குடிபோதையில் விமானத்தை ஓட்ட முயன்ற பைலட், அதிகாரிகள் சுதாரித்தால் பெரும் விபத்து தவிர்ப்பு..!

டில்லியில் கடந்த 11ம் தேதியில் டில்லியில் இருந்து லண்டன் செல்லும் விமானம் ஒன்றை ஓட்டுதற்காக பணி ஒதுக்கப்பட்ட விமானி குடிபோதையில் விமானம் ஓட்ட வந்துள்ளார். அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் அது தெரியவந்

டில்லியில் கடந்த 11ம் தேதியில் டில்லியில் இருந்து லண்டன் செல்லும் விமானம் ஒன்றை ஓட்டுதற்காக பணி ஒதுக்கப்பட்ட விமானி குடிபோதையில் விமானம் ஓட்ட வந்துள்ளார். அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் அது தெரியவந்ததால் அவருக்கு பதிலாக வேறு ஒரு பைலட் கொண்டு விமானம் இயக்கப்பட்டது.

குடிபோதையில் விமானத்தை ஓட்ட முயன்ற பைலட், அதிகாரிகள் சுதாரித்தால் பெரும் விபத்து தவிர்ப்பு..!

கடந்த 11ம் தேதி பகலில் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது டில்லி விமான நிலையம். தினமும் நூற்றுக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் வந்து செல்லும் விமான நிலையம் என்பதாலும், நாட்டின் தலைநகரில் உள்ள விமான நிலையம் என்பதாலும் அதிக பாதுகாப்புகளுடன் உள்ள விமான நிலையமாக இது உள்ளது.

குடிபோதையில் விமானத்தை ஓட்ட முயன்ற பைலட், அதிகாரிகள் சுதாரித்தால் பெரும் விபத்து தவிர்ப்பு..!

இங்கிருந்து உலகில் பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் தினமும் பறந்து வருகின்றன. நாட்டின் பல முக்கிய தலைவர்களும், சில வெளிநாட்டு தலைவர்களும் இந்த விமான நிலையத்தைதான் அதிகம் பயன்படுத்துகின்றனர்.

குடிபோதையில் விமானத்தை ஓட்ட முயன்ற பைலட், அதிகாரிகள் சுதாரித்தால் பெரும் விபத்து தவிர்ப்பு..!

கடந்த 11ம் தேதியன்று பரபரப்பாக விமான நிலையம் இயங்கிய சூழ்நிலையில் மதியம் 2.45 மணிக்கு டில்லியில் இருந்து லண்டன் நோக்கி ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட தயார் செய்யப்பட்டு வந்தது.

குடிபோதையில் விமானத்தை ஓட்ட முயன்ற பைலட், அதிகாரிகள் சுதாரித்தால் பெரும் விபத்து தவிர்ப்பு..!

அந்த விமானத்தில் பயணிக்க கூடிய பயணிகளும் ஒவ்வொருவராக விமான நிலையத்திற்கு வந்து தங்களது சோதனைகள், இமிகிரேஷன் பிராஸஸ்களை முடித்துக்கொண்டு விமானத்தில் ஏறுவதற்கு தயாராகி கொண்டிருந்தனர்.

குடிபோதையில் விமானத்தை ஓட்ட முயன்ற பைலட், அதிகாரிகள் சுதாரித்தால் பெரும் விபத்து தவிர்ப்பு..!

அதே நேரத்தில் விமானத்தை இயக்குவதற்கான விமானிக்கான சோதனையும் நடந்தது. இந்த விமானத்தை இயக்குவதற்காக அரவிந்த் கத்பாலியா என்பவருக்கு பணி ஒதுக்கப்பட்டிருந்தது.

குடிபோதையில் விமானத்தை ஓட்ட முயன்ற பைலட், அதிகாரிகள் சுதாரித்தால் பெரும் விபத்து தவிர்ப்பு..!

வழக்கமாக விமானத்தில் பயணத்தை துவங்கும் முன் விமானிகள் மது அருந்தியிருக்கிறார்களா? என்று சோதனை செய்யப்படும். அவ்வாறு அரவிந்திற்கும் செய்யப்பட்டது. அப்பொழுது அவர் மது அருந்தியிருப்பதாக முடிவுகள் வெளியானது.

குடிபோதையில் விமானத்தை ஓட்ட முயன்ற பைலட், அதிகாரிகள் சுதாரித்தால் பெரும் விபத்து தவிர்ப்பு..!

அதனால் அதிகாரிகள் குழப்பமடைந்தனர். மீண்டும் அவருக்கு அந்த சோதனை நிகழ்த்தப்பட்டது. அப்பொழுதும் அதே போன்ற முடிவுகள் வந்ததால் அவர் மது அருந்தியிருப்பது உறுதியானது. அவரும் மது அருந்தியதை ஒப்பு கொண்டார்.

குடிபோதையில் விமானத்தை ஓட்ட முயன்ற பைலட், அதிகாரிகள் சுதாரித்தால் பெரும் விபத்து தவிர்ப்பு..!

பலர் பயணிக்கும் நீண்ட தூரம் செல்லும் விமானத்தை இயக்கும் விமானி மது அருந்தி விட்டு விமானத்தை இயக்க வந்தது அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

குடிபோதையில் விமானத்தை ஓட்ட முயன்ற பைலட், அதிகாரிகள் சுதாரித்தால் பெரும் விபத்து தவிர்ப்பு..!

இதையடுத்து அந்த விமானிக்கு பதிலாக வேறு ஒரு விமானியை கொண்டு லண்டன் செல்லும் விமானம் இயக்கப்பட்டது. இதனால் விமானம் புறப்படுவதற்கு சிறிது காலதாமதம் ஆனது.

குடிபோதையில் விமானத்தை ஓட்ட முயன்ற பைலட், அதிகாரிகள் சுதாரித்தால் பெரும் விபத்து தவிர்ப்பு..!

மேலும் அவரது லைசன்ஸை தற்காலிகமாக விமான பாதுகாப்பு அதிகாரிகள் சஸ்பென்ட் செய்தனர்.

குடிபோதையில் விமானத்தை ஓட்ட முயன்ற பைலட், அதிகாரிகள் சுதாரித்தால் பெரும் விபத்து தவிர்ப்பு..!

குடிபோதையில் விமானம் ஓட்ட வந்த பைலட் அரவிந்த் இதே போன்று கடந்த 2017ம் ஆண்டும் ஒரு முறை இந்த சர்ச்சையில் சிக்கினார். தற்போது இரண்டாவது முறையாக அவர் இதே போல சிக்கியுள்ளார்.

குடிபோதையில் விமானத்தை ஓட்ட முயன்ற பைலட், அதிகாரிகள் சுதாரித்தால் பெரும் விபத்து தவிர்ப்பு..!

அப்பொழுது அவர் டில்லியில் இருந்து பெங்களூரு செல்லும் விமானத்தில் மது குடித்துள்ளாரா? என்ற சோதனையை செய்யாமலேயே அவர் விமானத்தை இயக்கி சென்றதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த விமானத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் பயணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற செய்திகளை உடனுக்குடன் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்..!

குடிபோதையில் விமானத்தை ஓட்ட முயன்ற பைலட், அதிகாரிகள் சுதாரித்தால் பெரும் விபத்து தவிர்ப்பு..!

குடித்து விட்டு கார், பைக்குகளே ஓட்டக்கூடாது என அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இரண்டாவது முறையாக ஒரு பைலட் குடிபோதையில் விமானம் ஓட்டிய சர்ச்சையில் சிக்கியுள்ளது பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட்
English summary
Pilot failed alcohol test before getting into flight in Delhi Airport. Read in Tamil
Story first published: Tuesday, November 13, 2018, 18:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X