Just In
- 17 min ago 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- 1 hr ago இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- 2 hrs ago சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- 3 hrs ago சிட்ரோன், ஜீப் காரை வாங்கப்போறீங்களா? இப்ப போன பணத்தை மிச்சம் பண்ணலாம்! ஏப்30க்கு பிறகு காஸ்ட்லியாகிடும்!
Don't Miss!
- Finance கோட்டக் மஹிந்திரா வங்கி-க்கு தடை.. RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
- News 20 ஆண்டு ஏக்கம்.. பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் பலே பிளான்.. பெங்களூரின் 3 தொகுதி களநிலவரம் என்ன?
- Movies அடேங்கப்பா ஒரு புடவை இத்தனை லட்சமா?.. கீர்த்தி சுரேஷ் அட்ராசிட்டியை பார்த்தீங்களா
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Lifestyle உங்கள் குழந்தைகள் எடை குறைவாக உள்ளதா? இந்த 5 பொருட்களை உணவாக கொடுங்கள்.. பலன் கிடைக்கும்..!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
ரூ.51 கோடி மதிப்பிலான சூப்பர் கார், பைக் புல்டோசர் ஏற்றி அழிப்பு.. வருமானம் பார்க்க விரும்பாத அதிபர்
ரூ.51 கோடி மதிப்பிலான சூப்பர் கார், பைக் ஆகியவை புல்டோசர் ஏற்றி அழிக்கப்பட்டது. இந்த வீடியோ காட்சி, சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
51 கோடி ரூபாய் மதிப்பிலான சூப்பர் கார், பைக் ஆகியவை புல்டோசர் ஏற்றி அழிக்கப்பட்டது. இந்த வீடியோ காட்சி, சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட், அடிக்கடி ஏதேனும் சர்ச்சைகளில் சிக்கி கொள்பவர். இவரது பேச்சுக்கள் எல்லாம் பரபரப்பை கிளப்புவதாகவே இருக்கும். அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, ஐநா சபை தலைவர் ஆகியோரை மிக கடுமையான வார்த்தைகளால், ரோட்ரிகோ டியுடெர்ட் விமர்சித்துள்ளார்.
இந்த சூழலில், இந்திய மதிப்பில் சுமார் 40 கோடி ரூபாய் மதிப்பிலான 68 வாகனங்களை, பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் சமீபத்தில் அழித்துள்ளார். இதில், லம்போர்கினி, மஸ்டங், போர்ஸே உள்ளிட்ட சூப்பர் கார்களும், விலை உயர்ந்த பைக்குகளும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
விலை உயர்ந்த வாகனங்கள் எல்லாம், புல்டோசர் ஏற்றி நசுக்கி அழிக்கப்பட்டன. அதனை பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் மற்றும் அந்நாட்டின் உயரதிகாரிகளும் அமர்ந்து பார்த்து கொண்டிருந்தனர். அந்த வீடியோ காட்சி, தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் தனது பரபரப்பான பேச்சுக்கள் மூலமாக அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி கொள்பவர் என்றாலும் கூட, போதை பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக மிக மிக கடுமையான நடவடிக்கைகளை தொடர்ச்சியாக எடுத்து வருகிறார்.
இதன் ஒரு பகுதியாகதான் தற்போது 68 வாகனங்களை அழித்துள்ளார். இதில், சில வாகனங்கள் போதை பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டவை. சில வாகனங்கள் வெளிநாடுகளில் இருந்து சட்ட விரோதமாக இறக்குமதி செய்யப்பட்டவை. விலை உயர்ந்த வாகனங்கள் அழிக்கப்படும் வீடியோவை கீழே காணலாம்.
குற்றச்செயல்களை அரங்கேற்றுவதற்காக பயன்படுத்தப்படும் வாகனங்கள், பறிமுதல் செய்யப்பட்டவுடன் பொதுவாக ஏலம்தான் விடப்படும். அதன்மூலம் காவல் துறைக்கு நிதி திரட்டப்படும். ஆனால் பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் அவ்வாறு செய்வது இல்லை.
ஏனெனில் விலை உயர்ந்த வாகனங்களை கூட ஒட்டுமொத்தமாக அழிப்பதன் மூலம், போதை பொருள் கடத்தல்காரர்களுக்கும், அவர்களது சட்ட விரோதமான செயல்பாடுகளுக்கும் கடுமையான எச்சரிக்கையை பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் தொடர்ச்சியாக விடுத்து வருகிறார்.
போதை பொருள் கடத்தியதாகவும், வெளிநாடுகளில் இருந்து சட்ட விரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாகவும் பறிமுதல் செய்யப்பட்ட மிகவும் விலை உயர்ந்த வாகனங்களை எல்லாம், பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் புல்டோசர் ஏற்றி அழிப்பது இது முதல் முறை அல்ல.
இந்திய மதிப்பில் சுமார் 4 கோடி ரூபாய் மதிப்பிலான பைக்குகளை கடந்த சில மாதங்களுக்கு முன், பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் அழித்திருந்தார். அதனை தொடர்ந்து சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான சூப்பர் கார்கள், கடந்த பிப்ரவரி மாதம் புல்டோசர் ஏற்றி அழிக்கப்பட்டது.
போதை பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாகவும், சட்ட விரோதமாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகவும் எழுந்த புகார் அடிப்படையில் இந்த வாகனங்கள் அழிக்கப்பட்டன. இவ்வாறு தொடர்ச்சியாக விலையுயர்ந்த வாகனங்கள் அழிக்கப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விலை உயர்ந்த வாகனங்களை அழித்து கடுமையான நடவடிக்கை எடுத்தாலும், ரோட்ரிகோ டியுடெர்ட் மோட்டார் சைக்கிள் ஆர்வலர் என்பது குறிப்பிடத்தக்கது. மோட்டார் சைக்கிள்கள் என்றால் அவருக்கு கொள்ளை பிரியம். ஒரு முறை ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள் புல்டோசர் ஏற்றி அழிக்கப்பட்டது.
அப்போது தன் மனம் துடிதுடித்ததாக ரோட்ரிகோ டியுடெர்ட் குறிப்பிட்டுள்ளார். ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள் மீது புல்டோசர் ஏறியபோது, எனது கழுத்து நசுங்குவதை போன்ற உணர்வு ஏற்பட்டது என ரோட்ரிகோ டியுடெர்ட் மனம் வருந்தி தெரிவித்தார்.
எனினும் வாகனங்களை அழிப்பது ஏன் என்ற கேள்வியை ரோட்ரிகோ டியுடெர்ட்டிடம் கேட்டபோது ''முதலீடு செய்வதற்கும், தொழில் செய்வதற்கும் ஏற்ற இடம் பிலிப்பைன்ஸ் என்பதை உலகிற்கு காட்ட வேண்டியுள்ளது. அதனால்தான் நான் இதை செய்து வருகிறேன்'' என தெரிவித்தார்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்
-
இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!
-
சென்னை- கொல்லம் வந்தே பாரத் ரயில் திட்டம் தாமதம்! கேரள அரசு செஞ்ச தப்பு தான் காரணம்!தமிழ்நாடு இதுல சூப்பர்!
-
வெளிநாட்டுகாரன் எல்லாம் உஷாராகிட்டான் ! இந்த கம்பெனி வண்டியோட ஏற்றுமதி படுத்துக்கிச்சு!