Just In
- 1 hr ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 1 hr ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 2 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 2 hrs ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் ஆக்ஸிஜன் கிடைப்பதற்காக மத்திய அரசு அதிரடி உத்தரவு... என்னனு தெரியுமா?
நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் ஆக்ஸிஜன் கிடைப்பதற்காக அதிரடி உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிக தீவிரமாக வீசி வருகிறது. இதன் காரணமாக மருத்துவ ஆக்ஸிஜனுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருப்பதால், மருத்துவ ஆக்ஸிஜன் தேவையும் மிகவும் அதிகமாக இருக்கிறது.
மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை தீர்ப்பதற்காக அதிக அளவிலான டேங்கர் லாரிகள் களமிறங்கியுள்ளன. ஆனால் இந்த டேங்கர் லாரிகளை கண்காணிப்பது மிகவும் கடினமான வேலையாக உள்ளது. எனவே ஆக்ஸிஜன் டேங்கர் லாரிகளில் ஜிபிஎஸ் டிராக்கர்களை பொருத்துவது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவின் பேரில் ஆக்ஸிஜன் டேங்கர் லாரிகளில் ஜிபிஎஸ் டிராக்கர்களை பொருத்துவதற்காக, ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் மஹாராஷ்டிரா பிரிவு 10 லட்ச ரூபாய் நிதி திரட்டியுள்ளது.
கொரோனா வைரஸ் இரண்டாவது அலையை எதிர்கொண்டு வரும் மஹாராஷ்டிரா மாநில நிர்வாகத்திற்கு தன்னால் இயன்ற உதவிகளை ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் மஹாராஷ்டிரா பிரிவு செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாநில நிர்வாகத்தின் கரங்களை வலுப்படுத்தும் விதமாக இந்த பங்களிப்பை அந்த அமைப்பு செய்யவுள்ளது.
ஜிபிஎஸ் டிவைஸ்களை பொருத்துவதன் மூலம், ஆக்ஸிஜன் டேங்கர் லாரிகளை கண்காணிப்பது மிகவும் எளிமையான காரியமாக இருக்கும். மருத்துவமனைகளுக்கு தடையில்லாமல் ஆக்ஸிஜன் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, இந்த டேங்கர் லாரிகள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் வின்கேஷ் குலாட்டி கூறுகையில், ''இந்த பெருந்தொற்றின் இரண்டாவது அலையின்போது மஹாராஷ்டிரா மாநில நிர்வாகத்தின் கரங்களை வலுப்படுத்தும் வாய்ப்பு ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பிற்கு கிடைத்துள்ளது.
எங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்வதற்கு நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். அதில் இது ஒரு சிறிய உதவிதான். உயிர் காக்கும் ஆக்ஸிஜனை உரிய நேரத்தில் கிடைக்க செய்வதன் மூலம், நோயாளிகளின் உயிரை காப்பாற்ற முடியும்'' என்றார். மருத்துவ ஆக்ஸிஜனை நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் கிடைக்க செய்வது மிகவும் முக்கியமானது.
ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் பலர் உயிரிழந்து வரும் செய்திகள் நமக்கு கவலையை ஏற்படுத்துகின்றன. ஆனால் ஜிபிஎஸ் டிவைஸ்களை பொருத்துவதன் மூலம் டேங்கர் லாரிகளை உரிய முறையில் கண்காணித்து மருத்துவமனைகளுக்கு சரியான நேரத்தில் ஆக்ஸிஜன் கிடைக்க செய்வதை அதிகாரிகளால் உறுதி செய்ய முடியும்.
-
இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
-
வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!