Just In
- 47 min ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- 1 hr ago ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- 2 hrs ago 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- 4 hrs ago கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
Don't Miss!
- News மாமியாரை ஒரே எத்து.. அலேக்கா "தூக்கி" குப்பை தொட்டியில் போட்டாச்சு.. அந்த மகராசியின் பெயர் "லட்சுமி"
- Movies டல்லடிக்கும் சினிமா வாய்ப்பு?.. அரசியலுக்கு வருகிறாரா அனுஷ்கா?.. இது என்னப்பா புதுசா இருக்கு
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
உல்லாச கப்பலின் 11வது மாடியில் இருந்து கடலில் குதித்த பயணி... காரணம் தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்
உல்லாச கப்பலின் 11வது மாடியில் இருந்து, பயணி ஒருவர் திடீரென கடலில் குதித்தார். இதற்கான காரணம் என்னவென்று தெரிந்தால் நீங்கள் கடுமையாக அதிர்ச்சியடைக்கூடும்.
உல்லாச கப்பல்களில் (Cruise Ship) பயணம் செய்யும் மோகம் பொது மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக மேற்கத்திய நாடுகளை சேர்ந்த பலர், உல்லாச கப்பல்களில் அவ்வப்போது பயணம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தை சேர்ந்தவரான நிக்கோலே நைதேவும் (Nikolay Naydev) அப்படிப்பட்ட ஒருவர்தான். உல்லாச கப்பல்களில் அடிக்கடி பயணம் செய்யும் பழக்கம் நிக்கோலே நைதேவிற்கு இருப்பதாக கூறப்படுகிறது.
இதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு, ராயல் கரீபியன் உல்லாச கப்பலில், நிக்கோலே நைதேவ் பயணம் செய்து கொண்டிருந்தார். ராயல் கரீபியன் (Royal Caribbean) என்பது உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான உல்லாச கப்பல்களில் ஒன்றாகும்.
கரீபியன் பகுதியில் உள்ள பஹாமஸ் (Bahamas) நாட்டின் தலைநகர் நசாயு (Nassau) எனும் நகரை ஒட்டியுள்ள கடலில், ராயல் கரீபியன் உல்லாச கப்பல் சென்று கொண்டிருந்தது. அப்போது நிக்கோலே நைதேவ் திடீரென கப்பலின் 11வது தளத்திற்கு சென்றார்.
பின்னர் 11வது மாடியில் இருந்து நிக்கோலே நைதேவ் திடீரென கடலில் குதித்தார். அங்கிருந்த அனைவரும் இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் எழுப்பிய அபாய குரல் காரணமாக கப்பலின் அதிகாரிகள் விரைந்து வந்தனர்.
நிக்கோலே நைதேவ் கடலில் தத்தளித்து கொண்டிருப்பதை கண்டு அவர்களும் அதிர்ச்சிக்கு உள்ளாயினர். பின்னர் நிக்கோலே நைதேவை மீட்பதற்காக, சிறிய அளவிலான படகு ஒன்றை அவர்கள் உடனடியாக அனுப்பி வைத்தனர். அந்த சிறிய படகு விரைந்து சென்று நிக்கோலே நைதேவை மீட்டது.
MOST READ: வாடிக்கையாளர் சேவையை வேற லெவலுக்கு மாற்றிய மாருதி அரேனா கார் ஷோரூம்கள்...!!
அதிர்ஷ்டவசமாக நிக்கோலே நைதேவ் உயிர் தப்பி விட்டார். என்றாலும் அவரது கழுத்து மற்றும் முதுகு தண்டு வடத்தில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. எனவே கப்பலில் இருந்த மருத்துவர்கள் உடனடியாக நிக்கோலே நைதேவுக்கு சிகிச்சை அளித்தனர்.
இதன்பின் 11வது மாடியில் இருந்து திடீரென கடலில் குதித்தது ஏன்? என்பது தொடர்பாக நிக்கோலே நைதேவிடம், கப்பல் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர் வெளியிட்ட தகவல்கள் அனைத்தும் அதிர்ச்சிகரமான ரகம்.
சம்பவம் நடைபெறுவதற்கு முந்தைய நாள் இரவு நிக்கோலே நைதேவ் அளவுக்கு அதிகமாக குடித்திருந்தார். பின்னர் காலை எழுந்த உடன், கடலில் குதிப்பது என அவர் முடிவு செய்தார். இதனை வீடியோவாக பதிவு செய்து, சமூக வலை தளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்க்க வேண்டும் என்பதே அவரது திட்டம்.
மிகவும் வித்தியாசமான ஏதேனும் ஒன்றை செய்து, அதனை வீடியோவாக எடுத்து, பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் பகிரும் கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இப்படிப்பட்ட வீடியோக்கள் வைரலாக பரவுவதால், சம்பந்தப்பட்ட நபர் வெகு வேகமாக பிரபலம் அடைந்து விடுகிறார். இப்படி சமூக வலை தளங்களில் பிரபலமாக வேண்டும் என்பதற்காகதான் உயிரை பணயம் வைத்து, கப்பலின் 11வது மாடியில் இருந்து நிக்கோலே நைதேவ் கடலில் குதித்துள்ளார்.
சம்பவம் நடைபெற்றபோது நிக்கோலே நைதேவின் நண்பர்களும் அவருடன் இருந்துள்ளனர். துணிச்சலாக கடலில் குதிக்கும்படி அவர்கள் தங்கள் பங்கிற்கு நிக்கோலே நைதேவை ஊக்கப்படுத்தியுள்ளனர். இதனால்தான் அவரும் கடலில் குதித்துள்ளார்.
தான் கடலில் குதித்த வீடியோவை நிக்கோலே நைதேவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதில், அவரது நண்பர்கள் அவரை ஊக்குவிக்கும் சம்பவங்களும் பதிவாகியுள்ளன. தற்போது உலகம் முழுக்க வைரலாக பரவி கொண்டிருக்கும் அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
இந்த வீடியோ வைரலான சூழலில், நிக்கோலே நைதேவ் இனி தங்கள் உல்லாச கப்பலில் பயணம் செய்ய ராயல் கரீபியன் நிர்வாகம் தடை விதித்துள்ளது. எனவே இனி வாழ்நாளில் ஒரு முறை கூட நிக்கோலே நைதேவ், ராயல் கரீபியன் உல்லாச கப்பலில் பயணம் செய்ய முடியாது.
இதுகுறித்து ராயல் கரீபியன் உல்லாச கப்பல் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ''இது முட்டாள்தனமான மற்றும் பொறுப்பற்ற செயல். இனி நிக்கோலே நைதேவ் எங்கள் கப்பலில் பயணம் செய்ய முடியாது. அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பது குறித்தும் பரிசீலித்து வருகிறோம்'' என்றார்.
நிக்கோலே நைதேவ் போன்றவர்களின் செயல்பாடுகள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். இத்தகைய நபர்கள் மீது சட்ட ரீதியில் கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, அவர்களை பின்பற்றுவர்களின் எண்ணிக்கை கட்டுக்குள் வரும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.
இந்த சூழலில், ஏற்கனவே குறிப்பிட்டபடி கேளிக்கை மற்றும் பொழுதுபோக்கிற்காக உல்லாச கப்பல்களில் பயணம் செய்யும் பழக்கம் பொது மக்களிடையே அதிகரித்து வருகிறது. மேற்கத்திய நாடுகள் மட்டுமின்றி, இந்தியாவிலும் இந்த கலாச்சாரம் தற்போது நன்றாக வேரூன்றி கொண்டுள்ளது.
எனவே இந்தியாவிலும் தற்போது உல்லாச கப்பல்களின் இயக்கம் தொடங்கியுள்ளது. இந்த வகையில், நமது நாட்டின் முதல் உல்லாச கப்பல் என்ற பெருமையை 'ஆங்ரியா' (Angriya) பெறுகிறது. மும்பை-கோவா இடையே, வாரத்திற்கு 4 நாட்கள் ஆங்ரியா உல்லாச கப்பல் இயக்கப்படுகிறது.
கடந்தாண்டு அக்டோபர் மாதம் 20ம் தேதி முதல், ஆங்ரியா உல்லாச கப்பல் இயங்கி கொண்டுள்ளது. இதில், மொத்தமாக 7 தளங்கள் உள்ளன. இவை அனைத்தும் சொகுசு வசதிகள் நிறைந்ததாக கட்டமைக்கப்பட்டுள்ளன.
ஆங்ரியா உல்லாச கப்பலில் இடம்பெற்றிருக்கும் சொகுசு வசதிகள் உங்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்து விடும். இதில், அங்கோரா (Ancora) மற்றும் கோரல் ஃரீப் (Coral Reef) என்ற பெயர்களில் இரண்டு ரெஸ்டாரென்ட்கள் உள்ளன.
இதுதவிர ஆங்ரியா உல்லாச கப்பலில் 6 பார்களும் இடம்பெற்றுள்ளன. இதில், மது பிரியர்கள் உற்சாகமாக மது அருந்தி கொண்டாடலாம். அத்துடன் மசாஜ் செய்து கொள்ள ஸ்பா மற்றும் நீச்சல் குளம் உள்ளிட்ட வசதிகளும் ஆங்ரியா உல்லாச கப்பலில் இடம்பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு.
ஆங்ரியா உல்லாச கப்பலில் 104 தங்கும் அறைகள் இருந்தாலும் கூட, அன்டர் வாட்டர் லெவல் (Underwater Level) லக்ஸரி அறைகள்தான் அதிக கவனம் பெற்றுள்ளன. இந்த அறைகளில் உங்கள் வாழ்க்கை துணை அல்லது நண்பர்களுடன் தங்கினால், வித்தியாசமான அனுபவம் கிடைக்கும் என்பது நிச்சயம்.
ஆங்ரியா உல்லாச கப்பல், மும்பையில் இருந்து மாலை 5 மணியளவில் புறப்பட்டு, மறுநாள் காலை 7 மணிக்கு கோவா சென்றடையும். எனவே பயணிகள் அனைவரும் கடலில் இருந்தவாறே சூரியன் அஸ்தமனத்தையும், சூரியன் உதிப்பதையும் கண்டு களிக்க முடியும்.
இவ்வளவு வசதிகள் நிறைந்துள்ளதால், ஆங்ரியா உல்லாச கப்பலில் பயணம் செய்வதற்கான டிக்கெட் விலை மிகவும் அதிகமாக இருக்கும் என நினைத்து விட வேண்டாம். இதில், பயணம் செய்வதற்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை 4,300 ரூபாய் மட்டுமே. அதிகபட்ச டிக்கெட் விலை 12,000 ரூபாய்.
இதில், பயணம் செய்ய வேண்டும் என நீங்கள் விரும்பினால், ஆங்ரியா க்ரூஸ் வெப்சைட்டில் டிக்கெட்களை புக்கிங் செய்து கொள்ளலாம். விலை ஓரளவிற்கு குறைவுதான் என்பதால், ஆங்ரியா உல்லாச கப்பலில் பயணம் செய்வதற்கான ஆர்வம் நடுத்தர வர்க்க மக்கள் மத்தியிலும் அதிகரித்து வருகிறது.
Image Courtesy: Angriya Cruises
இதனிடையே வித்தியாசமான வீடியோக்களை எடுத்து பிரபலமாக வேண்டும் என்ற எண்ணம் கொண்ட நிக்கோலே நைதேவ் போன்ற இளைஞர்கள் இந்தியாவிலும் பலர் இருக்கின்றனர். இந்த வகையில் ஆந்திர மாநிலத்தில் இளைஞர் ஒருவர் தண்டவாளத்தில் சிலிண்டரை வைத்து ரயில் மீது மோத விட்டார். அவர் சொன்ன காரணத்தை கேட்டு போலீசாரே அதிர்ந்து விட்டனர். இதுகுறித்த விரிவான தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.
ஆந்திர பிரதேச மாநிலம் சித்தூர் அருகே உள்ள செல்லூர் பகுதியை சேர்ந்தவர் கொங்காரா ராமிரெட்டி. இவர் பி.டெக் பட்டதாரி ஆவார். இவரது வீட்டிற்கு அருகே ரயில்வே தண்டவாளம் செல்கிறது. இந்த பகுதி சித்தூர் ரயில்வே ஜங்ஷன் எல்லைக்குள் வருகிறது. இந்த பகுதியை கடக்கும் லோகோமோட்டிவ் டிரைவர்கள், தண்டவாளத்தில் ஏதேனும் ஒரு பொருள் அவ்வப்போது இருப்பதாக புகார் தெரிவித்து வந்தனர்.
எனவே இது தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படை உடனடியாக விசாரணை நடத்த தொடங்கியது. ஆனால் லோகோமோட்டிவ் டிரைவர்களின் புகார் தொடர்பாக எவ்விதமான தடயமும் ரயில்வே பாதுகாப்பு படைக்கு சிக்கவில்லை. இப்படிப்பட்ட சூழலில், பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் சமீபத்தில் வீடியோ ஒன்று வைரலாக பரவ தொடங்கியது.
இந்த வீடியோ கொங்காரா ராமிரெட்டியின் வீட்டிற்கு அருகே செல்லும் தண்டவாளத்தில் எடுக்கப்பட்டிருந்தது. ரயில் வரும் நேரத்தில், தண்டவாளத்தின் ஒரு பகுதியில் மோட்டார்சைக்கிளையும், மறு பகுதியில் எல்பிஜி கேஸ் சிலிண்டரையும் வைத்து இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் ரயில் நெருங்கி வந்த உடனேயே தண்டவாளத்தில் இருந்து மோட்டார்சைக்கிள் எடுக்கப்பட்டு விட்டது.
எனினும் சிலிண்டரின் மீது ரயில் மோதியது. இதனால் சிலிண்டர் தூக்கி வீசப்பட்டது. மிகவும் வைரலாக பரவ தொடங்கிய இந்த வீடியோ, ரயில்வே பாதுகாப்பு படையின் கவனத்திற்கும் உடனடியாக சென்றது. எனவே இது தொடர்பான விசாரணையை ரயில்வே பாதுகாப்பு படை மீண்டும் முடுக்கி விட்டது. இந்த வீடியோவில் இருந்த பைக்கின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தப்பட்டது.
இதில், இந்த பைக் கொங்காரா ராமிரெட்டியின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்ததை ரயில்வே பாதுகாப்பு படை கண்டறிந்தது. எனவே கொங்காரா ராமிரெட்டியை பிடித்து ரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தினர். இதில், பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்களை கொங்காரா ராமிரெட்டி வெளியிட்டுள்ளார்.
கொங்காரா ராமிரெட்டி யூ-டியூப் சேனல் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இதில், ரயில்வே தண்டவாளங்களில் அபாயகரமான ஸ்டண்ட்களை செய்து வீடியோக்கள் பதிவேற்றப்பட்டு வந்துள்ளன. அதாவது ரயில்வே தண்டவாளத்தில் ஏதேனும் ஒரு பொருளை கொங்காரா ராமிரெட்டி வைத்து விடுவார். இதன்பின் அந்த பொருளின் மீது ரயில் மோதுவதை வீடியோவாக எடுத்து யூ-டியூப்பில் வெளியிடுவார்.
கொங்காரா ராமிரெட்டி இதுவரை 47 வீடியோக்களை யூ-டியூப்பில் பதிவேற்றியுள்ளார். இதில், 43 வீடியோக்கள் மிகவும் அபாயகரமானவையாக இருந்துள்ளன. காய்கறிகள், பழங்கள், சிக்கன் துண்டுகள், பொம்மைகள், பட்டாசுகள், சைக்கிள் செயின்கள் உள்ளிட்ட பொருட்களை ரயில்வே தண்டவாளங்களில் வைத்து அவர் வீடியோக்களை எடுத்துள்ளார். ஆனால் அந்த வீடியோக்கள் பெரிய அளவில் வைரல் ஆகவில்லை.
தற்போதைய கால கட்டத்தில் வீடியோக்கள் மூலம் அதிகப்படியான வருவாய் ஈட்ட முடிகிறது. எனவே அதிக பார்வையாளர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காகவும், வீடியோ வைரல் ஆக வேண்டும் என்பதற்காகவும் ஒரு சிலர் இணையத்தில் எந்த அளவிற்கு வேண்டுமானாலும் செல்ல தயாராக இருக்கின்றனர். இதன் விளைவுதான் கொங்காரா ராமிரெட்டி வெளியிட்ட பைக், சிலிண்டர் வீடியோ.
வீடியோ வைரல் ஆகி அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகதான் கொங்காரா ராமிரெட்டி இந்த வீடியோவை எடுத்துள்ளார். அவர் நினைத்தபடியே வீடியோ வைரல் ஆகி விட்டது என்பதோ உண்மைதான். ஆனால் அதன் விளைவாக கொங்காரா ராமிரெட்டி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். ஆம், விசாரணைக்கு பின் அவர் உடனடியாக கைது செய்யப்பட்டு விட்டார்.
ரயில்வே சட்டம் 1989ன் செக்ஸன் 153 மற்றும் 143 ஆகியவற்றின் கீழ் கொங்காரா ராமிரெட்டி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொங்காரா ராமிரெட்டி வெளியிட்ட வீடியோக்கள் தற்போது அந்த சேனலில் இருந்து நீக்கப்பட்டு விட்டன. விரைவாக புகழ்பெற வேண்டும் என்பதற்காக இது போன்ற முட்டாள்தனமான செயல்களில் இளைஞர்கள் ஈடுபடக்கூடாது என ரயில்வே பாதுகாப்பு படை எச்சரித்துள்ளது.
ஏனெனில் இது போன்ற செயல்கள் ரயில் பயணிகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்குகின்றன. கொங்காரா ராமிரெட்டி வெளியிட்ட வீடியோவில் இருந்தது ஹோண்டா சிபி ஷைன் பைக் ஆகும். ரயில் மோதுவதற்கு முன்பாக அந்த மோட்டார்சைக்கிள் அப்புறப்படுத்தப்பட்டு விட்டது. ஆனால் எல்பிஜி சிலிண்டரின் மீது ரயில் மோதியுள்ளது.
ரயில் மோதிய சிலிண்டரில் கேஸ் இருந்ததா? இல்லையா? என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால் நல்ல வேளையாக இதன் தாக்கம் பெரிய அளவில் இல்லை. இல்லாவிட்டால் சிலிண்டர் வெடித்திருக்கலாம். இது தொடர்பான வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
பொதுவாக ரயில்வே தண்டவாள பாதுகாப்பு என்பது மிகவும் கடுமையாக இருக்க வேண்டும். ஆனால் நமது நாட்டில் அவ்வாறு இருப்பதில்லை. சில சமயம் ரயில்கள் வரும் நேரத்தில் வாகனங்கள் தண்டவாளங்களில் சிக்கி கொள்ளும் சம்பவங்களும் கூட நடக்கின்றன. எனினும் அதிர்ஷ்டவசமாக ரயில் மோதுவதில் இருந்து அவை தப்பி விடுகின்றன.
அத்துடன் நேரத்தை மிச்சம் பிடிக்க வேண்டும் என்பதற்காக ஒரு சிலர் தவறான நேரத்தில் தண்டவாளங்களை கடக்கின்றனர். இதன் காரணமாகவும் சில சமயங்களில் விபத்துக்கள் நடைபெறுகின்றன. இது போன்ற செயல்களை செய்வதும், ரயில் வரும் நேரத்தில் தண்டவாளங்களில் ஏதேனும் பொருட்களை வைப்பதும் மிகவும் அபாயகரமானது.
-
6ம் மாசத்துக்கு அப்புறம் எப்பே வேணும்னாலும் இந்த காரை இந்தியாவில் எதிர்பார்க்கலாம்! சிட்ரோன் பசால்டு வெளியீடு!
-
மெழுகு சிலை மாதிரி இருக்காங்க... இவங்க அந்த படத்துல நடிச்சவங்களா... வீடியோவை கண் இமைக்காமல் பார்க்கும் இளசுகள்
-
ஊரே இந்த காரை வாங்க ஆசைப்படுது!இப்ப கையில பணம் இருந்தாலும் உடனே இதை வாங்க முடியாது!