Just In
- 20 min ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 38 min ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 1 hr ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 2 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News வாரிசு அரசியலால் ஈரோடு மதிமுக எம்பி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.. ஸ்டாலின், வைகோவை சாடிய தமிழிசை
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கூட பொறுத்துக்கலாம் போல... இந்த பிஜேபிகாரங்க பேசறது சகிக்கல... அமைச்சரால் சர்ச்சை
பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக பாஜக அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
இந்தியாவில் சமீப காலமாக பெட்ரோல், டீசல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக மத்தியில் ஆளும் பாஜக அரசு மீது மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்பதற்கு முந்தைய அரசுகள் போதிய நடவடிக்கைகளை எடுக்காததுதான் பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு காரணம் என சமீபத்தில் பிரதமர் மோடி கூறியிருந்தார்.
இந்த சூழலில் பீஹார் மாநில அமைச்சரும், பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான நாராயண் பிரசாத் கூறியுள்ள கருத்துக்கள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. சாமானிய மக்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்தி வருவதால், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பாதிக்கப்பட மாட்டார்கள் என நாராயண் பிரசாத் பேசியுள்ளார்.
சாமானிய மக்கள் பெரும்பாலும் போக்குவரத்திற்கு பேருந்துகளைதான் பயன்படுத்துகின்றனர் என பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது நாராயண் பிரசாத் கூறினார். மேலும் ஒரு சிலர் மட்டுமே போக்குவரத்திற்கு தனியாக வாகனங்களை பயன்படுத்துகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார். எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சாமானிய மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று அவர் கூறினார்.
மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை மக்கள் பழக்கப்படுத்தி கொள்வார்கள் என்கிற ரீதியிலும் நாராயண் பிரசாத் பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஏற்கனவே மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தகைய பேச்சுக்கள் எரிகின்ற தீயில் எண்ணெய்யை ஊற்றுவது போல் அமைந்துள்ளது.
ஏனெனில் சாமானிய மக்களின் வீடுகளிலும் தற்போது இரு சக்கர வாகனங்கள் இருக்கின்றன. போக்குவரத்திற்கு அத்தியாவசிய தேவை இருப்பதால், சிரமப்பட்டாவது ஒரு டூவீலரை அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே வரும் சூழலில், அவர்கள் பாதிக்கப்பட மாட்டார்களா? என சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சரி, பாஜக அமைச்சர் கூற்றுப்படி சாமானிய மக்களிடம் சொந்தமாக வாகனங்களே இல்லை எனவும், அவர்கள் முழுக்க முழுக்க பொது போக்குவரத்தை மட்டுமே நம்பியுள்ளனர் எனவும் வைத்து கொள்வோம். அப்படி ஒரு வறுமையில் வாழும் மக்களை அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு பாதிக்காதா? எனவும் நெட்டிசன்கள் பதில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்விற்கு, எரிபொருள் விலை உயர்வுதான் அடிப்படை காரணம் என்பது நம் அனைவருக்குமே தெரியும். எரிபொருள் விலை உயர்வால், அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி ஆகியவற்றை கொண்டு செல்லும் சரக்கு லாரிகளின் வாடகை கட்டணம் உயர தொடங்கியுள்ளது. இதன் விளைவாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது.
சொந்தமாக வாகனம் கூட இல்லாமல், பொது போக்குவரத்தை மட்டுமே நம்பியுள்ள சாமானிய மக்களை இந்த அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு பாதிக்கும் என்பது அமைச்சருக்கு தெரியவில்லையா? எனவும் நெட்டிசன்கள் சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் பாஜகவை சேர்ந்தவர்கள், இதுபோன்று பேசுவதை தவிர்க்க வேண்டும் எனவும் நெட்டிசன்கள் அட்வைஸ் செய்துள்ளனர்.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் மீது மத்திய, மாநில அரசுகள் அதிகப்படியான கலால் வரி, வாட் வரி உள்ளிட்ட வரிகளை விதித்து வருகின்றன. பெட்ரோல், டீசலின் விலை சிகரத்தில் இருப்பதற்கு இதுவே முக்கியமான காரணமாக உள்ளது. எனவே பெட்ரோல், டீசல் மீதான வரிகளை குறைக்க வேண்டும் அல்லது அவற்றை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.
ஜிஎஸ்டி வரம்பிற்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வந்தால் விலை கணிசமாக குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இதற்கு மாநில அரசுகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பெட்ரோல், டீசல் மூலம் கிடைக்கும் வருவாயை இழக்க மாநில அரசுகள் விரும்பாது என்பதால், இந்த கோரிக்கை நிறைவேறுவது சந்தேகம்தான்.
-
இந்தியாவுக்கு எதாவது பாதிப்பா? ஒரு சின்ன மிஸ்டேக் எங்க கொண்டுவந்து நிறுத்தி இருக்கு!!
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!