Just In
- 3 hrs ago ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
- 3 hrs ago சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- 4 hrs ago குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
- 4 hrs ago ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!
Don't Miss!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Movies அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
"ஆக்சிஜன் பற்றா குறையால் இனி ஒரு உயிர்கூட போக கூடாது" -பேருந்துகளையே ஆக்சிஜன் மையமாக மாற்றிய எடியூரப்பா!
கர்நாடகா மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையைப் போக்கும் வகையில் பேருந்துகளையே ஆக்சிஜன் மையங்களாக மாற்றப்பட்டிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.
நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை தலைவிரித்தாட தொடங்கியுள்ளது. இதனால், எண்ணற்ற உயிர்கள் தினந்தோறும் பரிதாபமாக பலியாகி வருகின்றன. இந்தியாவின் இந்த இக்கட்டான நிலையைக் கருத்தில் உலக நாடுகள் பல உதவிக் கரம் நீட்டி வருகின்றன.
கப்பல் மற்றும் விமானங்களின் வாயிலாக மருத்துவ ஆக்சிஜன் டேங்கர்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இந்த மாதிரியான சூழ்நிலையில் மக்களுக்கு தட்டுப்பாடு இன்றி ஆக்சிஜன் விநியோகம் செய்ய வேண்டும் என்பதற்காக கர்நாடகா மாநிலத்தின் முதலமைச்சர் எடியூரப்பா ஆக்சிஜன் பேருந்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்திருக்கின்றார்.
அதாவது, பொது பேருந்துகளை தற்காலிகமாக ஆக்சிஜன் மையங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு இருக்கைக்கும் இடையில் இருக்கும் இருக்கைகள் நீக்கப்பட்டு, அதன் பின்புறத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் நிறுவப்பட்டிருக்கின்றன.
இத்துடன், நோயாளிகள் வசதியாக அமர்ந்துக் கொள்ளும்படி இருக்கைகள் தயார் செய்யப்பட்டிருக்கின்றன. இத்தகைய பேருந்துகளையே அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா பெங்களூருவில் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்திருக்கின்றார்.
இதுகுறித்து ஆக்சிஜன் சிலிண்டர் பேருந்துகளை பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தபோது பேசிய எடியூரப்பா, "கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பால் நாட்டில் ஆக்சிஜன் தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதன் பற்றாக்குறையால் ஏற்பட்ட உயிர் பலிகள் மாநிலத்திற்கு ஆறாத வடுவை ஏற்படுத்தியிருக்கின்றது" என்றார்.
மேலும் பேசிய அவர், "இனி இத்தகைய துற்சம்பவங்கள் மாநிலத்தில் நிகழாமல் தடுக்கும் வகையில் ஆக்சிஜன் பேருந்து சேவை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றது" என்றார். தொடர்ந்து, மருத்துவமனைகளுக்கு வெளியே ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடும் நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற இப்பேருந்துகள் நிச்சயம் உதவும்" என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
தற்போது முதற் கட்டமாக இருபது பேருந்துகள் ஆக்சிஜன் வசதியுடன் மாற்றப்பட்டிருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் முக்கியமான மருத்துவமனைகளுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட இருக்கின்றன. ஒவ்வொரு பஸ்ஸிலும் சுமார் 8 ஆக்சிஜன் சிலிண்டர்கள் அடங்கிய இருக்கை வசதிக் உருவாக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுடையவர்களின் முக்கிய தேவைகளில் ஒன்றாக ஆக்சிஜன் மாறியிருக்கின்றது. ஆனால், தேவையைக் காட்டிலும் உற்பத்தி மிகக் குறைவாகவே நமது நாட்டில் காணப்படுகின்றது. இதன் விளைவாக ஆம்புலன்ஸ், வெண்டிலேட்டர் மற்றும் படுக்கை ஆகியவற்றின் தட்டுப்பாடுகளுடன் ஆக்சிஜனும் இணைந்திருக்கின்றது.
இந்த தட்டுப்பாட்டை ஒழிக்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இருப்பினும், நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மரணங்கள் அரங்கேறிய வண்ணம் இருக்கின்றன. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே மக்களின் உயிரைக் காக்கும் வகையில் ஆக்சிஜன் பேருந்துகள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.