Just In
- 1 hr ago 10,000கிமீ கடந்து குமரி வந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. நம்பி வாங்கலாம் போலிருக்கே! இதோட விலை எவ்வளவாக இருக்கும்?
- 3 hrs ago வின்ஃபாஸ்ட் நிறுவனத்திற்கு அடித்த ஜாக்பாட்! தூத்துக்குடி ஆலையை திறப்பதற்கு முன்பே விற்பனையை துவங்க வாய்ப்பு!
- 3 hrs ago கேரளாவுக்கு சென்றால் இந்த சொர்க்கத்தை மட்டும் அனுபவிக்காம வந்துடாதீங்க!! வெறும் ரூ.20இல் கிடைக்குது!
- 4 hrs ago அரண்மனைக்கு இணையான வசதி கொண்ட வாகனம்.. இதை மஹிந்திரா தயாரிக்க போகுதா! இப்பவே சந்தோஷம் தாங்கலை!
Don't Miss!
- News வாய்தா மேல் வாய்தா! நடிகை விஜயலட்சுமி ஏப்ரல் 2ல் ஆஜராக அவகாசம்.. சீமான் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி
- Education இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி பயிற்சி திட்டத்தில் பங்கேற்க ஆசையா...!!
- Sports IPL - சிஎஸ்கேவில் களமிறங்கிய வங்கதேச புலி.. நேற்று காயமடைந்த நிலையில், இன்று சென்னைக்கு வந்தார்
- Movies Prithviraj: ரஜினியை வைத்து தில்லுமுல்லு மாதிரி படம் இயக்கனும்.. பிரித்விராஜ் ஆசையை பாருங்க!
- Technology தட்டித்தூக்கும் விலை.. AMOLED டிஸ்பிளே.. 5ATM ரெசிஸ்டன்ஸ்.. 14 நாட்கள் பேக்கப்.. எந்த மாடல்?
- Finance தேர்தல் பத்திரம்: தனிநபர்கள் நன்கொடை செய்த ரூ.358.91 கோடி.. முதல் இடத்தில் யார் தெரியுமா..?
- Lifestyle 3 குழந்தைகளின் தந்தை விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு ஓடிய வினோதம்... காரணத்தை கேட்டு மயக்கம் போட்ட நீதிபதி!
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி
பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளுடன் சேர்ந்து பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மிகவும் அதிகமாக உள்ளதாக வாகன ஓட்டிகள் தொடர்ச்சியாக புகார் தெரிவித்து வருகின்றனர். ஆனால் பெட்ரோல், டீசல் விலை குறைந்தபாடில்லை. இந்தியாவில் முன்பு 15 நாட்களுக்கு ஒரு முறை, அதாவது மாதம் இரு முறை பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்யும் முறைதான் பின்பற்றப்பட்டு வந்தது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப மாதம் இரு முறை பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றியமைக்கப்படும். ஆனால் இதன்பின் பெட்ரோல், டீசல் விலையை தினசரி நிர்ணயம் செய்யும் முறை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. தற்போது இந்த முறைதான் பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் இன்று காலை (ஆகஸ்ட் 20) வழக்கம் போல் கண் விழித்த உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த வாகன ஓட்டிகளுக்கு பெரும் அதிர்ச்சி காத்து கொண்டிருந்தது. ஆம், அங்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டிருந்தது. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை (Value Added Tax - VAT) உத்தரபிரதேச மாநில அரசு உயர்த்தியதே இதற்கு காரணம்.
அதாவது உத்தரபிரதேச மாநில அரசு பெட்ரோல் மீதான வாட் வரியை 26.80 சதவீதமாகவும், டீசல் மீதான வாட் வரியை 17.48 சதவீதமாகவும் உயர்த்தியுள்ளது. இதன் விளைவாக பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 2.35 ரூபாயும், டீசல் விலை ஒரு லிட்டருக்கு 92 பைசாவும் அதிரடியாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு திங்கள்கிழமை நள்ளிரவு முதல் உடனடியாக அமலுக்கு வந்தது.
உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசின் ஆட்சி நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகளுடன் சேர்த்து உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
குறைவான விலையில் கிடைப்பதால், டெல்லியை ஒட்டியுள்ள உத்தரபிரதேச மாநில நகரங்களை சேர்ந்த வாகன ஓட்டிகள் ஏராளமானோர் அங்கு சென்று எரிபொருள் நிரப்பி கொள்வதாகவும், இதனால் தங்களது தொழில் பாதிக்கப்படுவதாகவும், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கடந்த காலங்களில் புகார் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே வாட் வரியை குறைக்க வேண்டும் என உத்தரபிரதேச மாநில அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த சூழலில்தான் வாட் வரி அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த விலை உயர்விற்கு பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இதனிடையே பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என வாகன ஓட்டிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது நடந்தால் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக குறையும். ஆனால் வாகன ஓட்டிகளின் இந்த கோரிக்கை தற்போது வரை நிறைவேற்றப்படவில்லை.