Just In
- 5 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 5 hrs ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 5 hrs ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 10 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் ஆக்ஸிஜன் கிடைப்பதற்காக மத்திய அரசு அதிரடி உத்தரவு... என்னனு தெரியுமா?
நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் ஆக்ஸிஜன் கிடைப்பதற்காக அதிரடி உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிக தீவிரமாக வீசி வருகிறது. இதன் காரணமாக மருத்துவ ஆக்ஸிஜனுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருப்பதால், மருத்துவ ஆக்ஸிஜன் தேவையும் மிகவும் அதிகமாக இருக்கிறது.
மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை தீர்ப்பதற்காக அதிக அளவிலான டேங்கர் லாரிகள் களமிறங்கியுள்ளன. ஆனால் இந்த டேங்கர் லாரிகளை கண்காணிப்பது மிகவும் கடினமான வேலையாக உள்ளது. எனவே ஆக்ஸிஜன் டேங்கர் லாரிகளில் ஜிபிஎஸ் டிராக்கர்களை பொருத்துவது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவின் பேரில் ஆக்ஸிஜன் டேங்கர் லாரிகளில் ஜிபிஎஸ் டிராக்கர்களை பொருத்துவதற்காக, ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் மஹாராஷ்டிரா பிரிவு 10 லட்ச ரூபாய் நிதி திரட்டியுள்ளது.
கொரோனா வைரஸ் இரண்டாவது அலையை எதிர்கொண்டு வரும் மஹாராஷ்டிரா மாநில நிர்வாகத்திற்கு தன்னால் இயன்ற உதவிகளை ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் மஹாராஷ்டிரா பிரிவு செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாநில நிர்வாகத்தின் கரங்களை வலுப்படுத்தும் விதமாக இந்த பங்களிப்பை அந்த அமைப்பு செய்யவுள்ளது.
ஜிபிஎஸ் டிவைஸ்களை பொருத்துவதன் மூலம், ஆக்ஸிஜன் டேங்கர் லாரிகளை கண்காணிப்பது மிகவும் எளிமையான காரியமாக இருக்கும். மருத்துவமனைகளுக்கு தடையில்லாமல் ஆக்ஸிஜன் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, இந்த டேங்கர் லாரிகள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் வின்கேஷ் குலாட்டி கூறுகையில், ''இந்த பெருந்தொற்றின் இரண்டாவது அலையின்போது மஹாராஷ்டிரா மாநில நிர்வாகத்தின் கரங்களை வலுப்படுத்தும் வாய்ப்பு ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பிற்கு கிடைத்துள்ளது.
எங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்வதற்கு நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். அதில் இது ஒரு சிறிய உதவிதான். உயிர் காக்கும் ஆக்ஸிஜனை உரிய நேரத்தில் கிடைக்க செய்வதன் மூலம், நோயாளிகளின் உயிரை காப்பாற்ற முடியும்'' என்றார். மருத்துவ ஆக்ஸிஜனை நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் கிடைக்க செய்வது மிகவும் முக்கியமானது.
ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் பலர் உயிரிழந்து வரும் செய்திகள் நமக்கு கவலையை ஏற்படுத்துகின்றன. ஆனால் ஜிபிஎஸ் டிவைஸ்களை பொருத்துவதன் மூலம் டேங்கர் லாரிகளை உரிய முறையில் கண்காணித்து மருத்துவமனைகளுக்கு சரியான நேரத்தில் ஆக்ஸிஜன் கிடைக்க செய்வதை அதிகாரிகளால் உறுதி செய்ய முடியும்.
-
குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
-
ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!
-
தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு