Just In
- 53 min ago சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- 7 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 7 hrs ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 7 hrs ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி
பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளுடன் சேர்ந்து பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மிகவும் அதிகமாக உள்ளதாக வாகன ஓட்டிகள் தொடர்ச்சியாக புகார் தெரிவித்து வருகின்றனர். ஆனால் பெட்ரோல், டீசல் விலை குறைந்தபாடில்லை. இந்தியாவில் முன்பு 15 நாட்களுக்கு ஒரு முறை, அதாவது மாதம் இரு முறை பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்யும் முறைதான் பின்பற்றப்பட்டு வந்தது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப மாதம் இரு முறை பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றியமைக்கப்படும். ஆனால் இதன்பின் பெட்ரோல், டீசல் விலையை தினசரி நிர்ணயம் செய்யும் முறை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. தற்போது இந்த முறைதான் பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் இன்று காலை (ஆகஸ்ட் 20) வழக்கம் போல் கண் விழித்த உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த வாகன ஓட்டிகளுக்கு பெரும் அதிர்ச்சி காத்து கொண்டிருந்தது. ஆம், அங்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டிருந்தது. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை (Value Added Tax - VAT) உத்தரபிரதேச மாநில அரசு உயர்த்தியதே இதற்கு காரணம்.
அதாவது உத்தரபிரதேச மாநில அரசு பெட்ரோல் மீதான வாட் வரியை 26.80 சதவீதமாகவும், டீசல் மீதான வாட் வரியை 17.48 சதவீதமாகவும் உயர்த்தியுள்ளது. இதன் விளைவாக பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 2.35 ரூபாயும், டீசல் விலை ஒரு லிட்டருக்கு 92 பைசாவும் அதிரடியாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு திங்கள்கிழமை நள்ளிரவு முதல் உடனடியாக அமலுக்கு வந்தது.
உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசின் ஆட்சி நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகளுடன் சேர்த்து உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
குறைவான விலையில் கிடைப்பதால், டெல்லியை ஒட்டியுள்ள உத்தரபிரதேச மாநில நகரங்களை சேர்ந்த வாகன ஓட்டிகள் ஏராளமானோர் அங்கு சென்று எரிபொருள் நிரப்பி கொள்வதாகவும், இதனால் தங்களது தொழில் பாதிக்கப்படுவதாகவும், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கடந்த காலங்களில் புகார் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே வாட் வரியை குறைக்க வேண்டும் என உத்தரபிரதேச மாநில அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த சூழலில்தான் வாட் வரி அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த விலை உயர்விற்கு பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இதனிடையே பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என வாகன ஓட்டிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது நடந்தால் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக குறையும். ஆனால் வாகன ஓட்டிகளின் இந்த கோரிக்கை தற்போது வரை நிறைவேற்றப்படவில்லை.
-
சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
-
என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
-
கோவையில் இருந்து கேரளாவுக்கு இந்த ரயில்ல போங்க.. எக்ஸ்பீரியன்ஸ் இன்னும் செம்மையா இருக்கும்! அப்படி என்ன ரயில்?