Just In
- 7 min ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- 29 min ago ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
- 2 hrs ago அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- 2 hrs ago மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
Don't Miss!
- Technology வெளுத்துக்கட்டுது சேல்.. ரூ.21,000 போதும்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Movies தக் லைஃப் படத்திலிருந்து துல்கர் வெளியேற அரசியலும் காரணமா?.. வெளியான ஷாக் தகவல்
- News என்ன வேகம்! கிளாம்பாக்கம் தோத்துடும் போலயே.. செங்கல்பட்டில் இவ்வளவு பெரிய பேருந்து நிலையமா?
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
சூப்பர்... அரசு பேருந்தில் ஏசி இயங்காததால் பயணி செய்த அதிரடியான காரியம்... என்னவென்று தெரியுமா?
அரசு பஸ்ஸில் ஏசி இயங்காததால், பயணி ஒருவர் அதிரடியான காரியம் ஒன்றை செய்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில், அரசு பஸ்கள் கவலைக்கிடமான நிலையில்தான் இருக்கின்றன. பல்வேறு மாநில அரசுகள் இயக்கும் பஸ்கள் ஓட்டை, உடைசல்களாக இருப்பதால், அதில் பயணம் செய்ய பயணிகள் விருப்பம் காட்டுவதில்லை. அதற்கு பதிலாக தனியார் பேருந்துகளுக்குதான் பயணிகள் முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
எனவே அரசு போக்குவரத்து கழகங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதுதவிர அரசு பேருந்துகளில் பல்வேறு வசதிகள் இருப்பதாக விளம்பரம் செய்யப்படுகிறது. ஆனால் பயணிகளுக்கு அந்த வசதிகள் கிடைப்பதில்லை. இதன் காரணமாகவும் பயணிகள் மத்தியில் அரசு பஸ்கள் என்றாலே அதிருப்திதான் நிலவுகிறது.
இந்த சூழலில் செல்போன் சார்ஜிங் பாயிண்ட் மற்றும் ஏசி இருப்பதாக விளம்பரம் செய்து விட்டு அந்த வசதிகளை வழங்காத அரசு போக்குவரத்து கழகத்திற்கு சதீஷ் ரட்டன்லால் டயாமா என்ற பயணி நீதிமன்றம் வாயிலாக தக்க பாடம் புகட்டியுள்ளார். கவனம் பெற்றுள்ள இந்த சம்பவம் மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.
சதீஷ் ரட்டன்லால் டயாமா மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரும் கடந்த ஜூலை 12ம் தேதி மஹாராஷ்டிரா மாநில சாலை போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான ஷிவ்ஷாகி எனும் பேருந்தில் அவுரங்காபாத் நோக்கி பயணித்து கொண்டிருந்தனர். அப்போது சதீஷ் ரட்டன்லால் டயாமாவின் செல்போனில் சார்ஜ் குறைந்து விட்டது.
எனவே செல்போன் சார்ஜிங் பாயிண்ட் எங்கே உள்ளது? என கண்டக்டரிடம் சதீஷ் ரட்டன்லால் டயாமா கேட்டுள்ளார். ஆனால் அந்த பஸ்ஸில் செல்போன் சார்ஜிங் பாயிண்ட் வேலை செய்யவில்லை. செல்போன் சார்ஜிங் பாயிண்ட் மட்டுமல்லாது அந்த பஸ்ஸில் ஏசியும் இயங்கவில்லை. இதனால் சதீஷ் ரட்டன்லால் டயாமா அதிருப்தியடைந்தார்.
எனவே புகார் புத்தகத்தை வழங்கும்படி கண்டக்டர் மற்றும் டிரைவரிடம் சதீஷ் ரட்டன்லால் டயாமா கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் அதையும் வழங்கவில்லை. எனவே இந்த சம்பவம் தொடர்பாக ஜல்னா மாவட்டத்தில் உள்ள நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் சதீஷ் ரட்டன்லால் டயாமா உடனடியாக வழக்கு தொடர்ந்தார்.
இதில், பஸ்ஸில் செல்போன் சார்ஜிங் பாயிண்ட் மற்றும் ஏசி இருப்பதாக விளம்பரம் செய்து விட்டு அந்த வசதிகளை வழங்கவில்லை எனவும், இதனால் ஏற்பட்ட அசௌகரியம் மற்றும் மன உளைச்சலுக்காக தனக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் சதீஷ் ரட்டன்லால் டயாமா கூறியிருந்தார். இந்த மனு மீது நுகர்வோர் குறைதீர் மன்ற நீதிபதிகள் விசாரணை நடத்தினர்.
இதன்பின்பு புகார்தாரர் சதீஷ் ரட்டன்லால் டயாமாவிற்கு சம்பந்தப்பட்ட பஸ் டெப்போ 5,000 ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். 30 நாட்களுக்குள் இந்த இழப்பீட்டை வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர். நீதிபதிகளின் இந்த தீர்ப்பு பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
Note: Images used are for representational purpose only.
-
இந்தியாவை ஆட்சி செய்தது போதும்.. ஜப்பான் பக்கம் ஒதுங்குவோம்.. தமிழகத்துல இருந்து ஜப்பான் போகும் புல்லட் 350
-
நடிகர் தனுஷை வைத்து படம் எடுத்தவர் இன்று விலையுயர்ந்த காரில்!! ஷோரூமுக்கு குடும்பத்துடன் போய்ட்டாரு!
-
லூனாவிற்கு போட்டியா ஹீரோ தயார் செய்திருக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்! முன்-பின் 2பக்கத்திலும் லோடு ஏத்திக்ககலாம்