக்கி இருக்கும் இந்த ஆட்டோரிக்ஷாக்கள் பேருதவியாக அமைந்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று தீயாய் பரவி வரும் நிலையில், மக்கள் வெளியே வருவதற்கே அச்சப்படும் நிலையில், வசந்தகுமாரின் இந்த உதவிக்கு அப்பகுதியை சேர்ந்த பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Image Courtesy: Vasanthkumar.C
-
ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கிற்கு டிமாண்ட் அதிகமாகிட்டே போகுது!! இந்தியாவின் தேசிய பைக் என சொல்லலாம்!
-
கலாநிதி மாறன் மகள் காவ்யா வைத்திருக்கும் இந்த காரோட விலை 12கோடியா! ஒற்றை குடும்பத்திடம் மட்டும் இவ்ளோ கார்களா!
-
ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!