Just In
- 1 hr ago இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- 1 hr ago இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
- 1 hr ago எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
- 2 hrs ago ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
Don't Miss!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- News ஏத்துக்கவே முடியாது..புண்படுத்திட்டீங்க! ஒன்று கூடிய தமிழக கட்சிகள்..மோடி மீது டைரக்ட் அட்டாக்..!
- Movies Baakiyalakshmi: பாக்கியா அனுப்பிய வாய்ஸ் மெசேஜ்.. திரும்ப திரும்ப கேட்ட பழனிச்சாமி!
- Lifestyle இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- Finance முகேஷ் அம்பானி ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சூப்பர்... அரசு பேருந்தில் ஏசி இயங்காததால் பயணி செய்த அதிரடியான காரியம்... என்னவென்று தெரியுமா?
அரசு பஸ்ஸில் ஏசி இயங்காததால், பயணி ஒருவர் அதிரடியான காரியம் ஒன்றை செய்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில், அரசு பஸ்கள் கவலைக்கிடமான நிலையில்தான் இருக்கின்றன. பல்வேறு மாநில அரசுகள் இயக்கும் பஸ்கள் ஓட்டை, உடைசல்களாக இருப்பதால், அதில் பயணம் செய்ய பயணிகள் விருப்பம் காட்டுவதில்லை. அதற்கு பதிலாக தனியார் பேருந்துகளுக்குதான் பயணிகள் முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
எனவே அரசு போக்குவரத்து கழகங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதுதவிர அரசு பேருந்துகளில் பல்வேறு வசதிகள் இருப்பதாக விளம்பரம் செய்யப்படுகிறது. ஆனால் பயணிகளுக்கு அந்த வசதிகள் கிடைப்பதில்லை. இதன் காரணமாகவும் பயணிகள் மத்தியில் அரசு பஸ்கள் என்றாலே அதிருப்திதான் நிலவுகிறது.
இந்த சூழலில் செல்போன் சார்ஜிங் பாயிண்ட் மற்றும் ஏசி இருப்பதாக விளம்பரம் செய்து விட்டு அந்த வசதிகளை வழங்காத அரசு போக்குவரத்து கழகத்திற்கு சதீஷ் ரட்டன்லால் டயாமா என்ற பயணி நீதிமன்றம் வாயிலாக தக்க பாடம் புகட்டியுள்ளார். கவனம் பெற்றுள்ள இந்த சம்பவம் மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.
சதீஷ் ரட்டன்லால் டயாமா மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரும் கடந்த ஜூலை 12ம் தேதி மஹாராஷ்டிரா மாநில சாலை போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான ஷிவ்ஷாகி எனும் பேருந்தில் அவுரங்காபாத் நோக்கி பயணித்து கொண்டிருந்தனர். அப்போது சதீஷ் ரட்டன்லால் டயாமாவின் செல்போனில் சார்ஜ் குறைந்து விட்டது.
எனவே செல்போன் சார்ஜிங் பாயிண்ட் எங்கே உள்ளது? என கண்டக்டரிடம் சதீஷ் ரட்டன்லால் டயாமா கேட்டுள்ளார். ஆனால் அந்த பஸ்ஸில் செல்போன் சார்ஜிங் பாயிண்ட் வேலை செய்யவில்லை. செல்போன் சார்ஜிங் பாயிண்ட் மட்டுமல்லாது அந்த பஸ்ஸில் ஏசியும் இயங்கவில்லை. இதனால் சதீஷ் ரட்டன்லால் டயாமா அதிருப்தியடைந்தார்.
எனவே புகார் புத்தகத்தை வழங்கும்படி கண்டக்டர் மற்றும் டிரைவரிடம் சதீஷ் ரட்டன்லால் டயாமா கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் அதையும் வழங்கவில்லை. எனவே இந்த சம்பவம் தொடர்பாக ஜல்னா மாவட்டத்தில் உள்ள நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் சதீஷ் ரட்டன்லால் டயாமா உடனடியாக வழக்கு தொடர்ந்தார்.
இதில், பஸ்ஸில் செல்போன் சார்ஜிங் பாயிண்ட் மற்றும் ஏசி இருப்பதாக விளம்பரம் செய்து விட்டு அந்த வசதிகளை வழங்கவில்லை எனவும், இதனால் ஏற்பட்ட அசௌகரியம் மற்றும் மன உளைச்சலுக்காக தனக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் சதீஷ் ரட்டன்லால் டயாமா கூறியிருந்தார். இந்த மனு மீது நுகர்வோர் குறைதீர் மன்ற நீதிபதிகள் விசாரணை நடத்தினர்.
இதன்பின்பு புகார்தாரர் சதீஷ் ரட்டன்லால் டயாமாவிற்கு சம்பந்தப்பட்ட பஸ் டெப்போ 5,000 ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். 30 நாட்களுக்குள் இந்த இழப்பீட்டை வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர். நீதிபதிகளின் இந்த தீர்ப்பு பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
Note: Images used are for representational purpose only.
-
ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
-
டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
-
வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!