Just In
- 46 min ago அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- 5 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 5 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 6 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
மும்பையில் ரூ.100ஐ தொட்டது பெட்ரோல் விலை!! சென்னையில் 1 லி பெட்ரோல் விலை எவ்வளவு தெரியுமா?
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலினால் கடந்த ஒரு வருடமாக சிறிய சிறிய இடைவெளிக்கு பிறகு தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்குகளினால் தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் அடிக்கடி மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இதன் விளைவாக நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. இதனால் ஏற்படும் வரி வருவாய் பாதிப்பை ஈடுசெய்து கொள்ள மத்திய அரசாங்கம் பெட்ரோல் & டீசல் விலைகளை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஊரடங்கு உத்தரவுகளுக்கு முன்பே தொடர்ந்து அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் உற்பத்தி பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டன. குறிப்பாக கார் & பைக்குகளை தயாரிக்கும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது விற்பனை மாடல்களின் விலைகளை உயர்த்த திட்டமிட்டன.
அதன்படி கிட்டத்தட்ட அனைத்து வாகன தயாரிப்பு நிறுவனங்களும் நடப்பாண்டில் விற்பனை மாடல்களின் விலைகளை உயர்த்திவிட்டன. ஒரு சில நிறுவனங்கள் இரண்டு, மூன்று தடவைகள் கூட விலை அதிகரிப்பு அறிவிப்புகளை வெளியிட்டதை பார்த்தோம்.
இருப்பினும் பெட்ரோல், டீசல் விலைகள் அதிகரிக்கப்படுவது நிறுத்தப்பட்ட பாடில்லை. கடந்த ஒரு வாரமாக பெட்ரோல், டீசல் விலைகள் பைசாக்களில் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகின்றன. இந்த வகையில் இன்று (மே 29) பெட்ரோலின் விலை நகரங்களை பொறுத்து 25 முதல் 26 பைசா வரையில் உயர்த்தப்பட்டுள்ளது.
அதேநேரம் டீசல் 28 முதல் 30 பைசா வரையிலான விலை அதிகரிப்பை கண்டுள்ளது. இந்த புதிய விலை உயர்வின் மூலம் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை மும்பை மாநகரில் சதத்தை கடந்துள்ளது. அங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100.19 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்தியாவிலேயே பெட்ரோல் விலையில் ரூ.100ஐ கடந்த முதல் மெட்ரோ நகரமாக மும்பை பெயர் எடுத்துள்ளது. சாதாரண நகரங்களை பொறுத்தவரையில் மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபால் ஏற்கனவே பெட்ரோல் விலையில் சதத்தை கடந்துவிட்டது.
போபாலில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.102.04 ஆகும். மும்பையில் பெட்ரோலின் விலை நேற்றே (மே 28) சதத்தை நிறைவு செய்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஏனெனில் மே 27ஆம் தேதி மும்பையில் பெட்ரோலின் விலை ரூ.100ஐ காட்டிலும் வெறும் 2 பைசாக்கள் மட்டுமே குறைவாக இருந்தது.
ஆனால் நேற்று பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. டீசலின் விலை மும்பையில் ரூ.92.17 ஆகும். மும்பை அடுத்து பெட்ரோல் விலையில் செஞ்சூரியை போட உள்ள இந்திய நகரம் எதுவென்று தற்போதைக்கு யூகிக்க முடியவில்லை.
ஏனெனில் ஒவ்வொரு நகரத்திலும் பெட்ரோல் விலை பைசாக்கள் வித்தியாசத்தில் தான் உள்ளது. மும்பைக்கு அடுத்து அதிக பெட்ரோல் விலை கொண்ட நகரங்களாக ஹைதராபாத் (ரூ.97.63), பெங்களூர் (ரூ.97.07) உள்ளன. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.95.51 ஆகவும், டீசலின் விலை ரூ.89.65 ஆகவும் உள்ளது.